இருந்தாலும் இவ்வளவு கோபம் ஆகாது… மாணவனின் பல்லை… ஆசிரியர் செய்த கொடூர சம்பவம்…!

0
35

10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தினால் ஆசிரியர் கொடூரமாக தாக்கி அந்த சிறுவனின் பல் உடைத்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள தனியார் பள்ளியில் விடுமுறை முடிந்து மாணவன் பள்ளிக்கு வந்திருக்கின்றார். அப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இடம் விடுமுறையில் செய்ய வேண்டிய வீட்டுப் பாடங்களை முடித்து விட்டீர்களா? என்று அறிவியல் ஆசிரியரான முகமது ஆசிப் கேட்டிருக்கின்றார். அப்போது இந்த சிறுவன் சில தனிப்பட்ட காரணத்தால் தன்னால் வீட்டு பாடத்தை எழுதி முடிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

இதனால் கோபமடைந்த ஆசிரியர் அந்த சிறுவனை கட்டையால் தாக்கியிருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் சிறுவன் வாய் மற்றும் முகத்தில் பலத்த காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றான். சிறுவன் மயங்கி விழுந்ததும் ஆசிரியர் முகமது ஆசிப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து வகுப்பில் இருந்த மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள் சிறுவனை வீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆசிரியர் முகமது ஆசிப்பை கைது செய்து இருக்கிறார்கள்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here