Connect with us

tech news

இனி உங்க ஸ்க்ரீனை எல்லாரும் பாக்கலாம்..! வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தை உறுதிப்படுத்திய ஜுக்கர் பெர்க்..!

Published

on

WhatsappScreenShare

செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்அப் ஆனது பயனர்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு புதிய அம்சங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, ஸ்க்ரீன் ஷேரிங் என்ற புதிய அம்சத்தை வெளியிடப் போவதாக அறிவித்தது.

அதன்படி, இந்த அம்சத்தை பீட்டா பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் சோதனைக்காக வெளியிட்டது. தற்பொழுது இந்த அம்சத்தின் சோதனை ஆனது முடிவடைந்த நிலையில், அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர் பெர்க் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அம்சத்தில் பயனர்கள் தங்களது மொபைல் ஸ்கிரீனை வாட்ஸ்அப்பில் வீடியோ காலில் இருப்பவர்களுக்கு ஷேர் செய்ய முடியும். அதாவது, கூகுள் மீட் மற்றும் ஜூம் (Zoom) போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் இருப்பது போல் பயனர்கள் தங்களது ஸ்கிரீன்களை ஷேர் செய்ய முடியும்.

வாட்ஸ்அப்பில் ஸ்க்ரீன் ஷேரிங் செய்வதற்கு பயனர்கள் வீடியோ கால் செய்தவுடன், இடதுபக்கம் கீழ்முனையில் உள்ள ஸ்கிரீன் ஷேர் ஐகானைத் தேர்வு செய்து தங்களது திரையில் இருப்பதை பகிர்ந்து கொள்ளலாம். ஸ்க்ரீன் ஷேரிங் தொடங்கியவுடன் திரையில் நாம் பார்க்கும் அனைத்தையும் நம்முடன் காலில் இருப்பவரும் பார்க்கமுடியும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

tech news

தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு – விரைவில் சென்னையில்..

Published

on

பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட 4ஜி சேவையை தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விரைவில் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது.

அடுத்த மாத இறுதிக்குள் நாடு முழுக்க பிஎஸ்என்எல் 4ஜி சேவை வெளியீடு வழங்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரை பிஎஸ்என்எல் நிறுவனம் முதற்கட்டமாக IX.2 திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 4ஜி சேவையை வழங்க 2114 4ஜி டவர்களை கட்டமைக்கிறது.

4ஜி சேவையை வெளியிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை பாபா சுதாகார ராவ், பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் முன்னிலையில் துவங்கப்பட்டது.

அதன்படி அன்னமலைச்சேரி, அத்திப்பேடு, எலவம்பேடு, கொளத்தூர், கோரமங்களம், எல்என்டி காட்டுப்பள்ளி, மீஞ்சூர், நொச்சிளி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, பூனிமாங்காடு, ஆர்கே பேட்டை, செம்பேடு, சீர்காளிகாபுரம், திருப்பளவைனம், திருவெள்ளைவாயல், வெங்கனூர் மற்றும் வீரானத்தூர் ஆகிய பகுதிகளில் பயனர்கள் பிஎஸ்என்எல் 4ஜி பயன்படுத்தலாம்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 16.25 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் விரைவில் துவங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

google news
Continue Reading

tech news

பயனர் விவரம் லீக் ஆனதா? ஏர்டெல் விளக்கம்

Published

on

ஏர்டெல் நிறுவனம் தனது பயனர் விவரங்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் படி பயனர் விவரங்கள் திருடப்பட்டது குறித்து எங்களுக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

மேலும், இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு ஏர்டெல் மதிப்புகளை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. முன்னதாக வெளியான தகவல்களின் படி ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் சுமார் 375 மில்லியன் பேரின் தகவல்கள் திருடப்பட்டு, டார்க் வெப் எனப்படும் தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஏர்டெல் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர்டெல் பயனர் விவரங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏர்டெல் மதிப்புகளை கெடுப்பதற்காகவே இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டது. இது குறித்து நாங்கள் முழுமையான ஆய்வு நடத்தியுள்ளோம். ஏர்டெல் சிஸ்டம்களில் எவ்வித தகவல்களும் திருடுபோகவில்லை, என்று தெரிவித்துள்ளது.

பயனர் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் சென்சென் என்பவர், ஏர்டெல் சேவையை பயன்படுத்தும் 375 மில்லியன் பேரின் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் உள்ளதாக குறிப்பிட்டு அதில் போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி, ஆதார் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இந்த தகவல்களை விற்காமல் இருக்க 50 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 41 லட்சத்து 74 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஹேக்கர் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார். எனினும், இதனை உறுதிப்படுத்தும் வகையில், மற்ற பதிவுகள், ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் சாம்பில் டேட்டா என எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

tech news

டவுன்லோட்களில் மாஸ் காட்டிய கூகுள் போட்டோஸ் – எத்தனை கோடிகள் தெரியுமா?

Published

on

கூகுள் நிறுவனத்தின் போட்டோஸ் ஆப் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் புதிய மைல்கல் எட்டி அசத்தியுள்ளது. உலகில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்களில் டீஃபால்ட் மேனேஜர் மற்றும் கிளவுட் ஸ்டோரேத் ஆப்-ஆக கூகுள் போட்டோஸ் இருக்கிறது.

2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் போட்டோஸ் ஆப் பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் மற்றும் டேப்லெட் மாடல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் போட்டோ கேலரி செயலியாக இருந்து வருகிறது. இந்த ஆப் பயனர்கள் தங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை கிளவுட் ஸ்டோரேஜில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த செயலியில் தற்போது ஏராளமான ஏஐ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகமாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், கூகுள் போட்டோஸ் ஆப் உலகளவில் 10 பில்லியன் அதாவது 1000 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு கிடைப்பதால், இது உண்மையில் டவுன்லோட் செய்யப்பட்ட கணக்குதானா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முன்னதாக 2020 ஆம் ஆண்டு இந்த செயலி 5 பில்லியன் அதாவது 500 கோடி டவுன்லோட்களை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. சமீப ஆண்டுகளில் கூகுள் போட்டோஸ் ஆப் ஆண்ட்ராய்டு சாதனங்களில் புகைப்படங்களை நிர்வகிக்க முதன்மை செயலியாக மாறியுள்ளது. சாம்சங், ஒன்பிளஸ் என முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் கூகுள் போட்டோஸ் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுவிடுகிறது.

ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், கூகுள் க்ரோம், கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ், கூகுள் பிளே சர்வீசஸ், கூகுள் சர்ச், யூடியூப் போன்ற செயலிகள் டவுன்லோட்களில் 1000 கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

tech news

இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?

Published

on

உலகளவில் முன்னணி ஓடிடி தள சேவைகளில் ஒன்று நெட்ப்ளிக்ஸ் (Netflix). கடந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் வழங்கி வந்த குறைந்த விலை விளம்பரம்-இல்லா சலுகை திட்டத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் நீக்குவதாக அறிவித்தது.

இந்த விளம்பரம்-இல்லா குறைந்தவிலை சலுகை திட்டம் நெட்ப்ளிக்ஸ் வழங்கிவந்ததில் குறைந்த விலை சலுகை ஆகும். முன்னதாக இந்த சலுகை திட்டம் புதிய சந்தாதாரர்களுக்கு மட்டும் நீக்கப்பட்டது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே சேவையை பயன்படுத்தி வரும் சந்தாதாரர்களுக்கும் விளம்பரம்-இல்லா குறைந்த விலை சலுகை திட்டத்தை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

சலுகை திட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விளம்பரங்கள் அடங்கிய இலவச சலுகை திட்டத்தை அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது.

பயனர்கள் விளம்பரம் இன்றி நெட்ப்ளிக்ஸ் சேவையை பயன்படுத்த சற்றே விலை உயர்ந்த ஸ்டான்டர்டு அல்லது பிரீமியம் சலுகை திட்டங்களை ரீசார்ஜ் செய்யலாம். அமெரிக்காவில் ஸ்டான்டர்டு மற்றும் பிரீமியம் சலுகை திட்டங்களின் மாதாந்திர கட்டணம் முறையே 15.49 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1300 மற்றும் 22.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நெட்ப்ளிக்ஸ் அறிமுகம் செய்வதாக கூறப்படும் விளம்பரங்கள் அடங்கிய சலுகை திட்டம் இலவசமாக வழங்கப்படும் என்றும் இது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தொலைகாட்சி நெட்வொர்க்குகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

google news
Continue Reading

tech news

உலகில் த்ரெட்ஸ் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இந்தியர்கள்

Published

on

மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக செயலி த்ரெட்ஸ் (Threads). இந்த சேவை வெளியாகி முதலாம் ஆண்டு நிறைவுபெற உள்ளது. எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்திற்கு போட்டியாக கடந்த ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி த்ரெட்ஸ் துவங்கப்பட்டது. த்ரெட்ஸ் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவுபெறுவதை ஒட்டி மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதன் வளர்ச்சி குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், த்ரெட்ஸ் சேவையை உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் 175 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். எனினும், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை சதவீதம் பேர் த்ரெட்ஸ் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. த்ரெட்ஸ் தளத்தில் தற்போது 50 மில்லியனுக்கும் அதிக டாபிக் டேக் (Topic Tags) உள்ளன.

இதில் திரைப்படங்கள், தொலைகாட்சி, ஓடிடி மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்தவை அதிகம் இடம்பெற்றுள்ளன. இத்துடன் பிரபலங்கள் தொடர்பான உரையாடல்கள் அதிக கவனம் பெற்று இருக்கிறது. மற்ற நாட்டு பயனர்களுடன் ஒப்பிடும் போது, இந்தியர்கள் மற்றவர் பதிவுகள், வீடியோக்களில் தங்களது நண்பர்களை அதிகளவில் டேக் செய்கின்றனர்.

த்ரெட்ஸ் செயலியில் தேசிய, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல், டி20 உலகக் கோப்பை, மகளிர் பிரீமியர் லீக் உள்ளிட்டவை குறித்து அதிகம் விவாதிகப்பட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர்கள் த்ரெட்ஸ் செயலியில் அதிக ஆர்வும் காட்டி வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.

google news
Continue Reading

Trending