latest news
அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை தள்ளுபடி செய்தது நீதி மன்றம். இதனால் அவரது ஜாமீன் மனு உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார் செந்தில் பாலாஜி.
கைது செய்து சிறையிலேயே வைக்கப்பட்டதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தார்கள், முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையிலிருந்து வெளியே வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வரவேற்பதாகவும். எமர்ஜென்ஸி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழக்கை கிடையாது, அரசியல் சதிகளால் பதினைந்து மாதங்கள் தொடர்ந்தன. உன் தியாகம் பெரிது அதனினும் உறுதி பெரிது என ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜியை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது.
மின்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் பாலாஜிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
செந்தில் பாலாஜியுடன் புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்றதும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆளுநர் ரவிக்கு பூங்கொத்தினை வழங்கினார். இதே போல முதல்வர் ஸ்டாலினுக்கும் பூங்கொத்தினை வழங்கினார் செந்தில் பாலாஜி. அமைச்சர் பதவி குறித்து ஆட்சேபம் ஏதும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்திருந்தது முன்னதாக.
latest news
தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…
பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை பொறுப்பிற்கு வர வாரிசாக இருக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார். திமுகவில் அனுபவமிக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற அடிப்டபையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசிய தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் விமர்சித்திருக்கிறார்.
இந்த நியமனம் திமுகவின் வாரிசு அரசியலை காட்டுகிறது எனவும், திமுகவில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தாலும், அவர்களால் சாதாரன உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும், பொறுப்பிற்கும், தலைமைக்கு வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.
திராவிட மாடல் என்பதற்கு சமூக நீதி, சமத்துவம், பெரியாரின் கொள்கைகள் பேசும் திமுக அரசு அமைச்சரவையில் முக்கிய துறைகள் எதுவும் பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சருக்கு வழங்கவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும், மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியக பாரதிய ஜனதா கட்சி தான் செயல்பட்டு வருகிறது என்றார்.
திமுகவின் வாரிசு அரசியல் குறித்து மக்களிடம் பாஜக தீவரமாக எடுத்துச் செல்லும் என்றும், இந்த விஷயம் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பின் போது சொல்லியிருக்கிறார்.
Cricket
விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று முன்தினம் துவங்கியது. மழையால் டாஸ் தாமதமான நிலையில் வங்கதேசம் முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
இரண்டாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் நேற்று கைவிடப்பட்டது தொடர் மழை காரணமாக, இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்று நிறுத்தப்பட்டது. இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி புதிய சாதனையை இந்த தொடரில் படைப்பார் என அதிகம் எதிர்பார்க்கபடுகிறது.
இன்னும் நூற்றி இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்தால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒன்பதாயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி விடுவார் இவர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பதனாயிரம் ரன்களைக் கடக்கும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை மிக்க இலக்கை அடைவதற்கான வாய்ப்பும் வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் நடந்துவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடர்ந்து நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இரண்டு நாள் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்ட நிலை நீடித்தால் விராட் கோலியின் இந்த சாதனை தள்ளிப்போகும் நிலையும் உருவாகி உள்ளது. அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்கள் இருந்தாலும் மீதமுள்ள இரண்டு நாள் விளையாட்டும் தடை இல்லாமல் நடக்க வேண்டும், கோலி சாதனையை இந்த தொடரிலேயே நிகழ்த்த வேண்டும் என்பதுவே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
latest news
விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வில் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், விரைவில் மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும், ஒரிரு வாரங்களில் கூடும் மத்திய அமைச்சரவையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில், ஏழாவது ஊதியக்குழுவின்படி டிஏ, டிஆற் அதிகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படலாம். ஒருவேளை அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட்டம் நடந்தால், நவராத்திரி நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றி செய்தி வந்து சேரும்.
ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் கூட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் வந்துவிடும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலை குறியீட்டின் (ஏஐசிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில், ஜூலை 2024-க்கான டிஏ மூன்று முதல் நான்கு சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை 53 முதல் 54 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியானாலும், ஜூலை மாதம் துவங்கி டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சேர்த்தே வழங்கப்படும்.
Cricket
ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025 ஐபிஎல் தொடரில் எம்.எஸ். டோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இது குறித்த அறிவிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்கள் மட்டும் அன்-கேப்டு வீரர்களாக கருதப்படுவார்கள் என்று பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்தது. எம்.எஸ். டோனி ரசிகர்களுக்காக அடுத்த சீசனில் விளையாட ஆர்வம் காட்டிய நிலையில், ஐபிஎல் விதிகள் இந்த விஷயத்தில் எப்படியிருக்கும் என்ற கேள்வி இருந்து வந்தது.
மேலும், அணியில் தக்க வைக்கும் போது, பெரிய தொகையில் ரீடெயின் செய்யப்பட்டு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த டோனி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. குறைந்த விலையில் ரீடெயின் செய்ய முடியும் எனில், அடுத்த சீசனில் எம்எஸ் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் பிசிசிஐ நடத்திய ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு நேற்றிரவு வெளியானது.
அந்த அறிவிப்பில், இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் அன்-கேப்டு வீரராக மாற்றப்படலாம். எனினும், இவ்வாறு மாற்றப்படுவதற்கு அந்த வீரர் கடைசி ஐந்து ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கக்கூடாது. மேலும், பிசிசிஐ ஒப்பந்தத்திலும் இடம்பெற்றிருக்கக் கூடாது. இந்த விதியின் படி சென்னை அணி எவ்வித தயக்கமும் இன்றி எம்.எஸ். டோனியை அடுத்த சீசனில் விளையாட வைக்க அணியில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
Cricket
INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது. மழை குறுக்கிட்டதால், போட்டியில் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்றிரவு மழை பெய்தது, இரண்டாம் நாள் முழுக்க மழை தொடர்ந்த காரணத்தால் நேற்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது இந்தியாவில் இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக பலமுறை மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஒருநாள் ஆட்டம் முழுக்க பாதிக்கப்பட்டது கடந்த ஒன்பது ஆண்டுகளில் முதல் முறை ஆகும்.
கடைசியாக 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒருபந்துகூட வீசப்படாமல் தடைப்பட்டது. அந்த சீரிசில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
அதன்பிறகு, கான்பூரில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மேலும், போட்டியின் மூன்றாம் நாளான இன்றும் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த வகையில் இன்றைய ஆட்டமும் முழுமையாக கைவிடப்படும் சூழல் நிலவுகிறது.
போட்டியின் கடைசி இரண்டு நாள் ஆட்டத்தின் போது வானம் தெளிவாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உள்ளது. இதே தொடரில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
-
Cricket1 day ago
இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..
-
Cricket13 hours ago
INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..
-
Cricket13 hours ago
ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!
-
latest news22 hours ago
ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?
-
Cricket1 day ago
INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
-
latest news1 day ago
தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…
-
Cricket1 day ago
மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…
-
latest news11 hours ago
விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்