Categories: Cricket

இந்த விஷயத்துல டோனி, கோலியை விட ரோகித் தான் மாஸ்… அஸ்வின்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் கேப்டன்சி விவகாரத்தில் எம்எஸ் டோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடம் உள்ள வித்தியாசம் பற்றி கூறியுள்ளார். ரவிசந்திரன் அஸ்வின் டோனி, கோலி மற்றும் ரோகித் என மூவர் தலைமையிலான இந்திய அணியில் விளையாடியுள்ளார்.

கடந்த காலங்களில் மூவரின் கேப்டன்சி குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். அந்த வகையில், அஸ்வின் தற்போது விராட் மற்றும் டோனியை விட ரோகித் சர்மா அந்த விஷயத்தில் கெட்டிக்காரர் என கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அஸ்வின், “ரோகித் கேப்டன்சியில் இரண்டு, மூன்று விஷயங்கள் அருமையாக உள்ளன. அவர் எப்போதும் அணியின் சூழலை அழுத்தம் இன்றி வைத்துக் கொள்வார். அவர் எல்லாவற்றையும் எளிமையாக அனுகுவதை விரும்புவார். அவர் மனதை சமநிலைப்படுத்திக் கொண்டு தந்திரங்கள் அடிப்படையில் மிகவும் உறுதியாக இருப்பார்.”

“டோனி மற்றும் விராட் கோலி என இருவரும் இந்த விஷயத்தில் உறுதியாகவே உள்ளனர். எனினும், தந்திரங்கள் அடிப்படையில் டோனி மற்றும் கோலியை விட ரோகித் கைத்தேர்ந்தவர். தந்திரங்களை உருவாக்குவதற்கு ரோகித் அதிக பணியாற்றுவார். ஏதேனும் பெரி. போட்டி அல்லது தொடர் வரவிருந்தால், ரோகித் அணியின் தந்திரங்களை வகுக்கும் குழு, பயிற்சியாளருடன் உட்கார்ந்கு திட்டமிடல்களை வகுப்பார்.”

“அப்போது ஒவ்வொரு பேட்டர் மற்றும் பந்துவீச்சாளரின் பலம், பலவீனம் பற்றி ஆய்வு செய்வார். இதில் அவர் கைத்தேர்ந்தவர். இவற்றுடன் அவர் வீரர்களுக்கு ஆதராவக இருப்பார். பிளேயிங் XI-இல் அவர் தேர்வு செய்யும் வீரரை 100 சதவீதம் ஆதரிப்பார். மூன்று கேப்டன்களின் கீழ் நான் அதிகளவு கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago