அவர் வேற லெவல்-ங்க.. டோனியுடன் முதல் சந்திப்பு குறித்து பாருபள்ளி காஷ்யப்

0
45

இந்திய பேட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப், எம்எஸ் டோனியை முதல்முறை சந்தித்த அனுபவம் பற்றி தெரிவித்த தகவல்கள் தற்போது சமூக வலதைளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தனது அசாத்திய கிரிக்கெட் சாதனைகள் மட்டுமின்றி, ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடம் நடந்துகொள்ளும் விதத்திற்கென எம்எஸ் டோனியை பின்தொடர்வோர் ஏராளம் எனலாம். அந்த வகையில், பிரபல பேட்மிண்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப் எம்எஸ் டோனியை முதல் முறையாக சந்தித்த போது இருவரின் உரையாடல் பற்றி பாட்காஸ்ட் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது கூறிய பாருபள்ளி காஷ்யப், “சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் வைத்து எம்எஸ் டோனியை சந்தித்தேன். அப்போது அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, நான் பாருபள்ளி காஷ்யப் சாய்னா நேவாலின் கணவர் என்று கூறினேன்.”

“அதற்கு எம்எஸ் டோனி, உங்களை எனக்கு நன்றாகவே தெரியும். நானும் பேட்மிண்டேன் விளையாடுகிறேன். உங்களது மனைவி பெயரை வைத்து அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.”

“இதைத்தொடர்ந்து அவர் என்னிடம் தோழன் மற்றும் சக வீரரை போன்று பேசினார். இருவர் இடையே நீண்ட கால நட்பு இருப்பதை போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தினார்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக எம்எஸ் டோனி மூன்று ஐசிசி கோப்பைகளையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐந்துமுறை ஐபிஎல் கோப்பைகளையும் வென்று குவித்துள்ளார்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here