Connect with us

Finance

சனிக்கிழமை அதுவுமா சம்பவம் செஞ்ச தங்கம்!…ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தானோ?…

Published

on

gold

கடந்த நான்கு நாட்களாக தங்கத்தில் விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. இது தங்க நகைகள் வாங்க நினைப்பவர்களை திடுக்கிட வைத்துள்ளது. சரி தங்கம் தான் விலை எகிறி ஏமாற்றத்தை தருகிறதே,
வெள்ளியாவது வேதனையை குறைக்கும் என்று பார்த்தால், அது அடுத்த அதிர்ச்சியை தந்துள்ளது
தங்கத்தோடு போட்டி போட்டிக் கொண்டு விலை உயர்வை சந்தித்து வருவதனால்.

சென்னையில் நேற்று ஒரு கிராம் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஏழாயிரத்து இருனூற்று நாற்பது ரூபாயாக (ரூ.7,240/-) இருந்து வந்தது. நேற்றைய முன் தினத்தை விட நேற்று விலை உயர்ந்து தான் காணப்பட்டது.

இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து ஆறுதல் அடைய வைக்கும் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், வார இறுதி சனிக்கிழமையான இன்று விலை உயர்வினை சந்தித்தும் சம்பவம் செய்து விட்டது தங்கம்.

இன்று ஒரு கிராமிற்கு நாற்பது ரூபாய் (ரூ.40/-) அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது.

Jewel

Jewel

ஓரு கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை ஏழாயிரத்து இருனூற்றி என்பது ரூபாயாக (ரூ.7,280/-) இருக்கிறது.

இந்த விலை உயர்வினால் நேற்று ஐம்பத்தி ஏழாயிரத்து இருனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ.57,240/-) விற்கப்பட்டு
வந்த நிலையில் இன்று முன்னூற்றி இருபது ரூபாய் (ரூ.320/-) உயர்ந்து ஐம்பத்தி ஏழாயிரத்து தொல்லாயிரத்து
இருபது ரூபாய்க்கு (ரூ.57,920/-).

அடுத்தடுத்தி விலை உயர்வி இருந்து வருவது ஆபரண வாங்க விரும்புவர்களை விரக்தியில் ஆழ்த்தி
வருகிறது. தங்கத்தின் விலை தான் தாறுமாறாக உயர்ந்து வருகிறது, வெள்ளியாவது ஆறுதல் தரும்
என்று பார்த்தால் அதுவும் தங்கத்தைப் போலவே தான் நேற்றும் இன்று விலை உயர்வினை சந்தித்து
சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று நூற்றி ஐந்து ரூபாயாக (ரூ.105/-) இருந்து வந்த நிலையில் இன்று இரண்டு ரூபாய் (ரூ.2/-) அதிகரித்து நூற்றி ஏழு ரூபாய்க்கு (ரூ.107/-)  விற்பனையாகி வருகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ஒரு லட்சத்தி ஐந்தாயிரம் ரூபாயாக (ரூ.1,05,000/-) இருந்து
வந்த நிலையில் இன்று இரண்டாயிரம் ரூபாய் (ரூ.2,000/-) அதிகரித்து ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு
(ரூ1,07,000/-) விற்கப்படுகிறது.

google news