Connect with us

india

காற்றில் கலந்த கனவு நாயகன்…முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு தினம் இன்று…

Published

on

Dr.APJ.Abdul Kalam

1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி பிறந்தவர் அவூல் பக்கர் ஜெயிலூதீன் அப்துல் கலாம். திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பும், சென்னை பொறியியல் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்து முடித்தவர். இ நதிய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார்

ஏவுகனைகள் மற்றும் ஏவுகனைகள் ஏவல் தொழில் நுட்பத்தில் இவரது பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே இவருக்கு இந்தியாவின் ‘ஏவுகனை நாயகன்’ என்ற ஒரு பெயரும் இன்று வரை இருந்துவருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவே அதிர்ச்சியடையும் அளவில் போக்ரானில் அணுகுண்டை வெடிக்கச் செய்து உலக அரங்கில் இந்தியாவின் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்தவர்.

Dr.APJ

Dr.APJ

இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்பதில் இவருக்கு அலாதி பிரியம் இருந்து வந்தது. 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இவர் இந்திய நாட்டின் குடியரசுத்தலைவராக  இருந்திருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட லட்சுமி சாகலை வீழ்த்தி ஜனாதிபதியாக மாறியவர்.

இவருக்கு அப்போதைய ஆளும் கட்சியான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வழங்கிய ஆதரவினால் இவர் இந்திய நாட்டின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ‘மக்களின் சனாதிபதி’ என்றும் அழைக்கப்பட்டார்.

இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர். இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதாமாகவும், அவர்களை சாதனை நாயகர்களாக மாற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் தனது கருத்துக்களை சொல்லி வந்தவர். ‘அக்னி சிறகுகள்’, ‘இந்தியா 2020’ புத்தகங்களை எழுதியவர்.

ஊழல் ஒழிய, இளைஞர்கள் நேர்மையான வழியில் பயணிக்க “நான் என்ன தர முடியும்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தவர். 2015ம் ஆண்டு ஜூலை இருபத்தி எழாம் தேதி தனது என்பத்தி மூன்றாவது வயதில் மாரடைப்பினால் காலமானார். இவரது ஒன்பதாவது நினைவு தினமான இன்று பலரும் இவருக்கு தங்களது நினைவு அஞ்சகியை செலுத்தி வருகின்றனர்.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

Published

on

Jammu Kashmir

ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு – காஷ்மீரில் மொத்தம் உள்ள தொன்னூறு சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என சொல்லப்பட்ட நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்களர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முதற்கட்டமாக இருபத்தி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. காஷ்மீர் பிராந்தியத்தில் பதினாறு தொகுதிகளிலும் , ஜம்மு பிராந்தியத்தில் எட்டு தொகுதிகளிலும் காலை ஏழு மணிக்கு பலத்த பாதுகாப்புடன் துவங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை நடந்து வருகிறது. வாக்குப் பதிவு துவங்கியதிலிருந்தே தங்களது வாக்குகளை பதிவு செய்ய பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேர்தல் நடத்தப்படும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்களிக்க பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

 

காலை பதினோறு மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகளும்,பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 41.17 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது.

Election Polling

Election Polling

பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 50.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீர் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்தும் வகையில் அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், முதல் முறை வாக்கார்கள் தங்களது வாக்குகளை செலுத்தும்படி தான் அழைப்பு விடுப்பதாக பிரதமர் மோடி சொல்லியிருந்தார்.

google news
Continue Reading

india

ராகுல் காந்தி நாக்கை அறுப்பவருக்கு பதினோறு லட்சம் பரிசு…எம்.எல்.ஏ. பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…

Published

on

இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்க்கிறார் ராகுல் காந்தி என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியிருந்த நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு பதினோறு லட்ச ரூபாய் பரிசாக தருவதாக சிவசேனா எம்.எல்.ஏ. பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அன்மையில் அமெரிக்கா சென்றார். அப்போது அங்கு பேசிய அவர், இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால், இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும் எனவும், தொன்னூறு சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு தனக்கு இருக்க விருப்பமில்லை எனவும் பேசியிருந்தார்.

Rahul Gandhi

Rahul Gandhi

இட ஒதுக்கீடு குறித்த ராகுலின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது பாஜக. ராகுல் இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்க்கிறார் என ராகுல் காந்தியின் மீது குற்றம் சாட்டியும் இருந்தது. இ ந் நிலையில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் பேசியது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவிலும், நாட்டிலும் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டுமென ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்யான தகவல்களை பேசி இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தந்து உண்மையான முகத்தை காட்டிவிட்டார் என சஞ்சய் கெய்க்வாட் பேசியிருந்தார்.

அதோடு ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு பதினோறு லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் பேசியுள்ளார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து சஞ்சய் கெய்க்வாட்டின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

india

முதலிடம் முக்கியமல்லை…மோடி சொல்லியிருக்கும் மேசேஜ்…

Published

on

 

குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்று வரும் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியா சிறந்து விளங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மோடி மத்திய அரசு தனது மூன்றாவது ஆட்சி காலத்தின் முதல் நூறு நாட்களில் நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கான அனைத்து துறைகளையும், காரணிகளையும் கையாள முயற்சித்ததாக சொன்னார்.

நூற்றி நாற்பது கோடி இந்தியர்களும் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதியளித்துள்ளனர் என்றார். அதே போல நாட்டின் பண்முகத்தன்மை, அளவு, திறன், செயல் திறன் ஆகியவை தனித்துவமானது. அதனால்தான் உலகளாவிய பயன்பாட்டிற்கான இந்திய தீர்வுகளைப் பற்றி தான் சொல்லுவதாக சொன்னார்.

இந்தியாவில் அயோத்தி உள்ளிட்ட மற்ற பதினாரு இடங்களை முன்மாதிரி சூரிய நகரங்களாக மேம்படுத்த பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும் போது சொன்னார்.

Pm Modi

Pm Modi

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளம் இப்போது தயாராகி வருகிறது என குறிப்பிட்ட மோடி முதலிடத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் தரவரிசையைத் தக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதே போல இருபத்தி ஓன்றாம் நூற்றாண்டில் இந்தியா சிறந்து விளங்கும் என்பதில் இந்தியர்கள் மட்டுமில்லை ஒட்டு மொத்த உலகமே உணர்கிறது என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்று வரும் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள்  சந்திப்பு கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி பின்னர் பேசியிருந்த பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.

 

google news
Continue Reading

india

வேற லெவல் வசதிகளோடு வெளியான வீரோ…மகேந்திராவின் அடுத்த கமர்ஷியல் வாகனம்…

Published

on

இந்தியாவில் சாலைப்போக்குவரத்துக்கான வாகனங்கள் தயாரிப்பத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது மகேந்திரா நிறுவனம். பேசஞ்சர் வாகனகள், சொகுசு வாகனங்கள் தயாரிப்போடு மட்டுமல்லாமல் கமர்ஷியல் வெகிக்கில்களையும் இந்திய சாலைகளுக்கு ஏற்றார் போல வடிவமைத்து வழங்கி வருகிறது இந்நிறுவனம்.

இந்த நிறுவன கமர்ஷியல் வாகன வகைகளின் அடுத்த தயாரிப்பான “வீரோ”  இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 1493 சிசி திறன் கொண்ட இஞ்சினாக வடிவமைக்கப்பட்டுள்ளது “வீரோ”.

Veero

Veero

3சிலின்டர்களை உள்ளடக்கியுள்ளது மகேந்திராவின் புதிய அறிமுகமான் “வீரோ”.

டீசலில் இயங்ககூடிய இந்த வாகனம் சரக்குகளை ஏற்றிச்செல்லக்கூடிய கமர்ஷியல் வெகிக்கில் வகையில் சேர்ந்து விடும்.  மகேந்திராவின் சொகுசு வாகனமான ‘பொலீரோ நியோ’வின்  எஞ்சின் போலவே ‘வீரோ’ இஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கமர்ஷியல் வாகனங்களின் கேபினில் 3 பேர் அமர்ந்து செல்லுக் கூடிய விதமாக “வீரோ” வடிவமைக்கப்பட்டுள்ளது. கியர் செலக்டர் ராடு முன் புற டேஷ் போர்டிலேயே கொடுக்கப்பட்டள்ளதால் மூன்று பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கு விதமான வசதி மகேந்திராவின் “வீரோ”வில் வழங்கப்பட்டுள்ளது.

மைலேஜை பொறுத்த வரை லிட்டர்ருக்கு பதினெட்டு கிலோ மீட்டர் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. 1.5 டன் எடையை சுமக்கும், 1.6டன்  வரையான எடைகளை சுமக்கும் வாகனம் என பயனாளிகளின் வசதிக்காக வேரியன்ட்ஸ்களாக  சந்தையில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளதாக “வீரோ” குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் சொல்லுகிறது.

இதற்கு முன் வெளியான மகேந்திராவின் மற்ற லோடு வாகனங்களின் வசதிகளை விட அதிகமான ஃப்யூட்சர்கள் வழங்கப்பட்டுள்ளது. நவீன மயனமயான முன்புற கேபின் வசதிகளோடு இந்திய சந்தையில் “வீரோ”வை அறிமுகப்பட்டுத்தியுள்ளது மகேந்திரா நிறுவனம். முழுக்க, முழுக்க டிஜிட்டல் மயமான வசதிகளோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மகேந்திராவின் “வீரோ”.

google news
Continue Reading

india

ஆசிய கோப்பை தொடர்…அசால்ட்டு பண்ணிய இந்திய ஆக்கி அணி!…பாகிஸ்தானை பதம் பார்த்தது!…

Published

on

Ind Pak Hockey

சமீபத்தில் ஃப்ரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய  ஆடவர் ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தது. இந்நிலையில் சீனாவில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது இந்திய ஆடவர் ஆக்கி அணி.

சீனா ஹூலுன்பியர் நகரில் எட்டாவது ஆசிய சாம்பன்ஸ் கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் நடந்து வருகிறது. ஆறு அணிகள் பங்கற்று வரும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் இதர ஐந்து அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் பம்பரம் போல களத்தில் சுழன்று தங்களது விளையாட்டு திறனை வெளிப்படுத்தினர்.

போட்டியின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு – ஒன்று ( 2 – 1 ) என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று பாகிஸ்தானை வீழ்த்தியது.

Indian Hockey Team

Indian Hockey Team

லீக் சுற்றில் இதற்கு முன்னர் இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது. இந்தியாவால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், தென் கொரியா அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு முன்னர், தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் ஏற்கனவே அரை இறுதிப் போட்டிக்கு தகுதி அடைந்து விட்டது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. அதன் பின்னர் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ஒன்றில் கூட இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

Trending