எழுச்சி பெற்ற இலங்கை…சரண்டர் ஆன சர்மா அணி…

இலங்கை அணியுடனான மூன்று இருபது ஓவர் போட்டிகள் மற்றும் மூன்று ஐம்பது ஓவர் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இருபது ஓவர் தொடரை ஏற்கனவே வென்றிருந்தது. சூர்ய குமார் யாதவ், தான் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்திக் காட்டினார்.

இருபது ஓவர் உலகக்கோப்பையை வென்றுக் கொடுத்த ரோஹித் சர்மா ஐம்பது ஓவர்கள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு இந்தியாவை வழி நடத்துகிறார். கொழும்பு பிரமதாசா மைதானத்தில் வைத்து நடந்த முதலாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி சமமாக டிராவில் முடிவடைந்தது.

இதனால் இரண்டாவது போட்டியின் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் கிளம்பியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்ணிலை பெறும் என்பதால்.

Virat Kohli

நேற்று பிரேமதாசா மைதானத்தில் வைத்து பகல் – இரவு ஆட்டமாக இரண்டாவது போட்டி நடத்தப்பட்டது. இலங்கை அணி முதலில் பேட் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் இலங்கை அணி இரு நூற்றி நாற்பது ரன்களை குவித்தது. ஒன்பது விக்கெட்டுகளை இழந்து இந்தியாவிற்கு இரு நூற்றி நாற்பத்தி ஓரு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை இந்தியாவுக்கு கொடுத்தது இலங்கை.

துவக்க வீரரும் இந்திய அணித்தலைவருமான ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி நாற்பத்தி நான்கு பந்துகளில் அறுபத்தி நான்கு ரன்களை குவித்தார். இதில் நான்கு சிக்ஸர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும்.

மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் முப்பத்தி ஐந்து ரன்களை குவித்தார். அக்சர் பட்டேலைத் தவிர வேற யாரும் பெரிதாக சோபிக்காத நிலையில் இந்திய அணி நாற்பத்தி இரண்டு புள்ளி இரண்டு ஓவர்களில் இரு நூற்றி எட்டு ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

காயத்தின் காரணமாக நேற்றைய போட்டியிலிருந்து விலகிய ஹசரங்காவிற்கு பதிலாக அணியில் இடம் பிடித்த சுழல் பந்து வீச்சாரளர் ஜெஃப்ரி வந்தர்சே பத்து ஓவர்கள் வீசி முப்பத்தி மூன்று ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்து இலங்கை அணி முதல் போட்டியை சமன் செய்தும், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றும் எழுச்சி பெற்றுள்ளது. மாறாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதியான இந்திய அணி இலங்கை உடனான தொடரில் தடுமாறி வருகிறது.

நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, கோலி இருவரும் இருந்தும்  இந்திய அணியை ஆட்டம் கான வைத்து அசத்தி வருகிறது இலங்கை அணி. இலங்கை அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும், இந்திய அணி வென்றால் இரு அணிகளும் தலா ஒரு, ஒரு வெற்றி பெற்று கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.

sankar sundar

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

12 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

12 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

13 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

21 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

22 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

22 hours ago