insurance news
போனஸ்களை அள்ளி தரும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்..எதெல்லாம்னு தெரிஞ்சிக்க இத பாருங்க..
இந்தையாவில் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காப்பீடு திட்டங்களின் மூலம் நாம் செலுத்தும் தொகையை நமக்கு தேவையான நேரத்தில் காப்பீடு அளிப்பவரிடம் இருந்து பெற்று கொள்ள முடியும். இவ்வாறான காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது போனஸ் அளிப்பதும் உண்டு. இதன்படி தற்போது சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான போனஸ்களை தருகிறது. அவற்றை பற்றி இப்போது காணலாம்.
டாடா ஏ.ஐ.ஏ லைஃப் இன்சூரன்ஸ்(TATA AIA Life Insurance):
இந்த நிறுவனம் தற்போது 2023 நிதியாண்டில் இதன் வாடிக்கையாளர்களுக்கு 1183 கோடி ரூபாயை போனஸாக அளிப்பதற்காக ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 37% அதிகமாகும். 2022 நிதியாண்டில் இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.861 கோடி போனஸுக்காக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. இதன்படி 7,49,229 வாடிக்கையாளர்கள் இதற்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
பிஎன்பி மெட்லைஃப்(PNB Metlife):
இந்த நிறுவனம் ரூ.768.6 கோடியை தனது 5,52,000 வாடிக்கையாளர்களின் போனஸ் கணக்கில் ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 29% அதிகமாகும். இந்த தொகையே இந்த நிறுவனத்தின் மிக அதிகமான தொகை என பிஎன்பி மெட்லைஃப் இன்சூரன்ஸ் MD&CEO.ஆஷிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்(Max Life Insurance):
2023 நிதியாண்டில் இந்த நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு போனஸ்க்காக ஒதுக்கிய தொகை ரூ.1604 கோடியாகும். மேலும் இந்த நிறுவனம் தொடர்ந்து 21 ஆண்டுகள் போனஸ் வழங்கி வருகிறது. மேலும் இந்த ஆண்டு போனஸ் தொகை கடந்த ஆண்டை காட்டிலும் 8% அதிகம் ஆகும்.
கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ்(Kotak Mahindra Life Insurance):
இந்த நிறுவனம் தனது 6,50,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.840 கோடியை போனஸ்க்காக ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2022 நிதியாண்டை விட 24% அதிகம் ஆகும். மேலும் இது இந்த நிறுவனத்தில் 22வது ஆண்டு போனஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Finance
வயசான காலத்துல நிம்மதியா பென்ஷன் வாங்கனுமா?..அப்போ எல்.ஐ.சியின் சாரல் பென்ஷன் திட்டத்தை பற்றி தெரிஞ்சிகோங்க..
பெரும்பாலான ஊழியர்கள் தங்களில் ஓய்வு காலத்திற்கு பின் நிலையான ஓய்வூதியம் பெற வேண்டும் என விரும்புவர். அப்படியான பென்ஷன் வந்தால் அந்த சமயத்தில் தங்களின் மாத செலவிற்கு உதவும். அப்படிபட்டவர்களுக்கென அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் எல்.ஐ.சியின் சாரல் பென்ஷன் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நாம் 60 வயது கடந்த பின் நமக்கு மாதமாதம் குறிப்பிட்ட தொகையை பென்ஷனாக பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தின் முக்கியமான தகவல்களை தற்போது காணலாம்.
வயது தகுதி:
இத்திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்சம் 40 வயதினையும் அதிகபட்சமாக 80 வயதினையும் அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
வருடாந்திர தொகை:
- இத்திட்டத்தின் குறைந்தபட்ச வருடாந்திர தொகை ரூ. 12000 ஆகும். இதனை நாம் மாதம், காலாண்டு, அரையாண்டு எனும் கணக்கீல் கூட பெறலாம். நாம் நமக்கு பென்ஷனாக எவ்வளவு தொகை வரவேண்டும் எனும் கணக்கின் அடிப்படையில் நாம் செலுத்தும் முதலீட்டு தொகை மாறுபடும்.
- இதில் நாம் செலுத்தும் முதலீட்டு தொகைக்கு உச்ச வரம்பு கிடையாது.
- மேலும் இந்த தொகையை செலுத்திய பின் பிரிமியம் செலுத்தியவர் இறக்க நேரிட்டால் அந்த தொகையானது அவரால் பரிந்துரைக்கப்பட்ட நபரிடம் (Nominee) ஒப்படைக்கப்படும்.
மேலும் நாம் பிரிமியம் செலுத்திய காலத்தில் இருந்து 6 மாதங்கள் கழித்து அந்த தொகையை ஏதோ ஒரு முக்கியமான காரணங்களால் (மிக கொடிய நோயால் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால்) திரும்ப பெற நினைத்தால் நமக்கு நாம் செலுத்திய தொகையில் இருந்து 95% தொகையை மட்டுமே திரும்ப பெற இயலும்.
மேலும் நாம் பிரிமியம் செலுத்த ஆரம்பித்து 6 மாதங்கள் கழித்து நாம் அந்த தொகையின் மீது கடனும் வாங்கி கொள்ளலாம். எனவே இப்படியான பென்ஷன் திட்டத்தில் நாம் சேருவதனால் நமக்கு மட்டுமல்லாமல் நமது குடும்பத்தினருக்கும் ஒரு நல்ல வசதியினை பெற செய்யலாம். மேலும் தகவல்களுக்கு http://www.licindia.in என்ற முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
insurance news
மாதம் 18,500 வரை பென்ஷன் வேனுமா?.. அப்போ இத கொஞ்சம் பாருங்க..
வயதானவர்களுக்கு அவர்கலின் ஓய்வு காலத்தில் மாதாந்தோறும் ஓய்வூதியம் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நமது அரசினால் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வரிசையில் மாதந்தோறும் பென்ஷன் வரும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா(PMVVY) என்ற திட்டத்தினை பற்றி பார்ப்போம்.
இத்திட்டம் வயதானவர்களுக்கென கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும். இதில் சேருவதற்கு நாம் 60 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மொத்த காலம் 10 ஆண்டுகள். இத்திட்டத்தில் கிடைக்கும் ஓய்வூதிய தொகையை நாம் மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடத்திற்கு ஒரு முறை என நமக்கு விருப்பமான காலங்களில் கிடைக்கும் படி விண்ணப்பித்து கொள்ளலாம். இத்திட்டத்தினை நாம் லைஃப் இன்ச்ஸூரன்ஸ் கார்பொரேஷனிற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். இதனை விண்ணப்பிக்க நாம் நமது ஆதார் மற்றும் பேன்(PAN) கார்டினை கொண்டு செல்ல வேண்டும்.
இந்த திட்டத்தின்படி நாம் நமக்கு எவ்வளவு ஓய்வூதியம் வேண்டுமோஅதற்கேற்றார் போல் பெரிய தொகையை முன்கூட்டியெ செலுத்த வேண்டும். உதாரணமாக நமக்கு 1000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என விரும்பினால் நாம் ரூ. 1,62,162 யை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இந்த தொகையானது நமக்கு மாதந்தோறும் பென்ஷனாக வந்து சேரும்.
இதற்கு ரூபாய் எங்களிடமே இருக்கலாமே? என நீங்கள் நினைக்கலாம். இத்திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் பென்ஷனை தவிர்த்து நாம் செலுத்திய மொத்த தொகையும் நமக்கு 10 ஆண்டுகளுக்கு பின் மொத்தமாக திரும்ப தரப்படும். ஒருவேளை சந்தாதாரர் 10 ஆண்டுக்குள் இறக்க நேரிட்டால் அந்த மொத்த தொகையானது நாமினிக்கு சென்றடையும்.
மேலும் இந்த திட்டத்திற்கு 7.4% வட்டியாக தரப்படுகிறது. மேலும் இந்த தொகையின் 30% பணத்தை நாம் கடனாக முன்கூட்டியே வாங்கி கொள்ளலாம். எனவே மாதந்தோறும் ஓய்வூதியம் தரும் இந்த பொண்ணான திட்டத்தினை உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு உதவும்படி செய்யலாம்.
-
Cricket2 days ago
ஓய்வு பற்றி கேள்வி.. டோனியுடன் ஒப்பிட்டு ஷாருக் சொன்ன பதில்.. யாரும் எதிர்பார்க்கல
-
latest news2 days ago
வெளியான அதிரடி உத்தரவு.. இனி 15 நாட்களில் பட்டா மாற்றிக் கொள்ளலாம்..!
-
Cricket2 days ago
ஐபிஎல் 2025: RCB ஜெயிக்க இதை செய்யனும்!
-
Cricket22 hours ago
கான்பூர் சம்பவம்.. பின்னணியில் கம்பீர்-ரோகித் பிளான்.. டிரெசிங் ரூம் சீக்ரெட் சொன்ன பந்துவீச்சு பயிற்சியாளர்
-
latest news2 days ago
பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…
-
Cricket23 hours ago
கோலி-அஷ்வின் டாக்டிக்ஸ்.. உடனே விழுந்த விக்கெட்
-
latest news19 hours ago
ரேஷன் கார்டில் முக்கிய அப்டேட் செய்ய மறந்துட்டீங்களா, அடுத்து என்ன ஆகும் தெரியுமா?
-
Cricket18 hours ago
டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…