india
ஆர்.எஸ்.எஸ்.க்கு சாதகமாக செயல்படும் மோடி?…கடும் கண்டனம் சொன்ன எம்.பி…
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது என்ற தடை விலக்கப்பட்டிருப்பதற்கு தமிழக எம்.பி. வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேசப்பிதா காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வலது சாரி இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.க்கு சர்தார் வல்லபாய் பட்டேல் தடை விதித்தார். நன்னடத்தியின் காரணமாக அந்த தடை விலக்கப்பட்டது.
அதன் பின்னர் 1966ம் ஆண்டு பசுக்கொலைகளுக்கு எதிராக தீவரமான போராட்டங்களை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. போராட்டத்தின் உச்சம் நாடாளுமன்றம் வரை சென்றது. இதனால் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது மீண்டும் தடை உத்தரவை பிறப்பித்தார்.
அதோடு மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது, அமைப்பின் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் தடை பிறப்பிருந்தார்.
இந்நிலையில் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பதவி ஏற்றுள்ள பாஜக அரசு இந்த தடையை தற்போது நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கு மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இந்த கண்டன அறிக்கையில் சாவர்கர் பிறந்த தினத்தன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த மோடி அரசு, மத்திய அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுப்பும் இந்த உத்தரவிற்கு எனது கடுமையான கண்டனம் என குறிப்பிட்டுள்ளார்.
மோடி மீது அதிருப்தியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு இருப்பதால் அவர்களை சமாதனப்படுத்தும் விதமாகத் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என எதிர்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
Cricket
இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் எதிர்த்து விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி.
டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் வைத்து இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்தது. ஆல்-ரவுண்டர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான பங்களிப்பினால் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி.
துவக்கத்தில் தடுமாறினாலும் நேரம் செல்லச் செல்ல தனது ஆதிக்கத்தை அதிகரித்தது. இந்திய பவுலர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாரி இறுதியில் சரண்டரானது பங்களாதேஷ். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. டாஸ் போடுவதில் தாம்தம் ஏற்பட்ட நிலையில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மூன்று பேர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தனது பேட்டிங்கை தடுமாற்றத்துடனே துவங்கியது வங்கதேசம்.
இருபத்தி ஆறு ரன்களை எடுத்திருந்த நிலையில் தனது முதல் விக்கெட்டை இழந்தது அந்த அணி, இருபத்தி ஒன்பது மற்றும் என்பது ரன் கள் எடுத்திருந்த நிலையில் முறையே தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. இந்திய அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்-ரவுண்டர் அஷ்வின் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.
முப்பத்தி ஐந்து ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் வங்கதேச் அணி நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்றைய ஆட்டம் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான நாளைய தினத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.
india
திண்டுக்கல் நிறுவனம் மீது புகார்..திருப்பதி லட்டு விவகாரத்தில் திருப்பம்…
திருப்பதி கோவில் பிரசாத லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை நாட்டையே உலுக்கியுள்ளது. திரைப்பட விழா ஒன்றில் லட்டு குறித்து பேசிய நடிகர் கார்த்தியை ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் கண்டிருத்திருந்த நிலையில் தனது பேச்சு குறித்து மன்னிப்பு கோரியிருந்தார் கார்த்தி.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய பொய்கள் மூலம் திருப்பதி கோவிலுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்காக மாநிலம் முழுவதும் வருகிற 28ம் தேதி பூஜை நடத்தப்பட உள்ளதாக ஒய்எஸ்ஆர் கட்சி சார்பாக நடத்தப்படும் என ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக திண்டுக்கல்லை சேர்ந்த நெய் விநியோகிக்கும் ஏ.ஆர். நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற பத்து லட்சம் கிலோ நெய் இந்த நிறுவனத்தின் மூலம் லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான அதிகாரி கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வை புண்படுத்தும் விதமாகவும், உடல் நலக் கோளாறை விளைவிக்கும் விதமாகவும், மத்திய அரசின் அங்கீகாரமற்ற பரிசோதனை கூடத்தின் அறிக்கையை ஏற்று இந்த கொள்முதல் செய்யப்பட்டதாக தேவஸ்தானம் சார்பிலான மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு கிலோ நெய்யை முன்னூற்றி பத்தொன்பது ரூபாய்க்கு தருவதாக கூறி, நான்கு டேங்கரின் மூலம் நெய் சப்ளை செய்யப்பட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு தொடர்பான விவகாரத்தில் குண்டூர் சரக ஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஆந்திர அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புகார் அந்த குழுவிற்கு மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
திருப்பதி கோவிலுக்கு நான்கு நிறுவனங்களலிருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டு வரப்பட்டதாகவும், அதிலும் கலப்படம் கடந்த நெய்யை திண்டுக்கல்லை சார்ந்த நிறுவனத்தின் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
cinema
அறிவுரை சொன்ன ஆந்திர துணை முதல்வர்…மன்னிப்பு கேட்ட கார்த்தி…
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் திருப்பதி பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. திரும்பும் திசை எல்லாம் திருப்பதி கோவில் லட்டு பற்றிய பேச்சுக்கள் இருக்கும் நிலையாகி விட்ட நேரத்தில் திரைப்பட விழா ஒன்றில் நடிகர் கார்த்தி பேசியதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண்.
சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள “மெய்யழகன்” திரைப்படம் இம்மாதம் இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோ நிகழ்ச்சி ஆந்திராவில் நடக்க, அதில் படத்தின் நாயகனான கார்த்தி பங்கேற்றார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா? என கேட்க, அது உணர்வுப்பூர்வமான விஷயம், லட்டு பற்றி பேச வேண்டாம் என கார்த்தி கூறியிருந்தார்.
கார்த்தியின் இந்த பேச்சிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், சினிமா நிகழ்ச்சியில் லட்டுவை வைத்து நகைச்சுவை செய்யக்கூடாது என தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். சனாதன தர்மம் குறித்து பேசும் போது நூறு முறை யோசித்து விட்டு பேச வேண்டும் என சொல்லியிருந்தார்.
இந்நிலையில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் கார்த்தி. அதோடு வெங்கடேச பெருமானின் பக்தன் என்ற முறையில் நமது பண்பாட்டின் மீது பிடிப்புடன் இருந்து வருவதாகவும் தனது சார்பான விளக்கத்தை சொல்லியிருக்கிறார் கார்த்தி.
india
சாதி வாரி கணக்கெடுப்பு தேவை…பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ள ராமதாஸ்…
நாடு முழுவதும் அடுத்த மாதங்களில் மேற்கொள்ளப் படவிருக்கும் 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக நீதி காக்கப்பட இந்த ரீதியான கணக்கெடுப்பு தேவை எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார், அந்த கடிதத்தில் இந்தியா அனைத்து துறைகளிலும் உலக நாடுகளுடன் போட்டிபோட்டுக் கொண்டு முன்னேறி வருகிறது என்பதில் எந்தவித ஐயத்திற்கும் இடமில்லை, அதே நேரத்தில் சமூக நீதியைக் காப்பதில் பல்லாண்டுகளாக போடப்பட்டு வரும் முட்டுக்கட்டைகளை அகற்றுவது மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அளவிலும், மாநில அலவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும் , உச்சநீதி மன்றத்திலும் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளன.
இட ஒதுக்கீட்டின் நியாயத்தை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களிலும் நிரூபிக்க சாதி வாரி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் தேவை. ஆனால் அது நம்மிடம் இல்லை என்றும் தனது கடிதத்தில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
இதையே பல்வேறு தருணங்களில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதி நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன என்பதாலும் அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியானதாக எடுக்க வேண்டும், இதற்கான வறலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையை பிறப்பிக்க வேண்டும் என தான் கேட்டுக்கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Cricket
இங்க நான் தான் கிங்கு…சேப்பாக்கத்தில் சிலிர்த்து எழுந்த அஷ்வின்…
இந்தியா – வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியின் துவக்கத்திலேயே இந்திய அணியின் விக்கெட்டுகள் மலமலவென சரியத் துவங்கியது. தக்க நேரத்தில் பொறுப்புடன் விளையாடி சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை. இதில் இந்திய வீரர் அஷ்வின் சதமடித்து அசத்தினார்.
பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் பதம் பார்த்த வந்த வங்கதேச அணி, இந்திய அணியுடனான டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் பின்னடைவை சந்தித்த இந்திய அணி பங்களாதேக்கு எதிரான போட்டிகளில் அசத்தல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இந்த இரு அணிக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று துவங்கியது.
துவக்கத்தில் வங்கதேசத்தின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நூற்றி நாற்பத்தி நான்கு ரன்கள் எடுப்பதற்குள் ஆறு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணிக்கு தனது சொந்த மண்னிலே இப்படி ஒரு நிலைமையா? என கவலையோடு இருந்த இந்திய ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதாமாக ஆல்-ரவுண்டர் அஷ்வின் சதம்டித்தார்.
நூற்றி எட்டு பந்துகளில் நூறு ரன்களை எடுத்தார் அஷ்வின். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் அடிக்கும் ஆறாவது சதமிது. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆறு சதங்களில் சேப்பாக்கம் மைதானத்தில் அஷ்வின் அடிக்கும் இரண்டாவது சதம் இது. இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட அஷ்வினுக்கு துணையாக களத்தில் நின்று வரும் ஆல்-ரவுண்டர் ஜடேஜா என்பத்தி ஆறு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார்.
முதல் நாள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து முன்னூற்றி முப்பத்தி ஒன்பது ரன்களை எடுத்துள்ளது இந்தியா. பத்து பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் என நூற்றி இரண்டு ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார் போட்டியின் இன்றைய நாளின் கதாநாயகன் ரவிச்சந்திரன் அஷ்வின்.
-
Cricket1 day ago
களத்தில் சண்டை.. பவுலருக்கு சோக்-ஸ்லாம் போட்ட பேட்டர்.. வீடியோ வைரல்
-
Cricket24 hours ago
நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…
-
Cricket1 day ago
147 ஆண்டுகளில் முதல்முறை.. இலங்கை வீரர் மிரட்டல்.. கவாஸ்கர் கூட இந்த சாதனை படைக்கல
-
latest news1 day ago
வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்
-
Finance1 day ago
ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…
-
Cricket1 day ago
INDvsBAN 2வது டெஸ்ட்: கான்பூரில் பாதுகாப்பு குளறுபடி, UPCA கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?
-
Cricket23 hours ago
இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…
-
latest news19 hours ago
ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…