latest news
மீண்டும் வருகிறது மினிபஸ் சேவை… தமிழ்நாடு அரசின் சூப்பர் பிளான்!
![minibus - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/minibus.jpg)
தமிழ்நாட்டில் மினி பஸ் சேவைக்கு மீண்டும் அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், மினி பஸ் சேவைக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம், தமிழ்நாடு முழுவதும் மினி பஸ் சேவைகளுக்கான அனுமதி வழங்கப்பட இருக்கிறது.
மினி பஸ் சேவைக்கான அனுமதி, எந்தெந்தத் தடங்களில் வழங்கலாம் என்பதை வட்டார போக்குவரத்து அலுவலர்களே (ஆர்டிஓ) முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், 25 கி.மீ வரையில் அனுமதி அளிக்கப்படலாம் என்றும் இதில், 18 கி.மீ ஏற்கனவே பேருந்து சேவை இல்லாத வழித்தடத்திலும் 7 கி.மீ வழக்கமான பேருந்து சேவை வழித்தடத்திலும் அனுமதி வழங்கலாம். மேலும், இந்த பஸ்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
சென்னையில் மினி பஸ் சேவை
சென்னையைப் பொறுத்தவரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஜூலை 14-ம் தேதி வரை தெரிவிக்கலாம். மேலும், மினி பஸ் சேவை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஜூலை 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டம் முடிந்து ஒரு சில மாதங்களில் மினி பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
india
திடீர் உடல்நலக் குறைவு! – பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி!..
![lk advani - Cinereporters Info advaani](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/lk-advani.jpg)
20 வருடங்களுக்கு முன்பு வரை பாஜகவில் முக்கிய தலைவராக இருந்தவர் எல்.கே.அத்வானி. இந்தியாவின் துணை பிரதமராகவும் இவர் இருந்திக்கிறார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் மூளையாக செயல்பட்டவர் இவர். பாஜக ஆட்சிக்கு வந்தால் அத்வானிதான் பிரதமர் என்கிற நிலை இருந்தது.
ஆனால், குஜராத்தில் தொடர்ந்து 3 முறை முதலைமைச்சராக இருந்த நரேந்திர மோடியை பாஜக பிரதமராக்கியது. நரேந்திர மோடி பிரதமரானதும் அத்வானியின் புகழ் குறைய துவங்கியது. சில அரசியல் மேடைகளில் பிரதமர் மோடியை பார்த்து அத்வானி எழுந்து நின்று கும்பிட, மோடி அதை கண்டு கொள்ளாமல் போன வீடியோக்களும் வெளியானது.
தற்போது வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அத்வானி ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அத்வானிக்கு இப்போது 96 வயதாகிறது. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனையில் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.அதேநேரம், அவரின் உடல்நிலை குறித்து எந்த விபரங்களும் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.
latest news
சட்டசபையில் சஸ்பெண்ட்!.. அதிமுக எம்.ல்.ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்…
![eps - Cinereporters Info eps](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/eps-4.jpg)
கள்ளக்குறிச்சி விஷச்சாரய விவகாரத்தில் 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த நாள் முதலே அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டசபைக்கு வர துவங்கினார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து தொடர்ந்து சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டு பின் வெளிநடப்பு செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அவை அலுவல்களை நடத்தவிடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்தும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருக்கிறார்கள். இதற்காக வள்ளுவர் கூட்டம் உட்பட 4 இடங்களில் அனுமதி கேட்டு அதிமுக சார்பில் காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், எழும்பூர் ராஜரத்தின் மைதானத்தின் அருகே நிபந்தனைகளுன் கூடிய போரட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டிருகிறது. போராட்டம அமைதியாக நடக்க வேண்டும் எனவும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு வாகனங்களை கொண்டு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
latest news
பாகிஸ்தானில் போட்டு பொளக்கும் வெயில்!. 4 நாட்களில் 450 பேர் மரணம்…
![karachi - Cinereporters Info karachi](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/karachi.jpg)
பொதுவாக வெயில் காலம் என்றாலே வெயிலின் வெப்பத்தால் வயது முதியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் நடக்கும். அதனால்தான் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் சொல்வதுண்டு. குறிப்பாக கத்திரி வெயில் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் கொடுமை மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் கடந்த 4 நாட்களில் வெயிலும் தாக்கத்தால் 450 பேர் உயிரிழந்திருப்பதாக ஒரு தன்னார்வ நிறுவனம் சொல்லி இருக்கிறது. கராச்சி என்பது பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய நகரம் ஆகும். கடந்த சனிக்கிழமை முதலே கராச்சியில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது.
3வது நாளிலும் வெயில் குறையாமல் 40 டிகிரி செல்சியசிஸை தாண்டி வெப்பம் நிலவியது. சில இடங்களில் வெப்பக்காற்றும் வீசியது. குறிப்பாக கடலோர பகுதிகளில் அதிக வெப்பம் காணப்பட்டது. கடந்த நான்கு நாட்களில் 427 உடல்களை பெற்றதாக எதி அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. அதேபோல் மூன்று மருத்துவமனைகளில் இருந்து சித்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை பெற்றதாக கூறியிருக்கிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள எதி டிரெஸ்ட்டின் தலைவர் ‘கராச்சியில் 4 சவக்கிடங்குகள் செயல்படுகிறது. இப்போது எங்களின் சவக்கிடங்கில் உடல்களை வைக்க முடியாத அளவுக்கு பிணங்கள் நிரம்பி விட்டது. புதிய உடல்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
india
அதிக முறை தோப்புக்கரணம்!.. ராக்கிங் கொடுமையால் மருத்து கல்லூரி மாணவருக்கு சிறுநீரகம் பாதிப்பு!..
![ragging - Cinereporters Info ragging](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/ragging.jpg)
ராக்கிங் என்பது பல வருடங்களாக கல்லூரிகளில் இருந்து வருகிறது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ராக்கிங் மிக அதிக அளவில் இருந்தது. ஆனால், ஒரு மாணவன் ராக்கிங் கொடுமையால் இறந்துபோக ராக்கிங்குக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் சில கல்லூரிகளில் ராக்கிங் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஒரு மாணவரை சீனியர் மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் அவர் கல்லூரியில் சேர்ந்த்து முதலே தொடர்ந்து ரேக்கிங் செய்துள்ளனர். ஆனால், இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்காமல் அவர் இருந்திருக்கிறார்.
கடந்த மே 15ம் தேதி அந்த மாணவரை சுமார் 300 முறைக்கும் மேல் தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார்கள். இதனால் சிறுநீரகத்தில் அதிக அளவிலான அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு 4 முறை அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அதன் பின்னரே கடந்த 20ம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு ஒரு ஆன்லைன் புகார் வந்திருக்கிறது. இதுபற்றி விசாரித்தபோது இந்த ராக்கிங் விஷயம் நிர்வாகத்திற்கு தெரிய வந்திருக்கிறது.
எனவே, இதுபற்றி விசாரணை நடத்திய கல்லூரி முதல்வர் 7 மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட மாணவனின் உடல்நிலை இப்போது நன்றாக இருப்பதாகவும், கல்லூரிக்கு அவர் வர துவங்கியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
india
திருமணத்திற்கு வற்புறுத்தியா தாய் – தம்பி!. திட்டமிட்டு கொலை செய்த மகள்!..
![murder - Cinereporters Info murder](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/murder-3.jpg)
தனக்கு பிடித்தவனை திருமணம் செய்ய தடையாக இருந்த அம்மா, அப்பாவை கொலை செய்த பெண்கள் பற்றி கூட நாம் கேள்விப்படிருக்கிறோம். அல்லது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவன் அல்லது மாமியாரை கொலை செய்த பெண்களையும் பற்றி செய்திகள் படித்திருக்கிறோம்.
ஆனால், தன்னை திருமணத்திற்கு வற்புறுத்தியதற்காக தாய் மற்றும் தம்பியை கொலை செய்த இளம்பெண் பற்றிய செய்தி வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஹரியானாவின் யமுனா நடிகரில் வசித்து வந்தவர் மீனா. இவருக்கு ஒரு மகன், மகள் உண்டு. மகளின் பெயர் காஜல், இவருக்கு 27 வயது ஆகிறது. சமீபத்தில் மீனாவும், காஜலின் தம்பியும் வீட்டில் இறந்து கிடந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இப்போதுதான் திடுக்கிடும் தகவல்கள் அவர்களுக்கு தெரியவந்தது. காஜலுக்கு ஒரு ஆண் போல இருக்க வேண்டும் என்பது ஆசை. அதாவது, ஆண்கள் அணியும் உடைகளை அணிவது, சுதந்திரமாக வெளியே சுற்றுவது என இருக்க ஆசை. ஆண்கள் போல உடையணிந்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
ஆனால், திருமணம் செய்துகொள்ளும்படி அவரை அவரின் அம்மா மீனாவும், தம்பியும் அடிக்கடி நச்சரித்து வந்தனர். எனவே, அவர்களை கொலை செய்வது என முடிவெடுத்தார் காஜல், இதற்காக தனது உறவினர் கிருஷ்(18) என்பவரை துணைகு அழைத்திருக்கிறார். ‘நீ இதற்கு உதவி செய்தால் என் பாட்டி எனக்கு எழுதி வைத்த வீட்டை உனக்கு தருகிறேன்’ என ஆசை காட்டியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து மீனா வீட்டில் இருந்தபோது அவரை கீழே தள்ளி காஜல் கையை பிடித்துக்கொள்ள கிரிஷ் மூச்சை அமுக்கி கொலை செய்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு வந்த தம்பியையும் அதுபோலவே இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அதன்பின் எதுவும் தெரியாதது போல இருவரும் வெளியே சென்றுவிட்டனர். ஆனால், போலீசாரின் சந்தேகப்பார்வை காஜல் மீது விழுந்ததால் இப்போது அவரும், அவருக்கு உதவி செய்த கிருஷும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
-
tech news2 days ago
பார்க்க போட்டோ ஃபிரேம், ஆனா பாட்டு பாடும்.. சாம்சங் அசத்தல்
-
latest news23 hours ago
35 கோடி பரிசு விழுந்ததால் அதிர்ச்சியில் மரணம்!. அதிர்ஷ்டம் அடிச்சும் அனுபவிக்க முடியாத சோகம்!..
-
Cricket21 hours ago
T20 World Cup: அடுத்த ரிவெஞ்சுக்கு தயாராகும் இந்தியா! #INDVsENG
-
latest news2 days ago
திடீரென குறைந்த தங்க விலை!. நகை பிரியர்கள் மகிழ்ச்சி!.. இன்றைய நிலவரம்!..
-
tech news14 hours ago
விலை ரூ. 2420 தான்.. ஆப்பிளுக்கு போட்டியாக அறிமுகமான மோட்டோ Tag
-
Cricket2 days ago
இந்தியாவின் உலகக் கோப்பை ரிவெஞ்ச்… ஆஸி-யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
-
tech news1 day ago
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்… உதவியை நாடும் நாசா… என்ன நடந்தது?
-
latest news21 hours ago
அளவாக குடியுங்கள் என ஒரு கட்சி தலைவர் சொல்லலாமா?!… கமலை வாறிய விஜய பிரபாகரன்!…