Connect with us

india

பவன் கல்யாணின் பக்கா ஸ்கெட்ச்… அல்வா போல கிடைத்த துணை முதல்வர் பதவி… நடந்தது என்ன?

Published

on

ஜெகன் மோகன் ரெட்டியை தூக்கும் மனநிலையில் ஆந்திர மக்கள் இருந்தாலும் அதற்கு வலுவான எதிராளி தேவைப்பட்டனர். எங்கும் வாக்கு சிதறாமல் ஒரு கூட்டணி அமைந்தால் தான் ஜெகன் மோகன் அரசை தரை மட்டம் ஆக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆந்திர தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற முதலில் பவன் கல்யாண் சந்திரபாபு  நாயுடுவை உள்ளே அழைத்து வந்தார். இதில் அவருக்கு சில சீட்கள் குறைந்தாலும் அதுகுறித்து அவர் கவலை படவில்லை. சேவ் தி ஸ்டேட் பிரம் ஜெகன் என தன் பிரச்சாரத்தை முழுவீச்சாக நடத்தினார். தேர்தலுக்கு முன்னரே தன்னுடைய அரசியல் நகர்வை சரியாக கையாண்டார்.

அதையடுத்து தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டு 175 இடங்களில் 135 இடங்கள் வென்றது. இதில் பவன் கல்யாண் கட்சிக்கு 21 இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி 25க்கு 21 இடங்களை வென்றது. இதை தொடர்ந்தே பவன் கல்யாண் துணை முதல்வரை பதவியை கேட்டு இருக்கிறார்.

அதற்கு சந்திரபாபு நாயுடு தரப்பும் ஓகே சொல்லியதை அடுத்து தற்போது அதிகாரப்பூர்வ துணை முதல்வராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி, வனத்துறை, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளத. ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் கட்சி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொடர்ந்து 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை!.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு…

google news

Cricket

வாஷ்-அவுட் தானா ப்ளான்?…அட்டாக் மூடில் இந்திய அணி…

Published

on

Indian Team

இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு, போதிய வெளிச்சமின்மை காரணங்களால் போட்டி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. முதல் நாள் ஆட்டம் பாதியில் நின்ற நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நான்காம் நாள் ஆட்டம் தடை ஏதுமின்றி இன்று முழுமையாக நடந்து முடிந்தது.

நூற்றி ஏழு ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த வங்கதேசம் தனது பேட்டிங்கை தொடர்ந்தது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர் பங்களாதேஷ் அணியினர்.

Ind Batting

Ind Batting

இருநூற்றி முப்பத்து மூன்று ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது அந்த அணி. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் டுவண்டி – டுவண்டி போட்டியில் வளையாடுவதைப் போல அதிரடியாக ஆடினர்.

முப்பத்தி நான்கு புள்ளி நான்கு ஓவர்களில் இரு நூற்றி என்பத்தி ஐந்து ரன்கள் எடுத்தது இந்திய அணி. ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. துவக்க வீரர் ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடி எழுபத்தி இரண்டு ரன்களை குவித்தார். ராகுல் அறுபத்தி எட்டு ரன்களும், விராட் கோலி நாற்பத்தி ஏழு ரன்களும் எடுத்தனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய வங்கதேச அணி இருபத்தி ஆறு ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியை டிராவாக்க வங்கதேச அணி கடுமையான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருபத்தி ஆறு ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நேரத்தில் போட்டியை வென்று வங்கதேச அணியை வாஷ்-அவுட் செய்யும் முனைப்பினை இந்திய அணி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

Cricket

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

Published

on

Ind vs Ban

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்த நிலையில், இரண்டாவது போட்டியை எதிர்கொண்டு வருகிறது இந்த அணி.

முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில்  பாதியில் நிறுத்தப்பட்டது முதல் நாள் ஆட்டம். ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையில் காரணமாக தடைபட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது.

இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மலமலவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது வங்கதேச அணி.

Ind Bowling

Ind Bowling

நிறுத்தப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் போது நூற்றி ஏழு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி நான்காம் நாளான இன்று அறுபத்தி ஆறு ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் இருநூற்றி ஐந்து ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சில் அதிரடி காணப்படும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.  இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

வங்கதேச அணியின் மொனிமுல் ஹக் நூற்றி இரண்டு ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று விளையாடி வருகிறார். அவருடன் மெஹதி ஹசன் மிராஸ் ஆறு ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்து வருகிறார் உணவு இடைவேளையின் போது.

google news
Continue Reading

Cricket

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

Published

on

Virat Kohli

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று முன்தினம் துவங்கியது. மழையால் டாஸ் தாமதமான நிலையில் வங்கதேசம் முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்  போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் நேற்று கைவிடப்பட்டது தொடர் மழை காரணமாக, இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்று நிறுத்தப்பட்டது. இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி புதிய சாதனையை இந்த தொடரில் படைப்பார் என அதிகம் எதிர்பார்க்கபடுகிறது.

Kohli

Kohli

இன்னும் நூற்றி இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்தால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒன்பதாயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி விடுவார் இவர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பதனாயிரம் ரன்களைக் கடக்கும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை மிக்க இலக்கை அடைவதற்கான வாய்ப்பும் வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் நடந்துவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடர்ந்து நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இரண்டு நாள் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்ட நிலை நீடித்தால் விராட் கோலியின் இந்த சாதனை தள்ளிப்போகும் நிலையும் உருவாகி உள்ளது. அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்கள் இருந்தாலும் மீதமுள்ள இரண்டு நாள் விளையாட்டும் தடை இல்லாமல் நடக்க வேண்டும், கோலி சாதனையை இந்த தொடரிலேயே நிகழ்த்த வேண்டும் என்பதுவே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

google news
Continue Reading

india

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

Published

on

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர் தான் குமாரசாமி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என சொல்லியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்தால் தானும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என தெரிவித்துள்ளார்.

Siddaramaiah

Siddaramaiah

கர்நாடகா மூடா நில முறைகேடு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்த ராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுத்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து சொல்லி வருகிறது.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்தராமையா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் ஜாமீனின் உள்ள மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும். அவர்கள் பதவி விலகினால் தானும் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

Cricket

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

Published

on

Rain-Play

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி தொடர்களில் விளையாட வந்துள்ள வங்கதேச அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்றது. முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்தது.

துவக்கத்தில் இந்திய வீரர்களை அசைத்துப் பார்த்த பங்களாதேஷ் அணியை ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை தங்களது அபாரமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சினால் திணறடித்தனர். போட்டி நடக்க வேண்டிய ஐந்து நாட்களுக்குள்ளாகவே இரண்டு இன்னிங்ஸ்களும் முடிவடைந்து பங்களாதேஷ் பரிதாபமாக தனது வெற்றியை இந்திய அணியிடம் பறிகொடுத்தது.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று துவங்கியது.

Kanpur

Kanpur

டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மூன்று விக்கெட்டுகளை இழந்து நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்தது வங்கதேச அணி முப்பத்தி ஐந்து ஓவர்கள் நிறைவடைந்திருந்த நிலையில்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தங்கு தடை ஏதுமின்றி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. பலத்த மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் நடைபெறாமல் போனாலும் நாளை முழுமையாக போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.

google news
Continue Reading

Trending