Connect with us

Cricket

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

Published

on

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை அணியன் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரம, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒரு ஆண்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளார். இதில், ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. ஊழல்தடுப்பு விதிகளை ஜெயவிக்ரம மீறியதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிகள் 2.4.7-ஐ ஜெயவிக்ரம மீறியதாக ஒப்புக் கொண்டார். ஆன்டி கரப்ஷன் கோட் எனப்படும் ஏ.சி.யு. நடத்தும் விசாரணையை தாமதப்படுத்துவது, தடுப்பது, ஊழல் அல்லது முறைகேடுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் அல்லது அது தொடர்பான ஆவணங்களை தடுப்பது, தகவல்களை அழிப்பது ஐ.சி.சி. விதிகளின் கீழ் குற்றமாக கருதப்படும்.

ஜெயவிக்ரம கடைசியாக 2022 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக விளையாடினார். அவர் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் இலங்கை பிரீமியர் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) மற்றும் ஐ.சி.சி உடனான உடன்படிக்கையில், ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 1.7.4.1 மற்றும் 1.8.1 விதிகளின்படி செயல்பட்டது. ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்புக் குறியீடு மற்றும் முழு விவரங்கள் ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

google news

Cricket

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

Published

on

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட் வாடிக்கையாக மாற்றி வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் போட்டியில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை கடந்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விராட் கோலி கடந்துவிட்ட நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த மைல்கல் மூலம் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் வரிசையில் விராட் கோலி 1000 பவுண்டரிகளை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இதுதவிர தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இந்த சாதனை படைத்த மற்ற வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் டெஸ்ட் போட்டியை பொருத்தவரை, அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர் விராட் கோலி, வங்கதேசம் அணியின் ஷகிப் அல் ஹாசனுக்கு தனது பேட்-ஐ பரிசாக வழங்கினார்.

google news
Continue Reading

Cricket

டோனி ஸ்கிரீனை குத்தினார்.. படியில் இருந்து அதை பார்த்தேன்.. ஹர்பஜன் சிங்

Published

on

கிரிக்கெட் உலகில் மிகவும் அமைதியானவராக அறியப்படுபவர் எம்.எஸ். டோனி. இந்திய அணிக்காக அதிக ஐ.சி.சி. கோப்பைகளை வென்ற கேப்டன், ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் என பல சாதனைகளை எம்.எஸ். டோனி தன்பக்கம் வைத்திருக்கிறார்.

போட்டியின் முடிவு எந்த நிலையில் இருந்தாலும், மிகவும் அமைதியாக அந்த சூழலை கடந்து வருவதில் எம்.எஸ். டோனி பெயர்பெற்றவர். எம்.எஸ். டோனி களத்தில் சில முறை கோபத்தை வெளிப்படுத்திய சம்பவங்கள் மிகவும் குறைவு என்பதோடு, அவை யாராலும் மறக்க முடியாத அளவுக்கு வைரல் சம்பவங்களாகவும் உள்ளன.

எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2024 தொடரோடு ஓய்வு பெறுவார் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில் வெற்றிக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதை எம்.எஸ். டோனி திட்டமாக கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது.

இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் போட்டியில் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகள் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இக்கட்டான சூழலில் எம்.எஸ். டோனி அவுட் ஆகி வெளியேறினார். இந்தப்போட்டியில் வெற்றி பெற முடியாத கோபம் எம்.எஸ். டோனி முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.

மேலும், போட்டி முடிந்த பிறகு எம்.எஸ். டோனி உள்பட சி.எஸ்.கே. வீரர்கள் ஆர்.சி.பி. அணியுடன் கை குலுக்க களத்தில் காத்திருந்தனர். எனினும், வழக்கத்திற்கு மாறாக ஆர்.சி.பி. அணி வெற்றிக் கொண்டாட்டத்திற்கு சிறிது நேரத்தை எடுத்துக் கொண்டனர். இதனால் எம்.எஸ். டோனி ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை கொடுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார். இந்த சம்பவங்கள் அந்த சமயம் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், அந்த சம்வத்திற்கு பின் டிரெசிங் ரூம் சென்ற எம்.எஸ். டோனி அங்கிருந்த திரைக்கு பலமாக குத்து விட்டார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார். “ஆர்.சி.பி. கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர், அவர்கள் அப்படி செய்ய எல்லா உரிமையும் உள்ளது. அவர்கள் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.”

“நான் படிக்கட்டில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர்கள் களத்தில் ஆரவாரமாக கொண்டாடினர். சி.எஸ்.கே. வீரர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அணிவகுத்து நின்றிருந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டது. ஆர்.சி.பி. வீரர்கள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்குள் எம்.எஸ். டோனி மீண்டும் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.”

“அப்போது, அங்கிருந்த திரையை எம்.எஸ். டோனி வேகமாக குத்தினார். இதில் எந்த தவறும் இல்லை. விளையாட்டில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்று தான்,” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

நிதானமாக ஆடிய ஷர்துல்.. அவுட் ஆனதும் மருத்துமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

Published

on

மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் வீரரான ஷர்துல் தாக்குர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரானி கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருந்த ஷர்துல் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷர்துல் தாக்குர் ஒன்பதாவது விக்கெட்டில் தனது அணிக்காக 36 ரன்களை அடித்தார். களத்தில் இருந்த போது 102 டிகிரி காய்ச்சலுடன் கிரீஸில் பேட்டிங் செய்து வந்துள்ளார். இரானி கோப்பை போட்டியின் முதல் நாளிலேயே ஷர்துல் தாக்கூர் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

முதல் நாளில் லேசான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பேட் செய்ததால், காய்ச்சல் அதிகரித்து உடல்நிலை மோசமானது. இதனால் போட்டியின் இடையில் இருமுறை அணியின் மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்தார்.

உடல் நிலை மோசமடைந்த போதிலும், மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த ஷர்துல் தாக்குரை, அணி நிர்வாகம் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. நேற்றிரவு முழுக்க மருத்துவமனையில் இருந்த ஷர்துல், மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடுவது அவரது உடல்நிலை தேறுவதை பொருத்து முடிவு செய்யப்பட உள்ளது.

ஷர்துல் தாக்குருக்கு மலேரியா மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா என்ற ரீதியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தனது அணிக்காக மிகவும் கவனமாக விளையாடிய ஷர்துல் தாக்குர் 59 பந்துகளில் ஒரு சிக்சர், நான்கு பவுண்டரிகளை விளாசினார்.

தன்னுடன் ஆடிய சர்பராஸ் கான் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதால், ஷர்துல் தாக்குர் தனது ஷாட்களை மிக கவனமாக தேர்வு செய்து அடித்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சர்பராஸ் கான் 221 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

google news
Continue Reading

Cricket

தன் அணிக்கு அட்வைஸ் கேட்ட முன்னாள் வங்கதேச வீரர்.. மைக்கில் வைத்து பங்கம் செய்த சுனில் கவாஸ்கர்

Published

on

கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது கிட்டத்தட்ட இரண்டறை நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. எனினும், எஞ்சியிருந்த கொஞ்ச நேரத்தில் இந்திய அணி துரிதமாக செயல்பட்டதோடு, போட்டியில் மிக துரிதமாக செயல்பட்டு வெற்றியை தட்டித்தூக்கியது. இந்த வெற்றி மூலம் இந்தியா வங்கதேசம் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்தப் போட்டியின் நான்கு மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் அதுவரை பார்த்திராத சம்பவங்கள் பல அரங்கேறின. நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவாலை ஏற்படுத்தினர். இதனால் அந்த அணி 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஜோடி, டெஸ்ட் போட்டியில் டி20 இன்னிங்ஸை ஆடியது. இதன் காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்களை அடித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இதைத் தொடர்ந்து நான்காம் நாளின் கடைசி செஷனில் 2-வது இன்னிங்ஸ் பேட் செய்ய வங்கதேசம் அணி களமிறங்கியது. அன்றைய நாள் ஆட்டம் முடிவதற்குள் வங்கதேசம் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்திலும் வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது போட்டியில் கமென்ட்ரி செய்து வந்த முன்னாள் வங்கதேச வீரர் அத்தர் அலி, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரிடம் வங்கதேசம் பேட்டர்களுக்கு ஏதேம் அறிவுரை கூற விரும்புகின்றீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுனில் கவாஸ்கர் கமென்ட்ரியில் வைத்து மைக்கில், “ஒரு இந்தியராக், அவர்களிடம் விரைவில் அவுட் ஆக சொல்வேன்,” என்று பதில் அளித்தார்.

பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசம் வீரர்களுக்கு அறிவுரை கேட்டவருக்கு, சுனில் கவாஸ்கர் அளித்த பதில் அவர் மட்டுமின்றி அதனை கேட்ட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. சுனில் கவாஸ்கரின் டைமிங் பதில் இந்திய ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

google news
Continue Reading

Cricket

ரேஸில் வென்ற ரோஹித் சர்மா!…சூப்பர் ஆக்கி காட்டுவாரா சூர்யா?…

Published

on

suryakumar yadav

இரண்டரை நாளில் வங்கதேசத்தை வென்று டெஸ்ட் போட்டிகளில் பிரம்மிக்கத் தக்க வெற்றியை பெற்றுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. கான்பூரில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் நான்காம், ஐந்தாம் நாட்களில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது இந்திய அணி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதை உறுதிபடுத்துவதை மனதில் வைத்துக் கொண்டு இந்திய வீரர்கள் அதிரடியை காட்டினர். இருபது ஓவர் போட்டியின் அனுகுமுறையை டெஸ்ட் போட்டியில் காட்டினர் ரோஹித் சர்மா தலைமையிலான வீரர்கள்.

இலங்கை மண்ணில் ஒரு நாள் தொடரில் சமீபத்தில் அடி வாங்கி வந்த இந்திய அணி பங்களாதேஷை பதம் பார்த்தது தனது சொந்த மண்ணில்.

Rohit Sharma

Rohit Sharma

இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று இருபது ஒவர் போட்டி தொடர் வருகிற ஆறாம் தேதி துவங்க உள்ளது.

முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி ஒன்பதாம் தேதி டில்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்தில் பன்னிரரெண்டாம் தேதியும் நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஸ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவிபிஷ்னய், வருன் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா, மயங்க்யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற இருபது ஓவர் தொடரை கைப்பற்றியது போல வங்கதேசத்தையும் வென்று காட்டுவாரா? கேப்டன் சூர்ய குமார் யாதவ் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.  இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு இந்திய மண்ணில் வைத்து நடைபெற உள்ள முதல் தொடர் இதுவே என்பதனாலும் இந்த தொடர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

google news
Continue Reading

Trending