Connect with us

latest news

ஆப்பிள், ஆப்பிள் விஷன் ப்ரோ கண்களாலேயே கட்டுப்பத்தலாம்.. ஆப்பிள் விஷன் ப்ரோ-வில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..?

Published

on

apple pro vision

2007 ஆம் ஆண்டு ஐபோன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய அறிமுகம் சமீபத்திய WWDC 2023 நிகழ்வில் அரங்கேறியது. ஆப்பிள் விஷன் ப்ரோ என அழைக்கப்படும் புதிய சாதனம், அறிமுகமான நொடி முதல் தற்போது வரை உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு லீக் மற்றும் ரெண்டர்களின் மூலம் அறியப்பட்டு வந்த ஆப்பிள் ஏ.ஆர். மற்றும் வி.ஆர். ஹெட்செட் இந்த ஆண்டு WWDC நிகழ்வில் உண்மையாகி இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை சாதனத்திற்கு ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ என்று பெயரிட்டுள்ளது. புதிய சாதனம் பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

apple vision  pro

apple vision pro

ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ சாதனத்தை ஸ்பேஷியல் கம்ப்யுட்டர் என்று அழைக்கிறது. முற்றிலும் புதிய ஸ்பேஷியல் கம்ப்யுட்டர் சாதனம்- டிஜிட்டல் தரவுகளை நிஜ உலகில், மிக நேர்த்தியாக இணைத்து, எவ்வித சிரமமும் இன்றி பயனர்கள் நிஜ உலகில் மற்றவர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க செய்கிறது. இந்த ஹெட்செட் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மீது விர்ச்சுவல் உலகை மிக நேர்த்தியாக உருவாக்குகிறது.

அளவில் மிக மெல்லியதாக காட்சியளிக்கும் விஷன் ப்ரோ தோற்றத்தில் ஸ்கை காகில்ஸ் போன்று காட்சியளிக்கிறது. இதன் முன்புற பேனல் டிண்ட் செய்யப்பட்டு, இதனை அணிபவருக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்கிறது. இந்த ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பேண்ட் மற்றும் டயல் வழங்கப்படுகிறது.

apple vision  pro

apple vision pro

ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்போரும், விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ பயன்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் ஜெய்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. விஷன் ப்ரோ மாலில் இரண்டு மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இரு டிஸ்ப்ளேக்களும் 4K ரெசல்யூஷனில், ஸ்டாம்ப் அளவிலேயே உள்ளன. அகலமான தோற்றத்தை அனுபவிக்க செய்யும் நோக்கில், டிஸ்ப்ளேக்களை நீட்டிக்க மூன்று லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இதில் மொத்தமாக 12 கேமராக்கள், 5 சென்சார்கள் மற்றும் 6 மைக்ரோபோன்கள் உள்ளன. இதில் உள்ள கேமராக்கள் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி வழங்குகின்றன. இரண்டு ஐ.ஆர். கேமராக்கள், எல்இடி லைட்கள் கண்களை டிராக் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன. ஆப்பிள் விஷன் ப்ரோ மாடல் M2 சிப் மற்றும் புதிய R1 சிப் மூலம் இயங்குகிறது. இவை தரவுகளை அதிவேகமாக இயக்கி, ஹெட்செட் சீராக இயங்குவதை உறுதி செய்கின்றன.

apple vision  pro

apple vision pro

இந்த ஹெட்செட் விஷன் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இந்த இண்டர்ஃபேஸ் முப்பரிமாண தோற்றத்தை வழங்குகிறது. இது ஐபோன் மற்றும் ஐபேட் செயலிகளின் சப்போர்ட் கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஹெட்செட் ஆப்பிள் ஆப்களை மட்டுமே இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. விஷன் ப்ரோ மாடலின் அம்சங்களை கண்களாலேயே கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்செட்-இன் மேல்புறம் டிஜிட்டல் கிரவுன் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது.

முழு சார்ஜ் செய்தால் இந்த ஹெட்செட் இரண்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. பிளக்-இன் செய்த நிலையில், நாள் முழுக்க பயன்படுத்த முடியும். மற்ற ஹெட்செட்களை போன்று இல்லாமல், இதனை பயன்படுத்துவோரின் கண்களை மற்றவர்களும் பார்க்கலாம். விஷன் ப்ரோ ஹெட்செட் மூலம் திரைப்படம் பார்க்கும் போது திரையரங்கில் இருந்து பார்ப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும். இத்துடன் ஸ்பேஷியல் ஆடியோ அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபோன்களில் ஃபேஸ் ஐடி அம்சம் போன்றே இதில் ஆப்டிக் ஐடி அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இது பயனரின் கண்களை ஸ்கேன் செய்து ஹெட்செட்-ஐ அன்லாக் செய்கிறது. ஆப்டிக் ஐடி விவரங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு உள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?!. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி!..

Published

on

yogi

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள்.

அதில் பலரும் பாபாவின் காலடி மண்ணை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதில் சிக்கிய பலரும் மூச்சி முட்டி இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிதய்நாத் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘சொற்பொழிவு முடிந்ததும் போலே பாபாவை நோக்கி மக்கள் முண்டியடித்து சென்றதால் விபத்து ஏற்பட்டது. அவரை நோக்கி மக்கள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்’ என அவர் கூறினார்.

google news
Continue Reading

india

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா!. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்..

Published

on

hemanth

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர் சம்பாய் சோரன். இவர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் ஹேமந்த் சோரன்.

சட்ட விரோத பணிவர்த்தனை வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராக மாறவிருக்கிறார். தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் அமர வைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய சம்பயி சோரன் ‘ கடந்த சில நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததால் மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பி வந்திருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்’ என கூறினார்.

google news
Continue Reading

india

மேற்கூறையில் இருந்து பிச்சுகிட்டு கொட்டும் தண்ணீர்… ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிகள் அவதி… வைரல் வீடியோ…!

Published

on

வந்தே பாரத் ரயிலின் மேற்கூறையிலிருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அவுதி அடைந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டெல்லியில் இருந்து வாரணாசி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. ட்ரெயினில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ ஒன்றை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் பகிர்ந்த பயணி இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக வடக்கு ரயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இருந்து இந்த நீர்க்கரசிவு ஏற்பட்டு இருக்கலாம். பயணிகள் சிரமப்பட்டதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இதனை சரி செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று பதிவிட்டு இருந்தது.

இருப்பினும் ரயிலில் இருந்து நீர் ஒழுகும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் ரயில்வே துறையின் அலட்சியத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

google news
Continue Reading

latest news

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

Published

on

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெரம்பலூர், கடலூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், மதுரை, விழுப்புரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேற்கு திசை காட்டின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் ஏழாம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசம்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

google news
Continue Reading

latest news

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து… கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா… என்னதான் நடக்குது..

Published

on

கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்திருக்கின்றார்.

தமிழகத்தில் சென்னை மாநகராட்சியை தொடர்ந்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில் 97 பேர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். மூன்று பேர் மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர்.

இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகின்றார். மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. அது மட்டும் இல்லாமல் கல்பனாவின் அதிகாரத்தில் அவரின் கணவர் ஆனந்தகுமார் தலையிட்டு வருகின்றார். இதன் காரணமாக திமுக கவுன்சிலர் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிய அளவுக்கு நம்பிக்கை பெறாததால் திமுக கவுன்சிலர்களே தங்களது எதிர்ப்பை காட்டி வந்தார்கள்.

இதனால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறியிருந்தார் கல்பனா. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியிருக்கின்றார். இந்த கடிதத்தை ஆணையரும் ஏற்றுக்கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.

இப்படி இருக்க அடுத்த சிறிது நேரத்தில் நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். நெல்லை மாநகராட்சியில் திமுக மேயராக இருந்து வருபவர் பி எம் சரவணன். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் பல பிரச்சினைகள் நிலவிய வந்துள்ளது. சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் கலந்து கொள்ள திமுக கவுன்சிலர்களே வராத காரணத்தினால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழலில் சென்னை பெயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இன்று கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி இருக்கின்றார் சரவணன். முதல்வர் மு க ஸ்டாலின்  அறிவுறுத்தலின் பெயரில் தான் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

Trending