இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்… புதிய சாதனையை படைத்த மனு பாக்கர்…

0
58

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளுக்கு நாள் பரபரப்பை அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தினை பெற்று கொடுத்துள்ளனர்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் இன்றைய போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்திருக்கிறது. மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் தென் கொரியாவின் வோன்ஹோ லீ மற்றும் ஜின் யே ஓ ஜோடியை எதிர்கொண்டது.

இதில் 16-10 என்ற புள்ளி கணக்கில் வென்று வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளனர். மனு பாக்கர் ஏற்கனவே மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் வெண்கல பதக்கத்தினை வென்று ஒலிம்பிக்ஸ் 2024ல் இந்தியாவின்  கணக்கினை துவங்கி வைத்தார்.

இந்நிலையில் ஒரே ஒலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்று இருக்கிறார் மனு பாக்கர். மேலும், இந்தியாவில் இருந்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற ஆறாவது வீரர் என்ற பெருமையை சரஜ்ஜோத் சிங் பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here