அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்தியா! காரணத்தை கூறிய கேப்டன் ஹர்திக் பாண்டியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று டி20 கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் எடுத்தது.

WI-Team
WI-Team

அடுத்ததாக 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.

Hardik Pandya
Hardik Pandya

இந்நிலையில் போட்டி  முடிந்த பிறகு தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ‘ எங்களுடைய இந்திய இளம் வீரர்கள் தவறு செய்வார்கள் எனவே தவறு செய்வ என்பது பெரிய விஷயம் இல்லை. பருப்பு போட்டியில் அதனை கண்டிப்பாக தெரிவித்துக் கொண்டு வெற்றி பெறுவோம் பெறுவோம்.

Hardik-Pandya
Hardik-Pandya

சேசிங் செய்யும் போது ஒரு அணியில் உள்ள வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை பறி கொடுக்கக் கூடாது ஆனால் நாங்கள் அந்த தவறை செய்தோம் இதன் மூலம் எங்களுடைய வீரர்கள் நல்ல ஒரு அனுபவத்தை கற்றுக் கொண்டிருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அதையெல்லாம் கவனித்து  கொண்டு வருகின்ற போட்டியில் நாங்கள் கவனமாக செயல்படுவோம் ஒரு போட்டியில் மட்டும் தான் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம் இன்னும் 4  போட்டிகள் இருக்கிறது’ என கூறியுள்ளார்.

Leave a Comment