ஏசி கிளாஸ் ரூம், ஸ்மார்ட் போர்டுன்னு கலர் கலரா விளம்பரம் கொடுத்துட்டு, கட்டண விவரத்தை மட்டும் நோட்டீஸ் போர்டுல ஒட்ட சொன்னா நெஞ்சு வலிக்குதா? பீஸ் வாங்குறது என்னவோ பேரண்ட்ஸ் கிட்டதான்… ஆனா அதை வெளில சொல்ல மட்டும் உங்களுக்கு ஏன் வெட்கம்? நீங்க பண்றது எஜுகேஷன் பிசினஸ் இல்ல… அதுக்கு பேருதான் ‘கல்விக் கொள்ளை’! உங்க ஆட்டத்தை அடக்க தான் நீதிபதியோட அதிரடி உத்தரவு..

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளும் தங்களின் கட்டண விவரங்களை பள்ளி அறிவிப்புப் பலகைகளில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்ற