எனக்கு ஆம்பள புள்ளதா வேணும்… இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த கொடூர தந்தை…!

0
51

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக இரட்டைப் பெண் குழந்தைகளை தந்தை கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

டெல்லி சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த நீரஜ் சோலாங்கி கடந்த சில வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும். அப்போதுதான் தனது சொத்துக்களை நிர்வகிக்க முடியும் என்று நீரஜ் உறுதியாக இருந்திருக்கின்றார். அவரின் மனைவி பூஜா கர்ப்பமாக இருக்கின்றார்.

கடந்த மே 30ஆம் தேதி அவருக்கு அரியானா மாநிலம் ரோட்டகில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலும் ஆத்திரமும் அடைந்திருக்கின்றார் நீரஜ். கடந்த மாதம் மூன்றாம் தேதி பிறந்து சில நாட்களான இரண்டு பெண் குழந்தைகளின் சடலங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக நாம் ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று குழந்தைகளை தோண்டி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தைகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகளின் உடலை தோண்டிய தகவல் வெளியான சமயத்தில் நீரஜ் தலைமறைவானார்.

ஒரு மாதத்திற்கு மேலாக அவர் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் இரண்டு பெண் குழந்தைகளையும் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here