பிரபல அரசியல் விமர்சகரும், யூ-டியூபருமான சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழ் இவரை தமிழக காவல்துறை கைது செய்திருந்தது. இவர் நடத்தி வந்த யூ-டியூப் சேனல், மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள், அரசியல் கட்சி மற்றும் அதன் தலைவர்கள்ன் பிரதிநிதிகளை விமர்சித்து தனது கருத்துக்களை சொல்லி வந்ததால் இவர் தமிழக மக்களிடையே பிரபலமடைந்தார்.
கடந்த மே மாதம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதும் உள்ளதா?, பொது அமைதிக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறார் என கேள்வி எழுப்பியிருந்தது.
இப்படி இருக்கையில் சவுக்கு சங்கர் வழக்கின் மீதான விசாரணை இன்று வந்ததது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பல்வேறு முறைகேடான தகவல்களை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குண்டர் சட்டம் போடப்பட்டது என்று வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட சவுக்கு சங்கர் தாயாரின் வழக்கறிஞர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொடர்புடைய அதே நீதிபதி, குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என தீர்ப்பு வழங்கியதை குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க
தொடங்கிவிட்டதால் இந்த வழக்கின் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தியதோடு மட்டுமன்றி சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அத்துடன் ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து அந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…