Connect with us

india

என்னது மாட்டு கொட்டகையில் படுத்தா புற்றுநோய் குணமாகுதா…? அமைச்சரின் அபூர்வ கண்டுபிடிப்பு…!

Published

on

மாட்டு கொட்டகையில் படுத்தால் புற்றுநோய் குணமாகும் என்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் கூறி இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

உத்திரபிரதேச அமைச்சர் ஒருவர் மாட்டு தொழுவத்தில் படுத்திருப்பது புற்றுநோயை குணப்படுத்தும் எனவும், மாட்டின் முதுகில் தழுவினால் ரத்த அழுத்தம் குறையும் என்று பேசி இருக்கின்றார். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் சஞ்சய் கங்வார் நவ்காவா பகடியாவில் கோசலா ஒன்றை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர் ‘மாட்டு தொழுவத்தில் படுத்து அதை சுத்தம் செய்வதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும்.

பசுவின் முதுகில் தடவினால் நமக்கு ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தம் உள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பசுவின் முதுகில் தடவினால் அவரின் மருத்துவ அளவு 10 நாட்களில் 20 மில்லி கிராமிலிருந்து 10 மில்லி கிராமாக குறைக்கலாம். இங்கே ரத்த அழுத்த நோயாளி இருந்தால் பசுக்கள் உள்ளன. அந்த நபர் தினமும் காலை மாலை நேரங்களில் மாட்டின் முதுகில் தடவிக் கொண்டு செல்லுங்கள்.

மாட்டுகள் மூலம் உருவாகும் பொருட்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். மாற்றுச் சாணம், புண்ணாக்குகளை எரிப்பதன் மூலம் நாம் கொசுக்களை ஒழிக்க முடியும். தாய்க்கு சேவை செய்யவில்லை என்றால் அம்மா யாருக்காவது தீங்கு செய்வாரா? பல இடங்களில் மாடு மேய்வதாக கூறுகின்றனர்.

மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை. மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லாததால் தான் பல பிரச்சினைகள் உருவாகின்றது. ஈத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் மாற்றுத் தொழுவதற்கு வர வேண்டும் செய்யப்படும். ஈத் அன்று செய்யப்படும் வரமிளகாய் பசும்பாலில் செய்யப்பட வேண்டும்’ என்று கூறி இருக்கின்றார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *