டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட மிகக் குறைந்த ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெஃப் அலாட் 2006 ஆம் ஆண்டு 77 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட அடிக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளில் குறைந்த ரன் அடித்த சாதனையாக இது இருக்கிறது.
இதோடு, அலாட் ஒரு நிமிடத்தில் அடிக்கப்பட்ட குறைந்த பட்ச ஸ்கோர் என்ற அரிய சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். 101 நிமிடங்கள் களத்தில் இருந்த அலாட் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. தற்போது இவரது சாதனையை தந்தை, மகன் ஜோடி முறியடித்துள்ளது.
டார்லெ அபெ கிரிக்கெட் கிளப்-இன் டிவிஷன் நைன் டெர்பிஷயர் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிய தந்தை இயன் மற்றும் மகன் தாமஸ் இணைந்து 208 பந்துகளை எதிர்கொண்டனர். இதில் இவர்கள் வெறும் நான்கு ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். 48 வயதான இயன் 137 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட அடிக்கவில்லை, மறுபுறம் மகன் தாமஸ் 71 பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை.
தந்தை மகன் ஆடிய இந்த இன்னிங்ஸில் அவர்களது அணி 45 ஓவர்களில் வெறும் 21 ரன்களை மட்டுமே அடித்தனர். இதில் 9 ரன்கள் எக்ஸ்டிரா வடிவில் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட போட்டியில் தோல்வியை தவிர்க்கவே இப்படி ஆடியதாக இயன் தெரிவித்தார். மேலும், இவ்வாறு ஆடியதால் தனது பெயர் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகியுள்ளது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…