Cricket
உலகக் கோப்பையை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன்.. Hats Off ஹர்திக் – ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, டி20 உலகக் கோப்பையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் பேசிய ரோகித் சர்மா, வீரர்களுடன் இணைந்து நாட்டிற்காக விளையாடினோம். இந்த கோப்பை ஒட்டுமொத்த நாட்டிற்கானது. 11 ஆண்டுகள் இதற்காக காத்திருந்த எங்களது ரசிகர்களுக்கு இதனை அர்ப்பணிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மும்பை எப்போதும் ஏமாற்றாது. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அணியின் சார்பாக நாங்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உள்ளது.
ஹர்திக் எங்களுக்காக கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரை அப்படி வீசியதற்கு அவருக்கு ஹாட்ஸ் ஆஃப். எத்தனை ரன்கள் வேண்டும் என்பதை கடந்து, அந்த ஓவரை வீசுவதில் அதிக அழுத்தம் இருக்கும். ஆனால் அவருக்கு ஹாட்ஸ் ஆஃப், என்று தெரிவித்தார்.
ரோகித் சர்மா இவ்வாறு கூறியதும், மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ஹர்திக் பெயரை உரக்க கூறி ஆர்ப்பரித்தனர். இதை கண்ட ஹர்திக் பாண்டியா எழுந்து நின்று அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து அமர்ந்தார்.
முன்னதாக, பார்படோஸில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்திய அணி வீரர்கள் நேற்று காலை தான் டெல்லி வந்தனர். டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதைத் தொடர்ந்து டெல்லியில் மும்பை வந்த வீரர்கள் மெரைன் டிரைவில் திறந்தவெளி வாகனத்தில் நகர்வலம் வந்தனர்.
Cricket
WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் அம்பயர் எடுத்த முடிவு இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரை போட்டி அம்பயர் மற்றும் மூன்றாம் நடுவருடன் வாக்குவாதம் செய்ய வைத்தது.
போட்டியில் நியூசிலாந்து அணி பேட் செய்த போது, சரியாக 14 ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீராங்கனை கெர், அதனை லாங்-ஆஃப்-க்கு அடித்துவிட்டு இரண்டு ரன்களை ஓட முயற்சித்தார். அப்போது, இரண்டாவது ரன் ஓடும் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கைக்கு பந்து முன்கூட்டியே கிடைக்க, அவர் அதனை ஸ்டம்பிங் செய்துவிட்டார்.
தான் அவுட் ஆனதை உணர்ந்த கெர், களத்தை விட்டு வெளியேற துவங்கினார். அதுவரை அமைதி காத்த அம்பயர், கெர் அவுட் ஆனதாக நினைத்து வெளியேறிக் கொண்டிருந்த போது, அவரை மீண்டும் உள்ளே அழைத்ததோடு, குறிப்பிட்ட பந்து ‘டெட் பால்’ என்று அறிவித்தார். விக்கெட் என உணர்ந்து வெளியேறிய வீராங்கனையை, அம்பயர் டெட் பால் விதியை கூறி மீண்டும் களத்திற்குள் அழைத்த சம்பவம் தான் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் தலைமை பயிற்சியாளரை வாக்குவாதம் செய்ய வைத்தது.
இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. விதிகளின்படியே அம்பயர் முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. ஐ.சி.சி. விதி 20-இன் கீழ் வரும் கிளாஸ் 20.1-இல் “பந்துவீச்சு அம்பயரை பொருத்தவரை ஃபீல்டிங் பக்கமும், விக்கெட்டில் உள்ள இரு பேட்டர்களும் விளையாட்டை நிறுத்துவதை தெளிவாக தெரிந்தால், பந்து ‘டெட் பால்’-ஆக கருதப்படும்,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆனாலும், இந்த விவகாரத்தில் இரு அணி வீராங்கனைகளும் விளையாட்டை நிறுத்த முற்படவில்லை. மாறாக நியூசிலாந்து வீராங்கனை இரண்டாவது ரன் ஓட முற்படுகிறார், அப்போது இந்திய வீராங்கனை ஸ்டம்பிங் செய்துள்ளார்.
ஐ.சி.சி. விதி 20.6-இன் கீழ் “ஒருமுறை டெட் பால் என்று அறிவிக்கப்பட்டால், அந்த முடிவை மாற்றவோ, மீண்டும் அந்த பந்தை வீசச் செய்யவோ முடியாது,” என கூறுகிறது. ஐசிசி விதியின் கீழ் டெட் பால் என அறிவிக்கப்பட்ட முடிவை மீண்டும் மாற்ற முடியாது என்ற விதியை அம்பயர்கள் பின்பற்றியிருப்பார்கள் என்றே தெரிகிறது.
Cricket
WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்யது. இதனால் முதலில் பேட்டிங் ஆடி வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 17 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. விக்கெட் இழப்பின்றி 119 ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியின் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்கா அணி பேட் செய்த போது ஏற்பட்ட சம்பவத்தால் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை வந்த வேகத்தில் களத்தை விட்டு வெளியேறும் சூழல் உருவானது.
வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு இரண்டாவது ஓவரில் பேட் செய்த வொல்வார்ட், வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்டார். குறிப்பிட்ட பந்தை வொல்வார்ட் நேரில் ஓங்கி அடிக்க, அதனை பிடிக்க ஜேம்ஸ் முற்பட்டார். எனினும், பந்து ஜேம்ஸ்-இன் கையில் பட்டு நேரடியாக அவரது தாடையில் வேகமாக உரசியது.
இதில் நிலை தடுமாறிய ஜேம்ஸ் சட்டென தனது முகத்தை திருப்பிக் கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனே களத்திற்குள் வந்த பிசியோ ஜேம்ஸ்-க்கு முதலுதவி வழங்கினார். சிறிது நேரம் சிகிச்சை வழங்கிய நிலையில், பிசியோ ஜேம்ஸ்-ஐ களத்தில் இருந்து அழைத்துச் சென்றுவிட்டார். அந்தப் போட்டியில் தனது முதல் ஓவரை வீசத் தொடங்கிய ஜேம்ஸ் அதனை முடிக்காமலேயே களத்தில் இருந்து வெளியேறினார். நேற்றைய போட்டி முடியும் வரையில் ஜேம்ஸ் மீண்டும் களத்திற்குள் வரவேயில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சேசிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வெற்றி இலக்கை, 13 பந்துகள் மீதம் இருந்த நிலையில் எட்டியது. இதன் மூலம் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
Cricket
INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி குவாலியரில் வருகிற 6 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டி நடத்துவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. வங்கதேசம் நாட்டில் இந்துக்களுக்கு எதிரான அத்துமீறலை கண்டித்து வலது சாரி அமைப்புகள் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்கள் தங்கியுள்ள தங்கும் விடுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
மேலும் போட்டி நாளன்று பாதுகாப்பு அதிகாரிகள் மதியம் 2 மணி முதல் பாதுகாப்பு பணிகளை துவங்கவுள்ளனர். இவர்கள் அன்றிரவு ரசிகர்கள் வீட்டுக்கு செல்லும் வரை பாதுகாப்பு பணியை தொடர இருக்கின்றனர். முன்னதாக போட்டி நடைபெறும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை போராட்டங்கள் மற்றும் மோதலை ஏற்படுத்தும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டு இருந்தார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மாதவ்ராவ் ஸ்கிந்தியா சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி அன்றிரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது.
முன்னதாக இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை, இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியிருந்தது. இதே நிலையை டி20 தொடரிலும் தொடர இந்திய அணி திட்டமிட்டு வருகிறது. இதேபோன்று டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேசம் அணி டி20 தொடரிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பி்ல் களமறங்குகிறது.
Cricket
WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் அரங்கேறிய அநீதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டதோடு, இந்திய கேப்டன், தலைமை பயிற்சியாளர் மூன்றாம் நடுவரிடம் வாக்குவாதம் செய்யும் அளவுக்கு கைமீறி சென்றது. நேற்றைய போட்டியின் போது நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. சரியாக 14 ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீராங்கனை கெர், அதனை லாங்-ஆஃப்-க்கு அடித்துவிட்டு இரண்டு ரன்களை ஓட முயற்சித்தார்.
அப்போது, இரண்டாவது ரன் ஓடும் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கைக்கு பந்து முன்கூட்டியே கிடைக்க, அவர் அதனை ஸ்டம்பிங் செய்துவிட்டார். தான் அவுட் ஆனதை உணர்ந்த கெர், களத்தை விட்டு வெளியேற துவங்கினார். அதுவரை அமைதி காத்த அம்பயர், கெர் அவுட் ஆனதாக நினைத்து வெளியேறிக் கொண்டிருந்த போது, அவரை மீண்டும் உள்ளே அழைத்ததோடு, குறிப்பிட்ட பந்து ‘டெட் பால்’ என்று அறிவித்தார்.
அம்பயரின் இந்த செயலைக் கண்டு கோபமுற்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மறுப்பக்கம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அமுல் மஸ்முதார் மூன்றாம் நடுவரிடம் இந்த சம்பவம் குறித்த பேசத்துவங்கினார். இவரோடு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
இதனால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு, மீண்டும் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 4 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. அடுத்து பேட் செய்ய வந்த இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்களை மட்டும் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி சர்ச்சையில் சிக்கியது, தோல்வியை தழுவியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Cricket
மொத்தமா திருடிட்டாங்க.. இன்ஸடாவில் புலம்பி தள்ளிய ஆன்ட்ரே ரஸல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆன்ட்ரே ரசல். இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ‘டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்’ அணிக்காக விளையாடி வருகிறார். 2024 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் போட்டி ஒன்றில் திருடப்பட்ட உணர்வு ஏற்பட்டதாக ஆன்ட்ரே ரசல் மன வருத்தம் தெரிவித்துள்ளார்.
பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் இருந்த மின்விளக்கு சரியாக இயங்காமல் போனது. இதனால், போட்டி சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் துவங்கியது. போட்டி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டி.எல்.எஸ். விதிப்படி எதிரணிக்கு வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டேவிட் மில்லரின் அதிரடி அரைசதம் காரணமாக பார்படோஸ் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டியில் பார்படோஸ் ராயல்ஸ் அணி பேட் செய்து கொண்டிருந்த போது சரியாக 19.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை குவித்து இருந்த போது மைதானத்தின் மின்விளக்குகள் செயல்படாமல் போனது. இதைத் தொடர்ந்து பத்து நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் துவங்கியது.
அப்போது ஐந்து ஓவர் போட்டியில் ராயல்ஸ் அணி வெற்றி பெற 60 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை துரத்தும் போது டேவிட் மில்லர் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இது குறித்து கோபமுற்ற ஆன்ட்ரே ரசல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இணையத்திற்கு வந்து எனது கருத்தை வெளிப்படுத்தக்கூடிய நபர் நான் இல்லை, ஆனால் இந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரை பொருத்தவரை நான் திருடப்பட்டதாக உணர்கிறேன். அந்த சூழல்…, சரியாக அந்த நேரத்தில் மின் விளக்குகளில் பிரச்சினை ஏற்பட்டது.. அதன்பிறகு 30 பந்துகளில் 60 ரன்கள் எனும் இலக்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய… ஆம் ஆன்ட்ரே ரசல் சரி என்று கூறியது சரி தான்.. … ஆனால் இது உண்மையான …,” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Cricket1 day ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
-
latest news21 hours ago
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…
-
latest news19 hours ago
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…
-
latest news23 hours ago
வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…
-
Cricket1 day ago
மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்
-
latest news23 hours ago
பவன் கல்யாண் உதயநிதி இடையே உரசல்…சனாதனத்தை பற்றிய பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…
-
latest news22 hours ago
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…