எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா? அஸ்வினை சீண்டிய இளம் வீரர்

0
174

இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ரவிசந்திரன் அஸ்வின். சர்வதேச கிரிக்கெட்டில் அபார சாதனைகளை படைத்திருக்கும் அஸ்வின் தற்போது டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருகிறார். டிஎன்பிஎல்-இல் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் ஓவரில் டிராகன்ஸ் அணிக்காக களமிறங்கிய அஸ்வின், நான் ஸ்டிரைக்கர் பகுதியில் ரன் ஓட தயாராக இருந்தார்.

அப்போது அஸ்வீன் பந்துவீசும் முன்பே கிரீஸை விட்டு வெளியேறுவதாக பந்துவீச்சாளர் நினைத்தார். அதன்படி குறிப்பிட்ட பந்தை வீச ஆயத்தமானவர், திடீரென நின்றுகொண்டு அம்பயரிடம் ஏதோ பேசினார். இந்த சம்பவத்தின் போது அஸ்வின் ரன் ஓட ஆயத்தமான போதிலும், அவரது பேட் கிரீஸ் கோடின் மீதுதான் இருந்தது.

இதுபோன்ற விஷயங்களில் மிக கவனமாக செயல்படக்கூடிய அஸ்வின், பல போட்டிகளில் பந்துவீச்சின் போது இதுபோன்று எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன் காரணமாக இந்தமுறை இதே பாணியை வேறொரு வீரர் அஸ்வினிடம் செய்ய முயன்ற சம்பவம் கவனத்தை ஈர்த்தது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here