பரோடா வங்கி (Bank of Baroda) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 3082 கிளைகளும் தமிழ்நாட்டில் கிளைகளும் உள்ளன. இந்த வங்கி காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்புவது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் ஜிப்மர் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.
காலிப்பணியிடம்:
பரோடா வங்கியில் உள் ஒம்புட்ஸ்மேன் (Internal Ombudsman) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு மொத்தமாக 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 65-க்கு கீழ் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு Notification-ஐ கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பதாரர் தகுதி:
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர் www.bankofbaroda.inஅதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
- பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள Application Form ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை கவனமாக நிரப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ-டேட்டாவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையொப்பம் மற்றும் தங்களின் தகுதி தொடர்பான பிற ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
விண்ணப்ப கட்டணம்:
பொது, EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். SC, ST, PWD & பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
பரோடா வங்கி பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.2,00,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.