இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் மனித வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்டது. மொபைல் போன் பேசுவதற்கு மட்டுமல்லாமல் நமது வங்கி கணக்கிலிருந்து நமக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் மொபைல் போன் மூலம் நாம் பெறுகிறோம். மேலும் இதன் மூலம் நாம் எந்த வணிக நிறுவனத்திற்கும் பணத்தை செலுத்தவோ அல்லது திரும்ப பெறவோ முடிகிறது. இத்தகைய மொபைல் போம் தொலைந்து போனால் நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது. இதற்கென அரசாங்கம் தற்போது ஒரு இணையத்தினை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாம் நமது மொபைல் போம் தொலைந்தாலோ அல்லது எவரேனும் திருடினாலோ சுலபமாக கண்டுபிடுத்து கொள்ளலாம்.
இந்த வசதிக்காக நமது அரசாங்கம் சஞ்ஜார் சாதி(Sanchar saathi) எனும் ஒரு இணையத்தினை கொண்டுவந்துள்ளது. இந்த இணையத்தின் மூலம் நாம் தொலைத்த போனை கண்டுபிடிக்க நமக்கு அந்த மொபைலின் IEMI எண் தெரிந்திருக்க வேண்டும். இந்த எண்ணானது நாம் முதலில் மொபைல் வாங்கும் பொழுது அதனுடன் வரும் பெட்டியில் இருக்கும்.
இந்த வெப்சைட்டில் நாம் புகார்களை தெரிவிக்க நாம் முதலில் http://www.sancharsaathi.gov.in என்ற முகவரிக்கு சென்று அதில் நமது விவரங்களை கொடுக்க வேண்டும். மேலும் இதன் மூலம் நாம் நமது தொலைந்த மொபைல் போன் மற்றும் நமது சிம் கார்டினை பிளாக் செய்து கொள்ளலாம். நமது மொபைல் போன் எப்போது மீண்டும் கிடைக்கின்றதோ அப்போது நாம் அதனை அன்பிளாக் செய்தும் கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் இதுவரை 40 லட்சம் மோசடி புகார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 36 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சஞ்சார் சாத்தி போர்டல் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. எனவே இனி நமது மொபைல் போன் தொலைந்தால் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம்.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…