Connect with us

latest news

அது எப்படி அவர் சொல்லலாம்… தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அண்ணாமலை வீட்டுமுன் ஆர்ப்பாட்டம்…!

Published

on

அண்ணாமலை வீட்டு முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். சமீப காலமாக இருவருக்கும் இடையே வாய் தகராறு நிலவி வருகின்றது. சமீபத்தில் அண்ணாமலை ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் சட்டத்தின் கீழ் செல்வபெருந்தகையை கைது செய்ய சென்றபோது வேண்டும் என்று காலை உடைத்துக் கொண்டார்.

நீங்கள் லண்டனில் முதலீடு செய்த பணம் பற்றிய விஷயத்தை எல்லாம் நான் வெளியில் கொண்டு வருவேன். இதுதான் தமிழகத்தின் தலைவிதி என்றால் அதை கையில் எடுக்க நான் தயார். ஒவ்வொருவரிடமும் சண்டை போட்டால் தான் தமிழக அரசியல் திருந்தும் என்றால் நான் அதை செய்ய தயாராக இருக்கிறேன். ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்தவர் செல்வப் பெருந்தகை.

அவர் லண்டனில் என்னென்ன எல்லாம் வாங்கி இருக்கின்றார். அவர் மனைவி மீது என்ன இருக்கின்றது என அனைத்தைப் பற்றியும் பேச தயாராக உள்ளேன். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி உள்ளார் என்பது மக்களுக்கு தெரிந்தால் போதும். அதை வைத்து அவர்கள் ஓட்டு போடுவார்கள். இது போன்ற நபர்களை படம் பிடித்து காட்டாமல் விடமாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையை ரவுடி என்று கூறியதை கண்டித்து அவரின் ஆதரவாளர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டு முன்பு தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending