பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பொறுப்பாக இருங்க! கேப்டன் ஹர்திக் பாண்டியா காட்டம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரண்கள் எடுத்தது, அடுத்ததாக 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முதல் போட்டியை போல இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியை அடைந்துள்ளது.

Hardik-Pandya
Hardik-Pandya

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் தோல்வி அடைந்த காரணத்தினால் இந்த டி20 தொடரில் 2-0  என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா சற்று காட்டத்துடன் பேசி உள்ளார்.

Hardik Pandya
Hardik Pandya

இது குறித்து பேசி அவர் ‘ என்னைப் பொறுத்தவரை தோல்விக்கான காரணம் என்னவென்றால் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாதது தான். நாங்கள் இன்னும் நன்றாக பேட்டிங் செய்து இதைவிட அதிகபட்ச ரன்களை எடுத்திருந்தால் அந்த கண்களை அடிப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் எனக்கு சற்று சவாலானதாக இருந்திருக்கும். ஆனால் எங்களுடைய பேட்டிங்கை நாங்கள் கோட்டை விட்டு விட்டோம்.

என்னைப் பொறுத்தவரை தோழிக்கான காரணம் அதுதான் எனவே இனியாவது வரும் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சற்று பொறுப்பாக விளையாட வேண்டும். திலக் வர்மா அருமையாக விளையாடி ஒரு நல்ல ஸ்கோரை அடித்து கொடுக்கிறார் அதே போலவே அனைவருமே இந்திய அணியில் பேட்டிங் செய்ய வேண்டும். இந்த இரண்டாவது போட்டியிலும் நாங்கள் தோற்று விட்டோம் என்பதற்காக கவலைப்படவில்லை வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்’ என தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment