job news
இந்தியன் வங்கியில் வேலை…விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி..மிஸ் பண்ணிடாதீங்க..!!
இந்தியன் வங்கி, தயாரிப்பு மேலாளர், குழுத் தலைவர், பண மேலாண்மைக்கான பட்டயக் கணக்காளர் வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. அதாவது (Product Manager, Team Lead, Chartered Accountant ) உள்ளிட்ட பதவிகளுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. எனவே இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் கிழே உள்ள விவரங்களை படித்து விண்ணப்பங்கள் பதிவு செய்துகொள்ளுங்கள்.
காலியிடங்கள்
தயாரிப்பு மேலாளர், குழுத் தலைவர், பண மேலாண்மைக்கான பட்டயக் கணக்காளர் பதவிகளுக்கு மொத்தம் 18 காலி இடங்கள் உள்ளன. தயாரிப்பு மேலாளர்(Product Manager) 5,பட்டய கணக்காளர்கள் (Chartered Accountants) 6, குழுத் தலைவர் (Team Lead) 7 என மொத்தம் 18 காலியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் குறைந்தபட்ச வயது 25 மற்றும் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் அனுபவம்
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்புஇன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / CA மற்றும் / MCA / M.Sc. IT / M.Tech / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக இருக்கவேண்டும்.
சம்பளம் எப்படி..?
இந்த வேலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிலையான சம்பளம் மற்றும் மாறக்கூடிய ஊதியம், எது பொருந்துகிறதோ அந்த வகையில் ஊதிய அமைப்பின் அடிப்படையில் CTCக்கு தகுதியுடையவர்கள். மாறி ஊதியமானது நிலையான ஊதியத்தை விட அதிகமாக இருக்கும், ஆனால் காலாண்டு அரையாண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டிய குறிப்பிட்ட இலக்குகளை அடைவதோடு இணைக்கப்பட்டுள்ளது.
காலம்
வேலையில் சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 03 முதல் 05 ஆண்டுகள் வரை புதுப்பிக்கத்தக்க ஆண்டுக்கு அல்லது ஒப்பந்த சலுகையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குறைந்த காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். வங்கியின். இடம் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை அல்லது வங்கியின் முடிவுப்படி இருக்கும்.
தேர்வு செயல்முறை:
இந்த வேலையில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், தகுதி மற்றும் தொடர்புடைய அனுபவத்தின் அடிப்படையில் திரையிடப்பட்டு தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
இந்த வேலையில் சேர ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டணம்/கட்டணங்களை இணைய வங்கி / NEFT/RTGS மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கில் செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ஆதார் எண்/UTR எண் குறிப்பிடப்படும்.
Account Name: Engagement of Specialists in Cash Management Services Vertical on a contractual basis
Account Number: 7503450017
Bank & Branch: Indian Bank, Royapettah
Account Type: Current Account
IFSC Code : IDIB000R021
விண்ணப்பிக்கும் முறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துவிட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை முதலில் நீங்கள் நிரப்ப வேண்டும். பணிக்கான விண்ணப்பத்தை முதன்மை பொது மேலாளர் (CDO & CLO), இந்தியன் வங்கி கார்ப்பரேட் அலுவலகம், HRM துறை, ஆட்சேர்ப்பு பிரிவு 254-260, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை, பின் – 600 014, தமிழ்நாடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். படிவம் இதோ – PDF மேலும், இந்த வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இந்த PDF ஐ கிளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
job news
ஸ்டேட் பேங்க்ல வேலை பார்க்க சான்ஸ்?…வெளியாகியுள்ள அறிவிப்பு…
படித்து முடித்த இளைஞர்களாக இருந்தாலும் சரி, படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களாகவே இருந்தாலும் அரசு மற்றும் அரசு சார்ந்த, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவதையே அதிகம் விரும்புபவர்களாகவே இருந்து வருகிறார்கள். இது போன்ற வாய்ப்பு பற்றிய அறிவுப்புகள் எப்போது வரும் என காத்திருக்கும் படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இது போன்ற வாய்ப்புகள் வரும் போது அதனை எப்படி எதிர் கொள்வது என்பதனை உணர்ந்து அதற்கான முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர்களும் அதிகரித்தே வருகின்றனர்.
பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள என்னூறு இடங்களை (800) நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் தேர்வதற்கு குரிய விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டியம் இணைய தள முகவரியும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான கல்வித் தகுதியும், வயது வரம்பு குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்.சி கல்வி கற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கான ஊதியமாக ரூபாய் நாற்பத்தி எட்டு ஆயிரத்து நானூற்றி என்பது ரூபாய் (ரூ.48,480/-) முதல் தொன்னூற்றி மூனாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்(ரூ.93,960/-) எனவும் சொல்லப்படுகிறது.
இந்த பணிகள் தேர்வுக்கு sbi.co.in/web/careers என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவ்க்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை வழங்க கடைசி தேதி குறித்தும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதமான அக்டோபர் மாதம் நான்காம் தேதியே கடைசி எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
job news
அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…
ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வு அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அன்ட் சிந்து பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யு.சி.ஓ. பேங்க் உள்ளிட்ட தேசிய வங்கிகளுக்கான 4,465 அதிகாரி காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிக்களுக்கான இத்தேர்வுக்கான ஆரம்ப நிலை தேர்வு அக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது. அதை தொடர்ந்து முதன்மை தேர்வுகள் நவம்பர் மாதம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் 21ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடப்பட்டு பணி ஒதுக்கீடு ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்ச வயது வரம்பு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும், ஓபிசிக்கு 3 வருடங்கள் தளர்வும், எஸ்.சி, எஸ்.டிக்கு 5 வருடங்கள் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக 175 ரூபாயும், மற்ற பிரிவினருக்கு 850ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://www.ibps.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். நாடு முழுவதிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Cricket
சூர்யாவுக்கு சப்போட்டாக களமிறங்கிய அஜீத்!…இதுக்கு அவர் தகுதியானவர் தானாம்!…
இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையும், கனவுமாக இருந்து வந்தது உலகக்கோப்பையை வெல்வது. ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியது.
இந்த தொடருக்கும் பின் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இருபது ஓவர் கிரிக்கெட் கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்ததால்.
இவரைப் போலவே இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராத் கோலி, ஆல் ரவுண்டர் ஜடஜாவும் தங்களது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்திய அணியின் முக்கிய வீரரும், ஆல்-ரவுண்டருமான ஹார்திக பாண்டியா இருபது ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்வு குறித்து பிசிசிஐயின் தலைமை தேர்வுக்குழு அதிகாரியும், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டருமான அஜீத் அகார்க்கர் கேப்டன் பொறுப்பிற்கு சூர்ய குமார் யாதவ் முற்றிலும் தகுதியானவர் என்றார். அவருக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது என்றார். அதோடு உலகிலேயே சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர், அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடக் கூடியவர். அவரிடம் அதிக திறன்கள் உள்ளன, ஆனால் அதை கண்டறிவது கடினமானவை என்றார்.
automobile
வண்டி வேணும்ன்னா மூனு மாசம் வெயிட் பண்ணுங்க!…பின்ன வோல்டு நம்பர் ஒன்னுன்னா சும்மாவா?…
உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் பொதுவாக பெட்ரோல், டீசலாலே நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. அதன் பின்னர் கேஸ்கள் மூலம் இவை இயக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலே எரி பொருளாக நிரப்பபட்டு அதன் மூலமே இயக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவைகள் அதிகரிக்கத் துவங்கியது. இதிலிருந்து எடுக்கப்படும் எரிபொருட்களே மனிதர்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரத்துவங்கியதால், சார்ஜ் செய்து பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் சந்தையில் அறிமுகமானது. இவற்றிற்கு அதிக வரவேற்பு உலக அளவில் கிடைத்து. இப்போது பஸ், கார், உள்பட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட பேட்டரிகள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வாகனப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது இந்தியாவின் டூவிலர் தயாரிப்பு முன்னணி நிறுவனமான பஜாஜ்.
சிஎன்ஜி (CNG) கேஸின் மூலம் இயக்கப்படக் கூடிய முதல் டூவீலர்களை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியாவின் பஜாஜ் நிறுவனம். ஃபிரீடம் என்ற பெயரில் 125 சிசி (CC)இஞ்சின், என்ஜிஓ 4 டிரம் (NGO 4 Drum), என்ஜிஓ 4 டிரம் எல்ஈடி(NGO 4 Drum LED), என்ஜிஓ டிஸ்க் எல்ஈடி டிஸ்க் எல்ஈடி (NGO 4 Disc LED) என்ற மூன்று மாடல்களில் விற்பனையாகி வருகிறது பஜாஜின் ஃபிரீடம்.
மும்பை, புனே, குஜராத் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைத்து வரும் இந்த பைக்குகளை சொந்தமாக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
job news
மதுரையில் த.வே.க மாநாடு உறுதியா?!.. சமையல் கலைஞர் கொடுத்த பேட்டி!…
தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் அவை விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. எனவே, அப்போது விஜய் எப்படியும் பின்னாளில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
விஜயும் அடிக்கடி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் என்பது தனது அரசியல் கட்சியின் பெயர் எனவும் அவர் கூறினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் எனவும் கூறியிருக்கிறார்.
மேலும், பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோருக்கும், அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை பாரட்டி பேசி பரிசும் கொடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்து வருகிறது.
விஜயின் அரசியல் மாநாடு மதுரையில் நடக்கவிருப்பது ஒரு சமையல் கலைஞர் மூலம் தெரியவந்திருக்கிறது. மாணவ, மாணவியர் சந்திப்பு விழாவுக்கு சமைக்கும் சமையல்காராரை செய்தி சேனல் ஒன்று பேட்டியெடுத்தபோது ‘ புதுச்சேரியில் ஒரு விழாவுக்க நாங்கள் உணவு சமைத்தோம். அது விஜய்க்கு பிடித்திருந்தது. அப்போதிலிருந்து விஜய் தொடர்பான விழாக்களுக்கு நாங்கள்தான் சமைத்து வருகிறோம். மதுரையில் நடக்கவுள்ள மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு சமைக்க வேண்டும் என எங்களிட்ம் கேட்டிருக்கிறார்கள். 350 பேர் இதற்காக வேலை செய்ய போகிறோம்’ என அவர் கூறியிருக்கிறார். எனவே, விஜயின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் நடப்பது உறுதியாகியிருக்கிறது.
-
Cricket1 day ago
293 டெஸ்ட் போட்டிகளில் 24 முறை தான்.. புது வரலாறு படைத்த இந்தியா-வங்கதேசம்
-
Cricket1 day ago
ரேஸில் வென்ற ரோஹித் சர்மா!…சூப்பர் ஆக்கி காட்டுவாரா சூர்யா?…
-
Cricket1 day ago
ரவுண்டு கட்டி ஆடிய அஷ்வின்.. முத்தையா முரளிதரனின் நீண்ட கால சாதனையை சமன் செய்து அசத்தல்
-
Finance1 day ago
ஓரே நாளில் ஓரவஞ்சனை காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கியுள்ள விலை உயர்வு…
-
Cricket5 hours ago
நிதானமாக ஆடிய ஷர்துல்.. அவுட் ஆனதும் மருத்துமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
-
india23 hours ago
மகாத்மா காந்தி பிறந்த நாள்…பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…
-
latest news3 hours ago
ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?
-
latest news2 days ago
உதயநிதியை சந்தித்த நடிகர் சிவகார்த்திக்கேயன்…துணை முதல்வருக்கு வாழ்த்து…