இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. கிடைத்த வாய்ப்புகளின் போதெல்லாம், தன்னை முழுமையாக நிரூபித்ததோடு அணிக்கு தேவையான முடிவு கிடைப்பதை உறுதிப்படுத்திக் காட்டியவர் ஷமி. கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் தனக்கென முக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார் ஷமி.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக அணியில் வாய்ப்பு கிடைக்க அணியில் சேர்க்கப்பட்ட ஷமி உலகக் கோப்பை தொடரில் அபாரமாக பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார். இந்த தொடர் பற்றிய கேள்விக்கு பதில் முகமது ஷமி ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்-ஐ நக்கல் செய்து கருத்து தெரிவித்தார்.
“எனக்கு அது பழகிவிட்டது. 2015, 2019 மற்றும் 2023 ஆண்டுகளில் எனக்கு சரியான துவக்கம் கிடைத்தது. எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, நானும் சிறப்பாக பந்துவீசினேன். கடவுளுக்கு நன்றி, அவர்கள் அதன்பிறகு என்னை அணியில் இருந்து நீக்குவது பற்றி யோசிக்கவே இல்லை. இதனை நீங்கள் கடின உழைப்பு என்றும் கூறலாம், ஆனால் நான் வாய்ப்புக்காக எப்போதும் தயாராக இருந்தேன்.”
“நீங்கள் முழுமையாக தயார் நிலையில் இருந்தால் தான், உங்களால் நிரூபிக்க முடியும். இல்லையெனில், உங்களால் களத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்கு மட்டும்தான் ஓட முடியும். வாய்ப்பு கிடைக்கும் போதே, அதனை பறித்துக் கொள்வது தான் நல்லது,” என்று முகமது ஷமி தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் என இந்திய அணியின் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் என இருவரும் கலந்து கொண்டிருந்தனர். முகமது ஷமி இவ்வாறு கூறுவதை கேட்டதும் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…