கபில் கோரிக்கை ஏற்பு.. அன்ஷூ சிகிச்சைக்கு ரூ. 1 கோடி வழங்கும் பிசிசிஐ

0
104

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் அன்ஷூமான் கெய்க்வாட் சிகிச்சைக்காக ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் அன்ஷூமான் கெய்க்வாட்-க்கு உதவுமாறு முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 1 கோடி வழங்க பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

இது குறித்து வெளியான தகவல்களில், சிகிச்சை பெற்றுவரும் அன்ஷூமான் கெய்க்வாட் குடும்பத்தாரிடம் ஜெய் ஷா தொலைபேசியில் உரையாடியதாகவும், பிசிசிஐ கெய்க்வாட் குடும்பத்திற்கு பக்கபலமாக செயல்படும் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அன்ஷூமான் கெய்க்வாட் உடல்நிலை குறித்து பிசிசிஐ தொடர்ச்சியாக கேட்டறிந்து வருவதாகவும், விரைவில் அவர் நலம்பெற்று திரும்பவார் என்று நம்புவதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிகே கெய்க்வாட்-இன் மகனான அன்ஷூமான் கெய்க்வாட் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here