அரசுக்கு தெரியாமல் விற்ற கள்ளச்சாராயம் விஷமாகி கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரம் பகுதியில் 49க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். எதனால் இத்தனை உயிரிழப்பு? சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் கொடுக்கும் ஆபத்துக்கள் குறித்த முக்கிய தகவல்கள்.
பொதுவாக சாராயத்தில் எத்தில் ஆல்கஹால் கலப்பதுதான் வழக்கம். இது உடனே பெரிய அளவில் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் எந்தவித பக்கவிளைவுகளையும் கொடுக்காது. ஆனால் சில நேரங்களில் கள்ளச்சாராயமாக விற்கப்படுவதில் மெத்தனால் கலப்பது அடிக்கடி நடந்து வருகிறது.
அதை வாங்கி குடிப்பவர்கள் அடுத்த சில மணி நேரங்களில் பெரிய அளவில் உடல் நல பாதிப்புகளை சந்திப்பதும். திடீரென இறந்தும் விடுகின்றனர். மெத்தனாலில் எத்திலை விட அதிக அளவில் நச்சுத்தன்மை இருக்கிறது. பல இடங்களில் மெத்தனால் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
உடை தயாரிப்பு, பிளாஸ்டிக் தயாரிப்பு, பெயிண்ட் தயாரிப்பு உள்ளிட்ட இடங்களில் தான் அதிகமாக மெத்தனால் பயன்பாடு இருந்து வருகிறது. உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே மெத்தனாலை முறையாக பயன்படுத்த முடியும். ஆனால் சிலர் சாராயத்தில் அதிக அளவில் போதை தரும் என இதை கலந்து விற்கின்றனர்.
இதனால் மெத்தனால் உடலுக்குள் சென்று நியூரான்களை பாதித்து உடனே உயிரிழப்புகளை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு இது நிரந்தர பார்வை இழப்பையும் கொடுக்கிறது. மேலும் நரம்பு மண்டலங்களையும், நுரையீரலையும் அடுத்த சில மணி நேரங்களில் செயல் இழக்க வைத்து உயிரை எடுத்து விடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அவையில் இருந்து கேட்க விரும்பாதவர்கள் இந்த வீடியோவை காணலாம்… அதிரடி காட்டிய தமிழக முதல்வர்…
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…