நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ரவுடிக்களுக்கு ஸ்கெட்ச்… தீவிர கண்காணிப்பில் போலீசார்

0
62

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கும் வன்முறைகளால் தமிழகமெங்கும் இருக்கும் ரவுடிகள் குறித்து பட்டியலை காவல்துறை தயாரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் தயாரான நிலையில் போலீசார் அவர்களை கண்காணிக்கும் பணியையும் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இந்நிலையில், இதுவரை  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் உருவாக்கப்பட்டு உள்ளதாம். இதில் குறிப்பிட்ட 400 ரவுடிகளுக்கு மட்டும் ஒரு போலீசார் விதம் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மேலும், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் பட்டியலில் இருக்கும் ரவுடிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட இருக்கின்றனர்.

இதில் எதுவும் பிரச்னை தென்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னையிலும் ரவுடிகளின் பட்டியல் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here