Connect with us

job news

டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் வேலை..! 687 காலிப்பணியிடங்கள்..! உடனே விண்ணப்பீங்க.!!

Published

on

DDA Recruitment 2023

டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) காலியாக உள்ள உதவி கணக்கு அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, கட்டிடக்கலை உதவியாளர், சட்ட உதவியாளர், நைப் தாசில்தார், ஜூனியர் இன்ஜினியர், சர்வேயர், பட்வாரி மற்றும் இளநிலை செயலக உதவியாளர் ஆகிய பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், டெல்லி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள ஆட்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்: 

உதவி கணக்கு அதிகாரி(51), உதவி பிரிவு அதிகாரி(125), கட்டிடக்கலை உதவியாளர்(9), சட்ட உதவியாளர்(15), நைப் தாசில்தார்(4), ஜூனியர் இன்ஜினியர்(236), சர்வேயர்(13), பட்வாரி(40) மற்றும் இளநிலை செயலக உதவியாளர்(196) என மொத்தம் 687 காலிப்பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரரின் தகுதி:

உதவி கணக்கு அலுவலர்:

பட்டய கணக்காளர் (CA) / நிறுவன செயலர் (CS) / ICWA / நிதிக் கட்டுப்பாட்டில் முதுகலை / MBA (நிதி), அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். எம்.காம் சமமான தகுதியாக கருதப்படாது.

உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ):

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் கணினி பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டிடக்கலை உதவியாளர்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனம் அல்லது அதற்கு இணையான கட்டிடக்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சட்ட உதவியாளர்:

சட்டத்தில் வழக்கமான பட்டம் (பட்டியில் பதிவு செய்வதற்கும் நீதிமன்றங்களில் ஆஜராவதற்கும் உரிமை உண்டு).
பார் கவுன்சிலில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நைப் தாசில்தார்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை பொறியாளர் (சிவில்):

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வி பெற்றிருக்க வேண்டும்.

சர்வேயர்:

டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது அதற்கு சமமான நிறுவனத்திலிருந்து சர்வேயில் இரண்டு வருட அனுபவத்துடன் தேசிய வர்த்தகச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பட்வாரி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை செயலக உதவியாளர்:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி மற்றும் கணினியில் தட்டச்சு வேகம் ஆங்கிலத்தில் 35 wpm அல்லது இந்தியில் 30 wpm இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது:

மேலே  குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு ஆட்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேலே  குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், Online Application என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தைப் நிரப்புவதற்கு முன் விண்ணப்பதாரர்கள் Notification அறிவிப்பைப் படிக்கவும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தில் கேட்டகப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு என அனைத்து அத்தியாவசியத் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பணிக்கு தேவையான தகுதி, அடையாள சான்று, முகவரி விவரங்கள், அடிப்படை விவரங்கள் என அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும்.
  • இறுதியாக விண்ணப்பதாரர் பதிவுக் கட்டணம் செலுத்திவிட்டு, சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் கட்டணம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் ஜூன் 3ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், பொது, ஓபிசி (OBC) மற்றும் EWS பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி (SC), எஸ்டி (ST) மற்றும் PwBD பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
 DDA Recruitment 2023
சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணிகளுக்கு ஏற்ப மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது  https://www.dda.gov.in/  என்ற இணையதளத்தை அணுகலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

job news

மதுரையில் த.வே.க மாநாடு உறுதியா?!.. சமையல் கலைஞர் கொடுத்த பேட்டி!…

Published

on

vijay

தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் அவை விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. எனவே, அப்போது விஜய் எப்படியும் பின்னாளில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

விஜயும் அடிக்கடி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் என்பது தனது அரசியல் கட்சியின் பெயர் எனவும் அவர் கூறினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் எனவும் கூறியிருக்கிறார்.

மேலும், பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோருக்கும், அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

vijay

மேலும், பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை பாரட்டி பேசி பரிசும் கொடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்து வருகிறது.

விஜயின் அரசியல் மாநாடு மதுரையில் நடக்கவிருப்பது ஒரு சமையல் கலைஞர் மூலம் தெரியவந்திருக்கிறது. மாணவ, மாணவியர் சந்திப்பு விழாவுக்கு சமைக்கும் சமையல்காராரை செய்தி சேனல் ஒன்று பேட்டியெடுத்தபோது ‘ புதுச்சேரியில் ஒரு விழாவுக்க நாங்கள் உணவு சமைத்தோம். அது விஜய்க்கு பிடித்திருந்தது. அப்போதிலிருந்து விஜய் தொடர்பான விழாக்களுக்கு நாங்கள்தான் சமைத்து வருகிறோம். மதுரையில் நடக்கவுள்ள மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு சமைக்க வேண்டும் என எங்களிட்ம் கேட்டிருக்கிறார்கள். 350 பேர் இதற்காக வேலை செய்ய போகிறோம்’ என அவர் கூறியிருக்கிறார். எனவே, விஜயின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் நடப்பது உறுதியாகியிருக்கிறது.

google news
Continue Reading

job news

NIEPMD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ.36,000 சம்பளம்…உடனே விண்ணப்பிங்க.!!

Published

on

சென்னை : பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனமான National Institute for Empowerment of Persons with Multiple Disabilities ( NIEPMD) தற்போது வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிறுவனத்தில் (Junior Lecturer ) இளநிலை விரிவுரையாளர் பணிக்கு வேலையில் சேர ஆள் வேண்டும் என அறிவித்துள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை

இந்த Junior Lecturer பணிக்கு மொத்தமாக ஒரே ஒரு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதால் இதில் வேலைக்கு சேர ஆர்வமும் தகுதியும் உங்களுக்கு இருந்தால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கல்வி தகுதி

இந்த பணியில் வேலைக்கு சேர நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B.Tech, M.Sc, MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த பணியில் வேலைக்கு சேர எத்தனை வயது தான் இருக்க வேண்டும் என வயதுவரம்பு குறிப்பிடப்படவில்லை என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணைப்பிற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்து கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் தொடர்பு கொண்டு நீங்கள் வயது வரம்பு குறித்த தகவலை தெரிந்து கொள்ளுமாறு கூறப்படுகிறது.

சம்பளம்

இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தி முடித்த உடனே அதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூபாய் 36,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியில் வேலை செய்கிற விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் அவர்கள் நேரில் அழைக்கப்பட்டு நேர்காணல் அதாவது நேரடியாகவே தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்யும் முறை

இந்த பணியில் சேர உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வமாக இணையதளமான இந்த இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும் அங்கு சென்று இந்த பணி குறித்து அறிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் முழுவதுமாக படித்துவிட்டு பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து முடித்தவுடன் அந்த விண்ணப்ப சான்றிதழ் ஒரு பிரிண்ட் மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-  pdf

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியான தேதி ஜூலை 10

கடைசி தேதி ஜூலை 19 – ஆம் தேதி

google news
Continue Reading

job news

ஆஹா… மாதம் 35,000 சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு…வெளியான சூப்பர் அறிவிப்பு.!!

Published

on

employment job

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது அடிக்கடி வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் தற்போது Senior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலியிடங்கள் மட்டுமே உள்ளதாகவும் அதனை விரைவாக நிறுத்திக் கொள்ளுமாறும் விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொண்டுள்ளது எனவே இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக் கொண்டு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை

இந்த Senior Research Fellow பணிக்கு மொத்தமாக ஒரே ஒரு காலியிடங்கள் மட்டும் தான் இருக்கிறது எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கூறப்படுகிறது.

சம்பளம்

இந்தப் பணியில் வேலைக்கு சேர விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூபாய் 35,000 வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பமும் ஆர்வமும் உங்களுக்கு இருந்தால் மட்டும் போதாது இந்த வேலை விண்ணப்பம் செய்ய உங்களுடைய வயது 32 ஆக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டும் தான் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும் மேலும் குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான விவரங்கள் கீழே உள்ள அதிகாரப்பூரை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி

இந்தப் பணியில் வேலைக்கு சேர விண்ணப்ப செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் வைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Msc பட்டம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் அப்படி இருந்தால் மட்டும்தான் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள் என்றால் நீங்கள் நேரில் அழைக்கப்பட்டு தேர்வு மற்றும் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட்டு இந்த பணிக்கு பணியமர்த்தப்படுவீர்கள் எனவும் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியில் வேலைக்கு சேர விருப்பமும் தகுதியும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த இணையதளத்திற்கு சென்று அதில் இந்த பணிக்கான விண்ணப்ப படிவம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்த விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்துவிட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் முழுவதுமாக படித்துக் கொண்டு விண்ணப்பம் செய்ய தொடங்க வேண்டும் விண்ணப்பம் செய்து முடித்த பிறகு நீங்கள் விண்ணப்பம் செய்துள்ளது சரியாக உள்ளதா என ஒரு முறை பார்த்துக் கொண்டு பிறகு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

google news
Continue Reading

job news

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு… மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா.??

Published

on

நம்மில் பலரும் படித்துவிட்டு வீட்டில் வங்கி வேலை வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறோம்.அப்படி, வங்கியில் வேலை செய்ய ஆர்வத்துடன் இருந்தீர்கள் என்றால் உங்களுக்காகவே இந்தியன் வங்கி அட்டகாசமான அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது அதன்படி இந்தியன் வங்கியில் அலுவலகப் பதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை
இந்த அலுவலக உதவியாளர் பணிக்கு மொத்தமாக ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது எனவே இதில் வேலைக்கு சேர விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் வருகின்ற 31ஆம் தேதிக்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கல்வி தகுதி

இந்தப் பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தால் நீங்கள் அங்கீகாரம் செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தில் BSW/B.A /B.Com/ with computer Knowledge ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும்.

வயது வரம்பு

இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 22 எனவும் அதிகபட்ச வயது 40 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வயதுக்குள் அவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும்.

சம்பளம்

இந்த பணியில் சேர விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை இப்படி தான்

இந்த பணியில் சேர விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பத்தாறுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் அழைத்து தேர்வு நடத்தி மற்றும் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியில் வேலைக்கு சேர வேண்டும் என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே அதிகாரப்பூர்வ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும் பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த என்னப்பா படிவத்தை கடைசி தேதி அல்லது அதற்கு முன்பு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் கடைசி தேதி வருகின்ற 31ஆம் தேதி என்பதால் அதற்கு முன் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக்கொள்ள படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://www.indianbank.in/wp-content/uploads/2023/07/OA-Recruitment-2023.pdf

google news
Continue Reading

job news

மாதம் ரூ.79,000 சம்பளத்தில் ‘TRAI’-ல் வேலை..! இதுதான் கடைசி தேதி..சீக்கிரமா விண்ணப்பிங்க..!

Published

on

TRAI

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், (TRAI) இந்தியாவில் செயல்படும் அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். தற்பொழுது, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், புது தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் காலியாக உள்ள முதன்மை ஆலோசகர் (நிதி மற்றும் பொருளாதார பகுப்பாய்வு) பதவியை வெளிநாட்டு சேவை விதிமுறைகளின் அடிப்படையில் நிரப்புகிறது.

விண்ணப்பதாரர் வயது:

முதன்மை ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 58 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் வணிக நிர்வாகம்/ பொருளாதாரம்/ வர்த்தகம்/ பொறியியல்/ சட்டம்/ அறிவியல் / மனிதநேயம் ஆகியவற்றில் முதுகலை/இளங்கலைப் பட்டம் அல்லது
  • இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா/இந்தியாவின் செலவு மற்றும் பணிக் கணக்காளர்களின் நிறுவனம் மற்றும் தொடர்புடைய துறையில் தேவையான அனுபவத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் www.trai.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு இணையதளத்தில் இருக்கும் Application Form விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்பட்டுள்ள தகவல்களை நிரப்ப வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • பிறகு  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
  • தபாலில் அனுப்பும் பொழுது உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை எழுத வேண்டும்.

அனுப்பும் முகவரி:

Senior Research Officer (A&P),

Telecom Regulatory Authority of India,

Mahanagar Door Sanchar Bhawan,

J. L. Nehru Marg (Old Minto Road),

Next to Zakir Hussain College, New Delhi-110002

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி: 

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.67,000 முதல் ரூ.79,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.  முதன்மை ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஆகஸ்ட் 25ம் தேதிகுள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

google news
Continue Reading

Trending