Connect with us

india

மகனைக் காப்பாற்ற துடித்த தாய், கெஞ்சிய தந்தை… மிதித்தே கொன்ற கும்பல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

Published

on

மும்பையில் ஒரு சிறு பிரச்சனைக்காக தாய் தந்தையரின் கண் முன்னே இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள மாலத் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை ஆகாஷ் என்கின்ற 28 வயதான இளைஞர் புதிய கார் ஒன்றை தசராவை முன்னிட்டு ஷோரூம் இல் இருந்து வாங்கி தனது பெற்றோர்களுடன் புஷ்பா புங்கா அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஆகாஷின் காரை ஓவர் டேக் செய்ய முயன்ற போது லேசாக மோதியது.

இதனால் ஆகாஷுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுனரின் நண்பர்கள் அந்த இடத்தில் கூடிய நிலையில் ஆகாஷ் அந்த நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். ஆகாஷை அந்த கும்பல் கீழே தள்ளி அடித்து உதைத்தது. இதனை தடுப்பதற்கு ஆகாஷின் தந்தையும் தாயும் முற்பட்டார்கள். தனது மகனை காப்பாற்றுவதற்காக ஆகாஷ் மீது அவரது தாய் அப்படியே அரணாக படுத்து கொண்டார்.

இருப்பினும் அடி உதை நின்ற பாடில்லை. கடைசியாக ஆகாஷை உயிர் போகும் அளவுக்கு அடித்த பின்னர்தான் அந்த கும்பல் ஓய்ந்திருக்கின்றது. ஒவ்வொருவரின் காலிலும் அவரின் தந்தை விழுந்து அடிக்க வேண்டாம் என்று மன்றாடினார், தாயோ கதறி அழுதார். இருப்பினும் அவர்கள் விட்டப்பாடு இல்லை.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். ஆகாஷ் மீது தாக்குதல் நடத்திய வீடியோவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலானது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெறும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *