latest news
ஆற்றல் குறைபாடுள்ளவர்களுக்கு அசத்தல் அம்சங்கள் அறிமுகம் செய்த ஆப்பிள்!
![Apple-accessibility-features - Cinereporters Info Apple-accessibility-features](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/Apple-accessibility-features.jpg)
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் முற்றிலும் புதிய மென்பொருள் அம்சங்களை அறிவித்து இருக்கிறது. புதிய அம்சங்கள் பல்வேறு குறைபாடு கொண்டிருப்பவர்கள் மற்றும் தகவல் பரிமாற்ற சவால்களை எதிர்கொண்டு வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆன்-டிவைஸ் மெஷின் லெர்னிங் பயன்படுத்தி, பயனரின் தனியுரிமையை பாதுகாத்து, அனைவருக்குமான சாதனங்களை வழங்க வேண்டும் என்ற ஆப்பிள் நிறுவன குறிக்கோளை வெளிப்படுத்தும் வகையில் புதிய அம்சங்கள் அமைந்திருக்கின்றன. அக்ஸசபிலிட்டியை மேம்படுத்தும் வகையில், ஆப்பிள் அறிமுகம் செயதிருக்கும் சில புதிய அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களுக்காக அசிஸ்டிவ் அக்சஸ்
![Apple-accessibility-features-1 - Cinereporters Info Apple-accessibility-features](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/Apple-accessibility-features-1-1024x614.jpg)
Apple-accessibility-features
அசிஸ்டிவ் அக்சஸ் (Assistive Access) திட்டத்தின் கீழ் அறிவாற்றல் குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் புரிந்து கொண்டு பயன்படுத்தும் வகையில் ஆப்ஸ் மற்றும் அனுபவங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. இது மக்கள் வழங்கிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் போன் மற்றும் ஃபேஸ்டைம், மெசேஜஸ், கேமரா, மியூசிக் உள்ளிட்டவை இயக்க அதிக காண்டிராஸ்ட் பட்டன்கள், அளவில் பெரிய எழுத்துக்கள், குறைபாடுள்ளவர்களின் நம்பத்தகுந்த உதவியாளர்களுக்கு விசேஷ டூல்கள் வழங்கப்படுகின்றன. எழுத்து வடிவில் அம்சங்களை இயக்க விரும்புவோருக்காக சிறப்பான தோற்றத்தை வழங்க க்ரிட் (Grid) சார்ந்த லே-அவுட் அல்லது ரோ (Row) சார்ந்த லேஅவுட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
லைவ் ஸ்பீச் மற்றும் பெர்சனல் வாய்ஸ்
லைவ் ஸ்பீச் அம்சம் கொண்டு பயனர்கள் டைப் செய்யும் தகவல்கள் போன் அல்லது ஃபேஸ்டைம் அழைப்புகளில் குரல் வடிவில் சத்தமாக ஒலிக்கும். இந்த அம்சத்தினை பயனர்கள் மற்றவர்களிடம் நேரில் உரையாடும் போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். எளிதில் உபயோகிக்க, பயனர்கள் அடிக்கடி பயன்படுத்த நினைக்கும் வார்த்தைகளை தனியே சேமித்துக் கொள்ள முடியும்.
பெர்சனல் வாய்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் குரல் போன்றே கேட்க்கும் ஒலியை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த அம்சம் சாதனத்தில் உள்ள ஆன்-டிவைஸ் மெஷின் லெர்னிங் கொண்டு பயனர் விவரங்களை தனிமைப்படுத்தி, பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. இந்த அம்சம் லைவ் ஸ்பீச் உடன் இணைந்து செயல்படுகிறது.
மேக்னிஃபயரின் டிடெக்ஷன் மோடில் பாயிண்ட் அண்ட் ஸ்பீக்
மேக்னிஃபயரில் (Magnifier) உள்ள பாயிண்ட் அண்ட் ஸ்பீக் அம்சம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் பொருட்களின் மீது எழுதப்பட்டு இருக்கும் சிறிய அளவிலான வார்த்தைகளை அறிந்து கொள்ள உதவுகிறது. இது கேமரா ஆப், LiDAR ஸ்கேனர், ஆன்-டிவைஸ் மெஷின் லெர்னிங் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பயனர்கள் தொடும் பட்டன்களில் உள்ள எழுத்துக்களை எடுத்துரைக்கும். இதர மேக்னிஃபயர் அம்சங்களுடனும் சீராக இயங்கும். பயனர்களின் அருகில் இருக்கும் மக்கள், கதவுகள் மற்றும் படங்களை பற்றி எடுத்துரைக்கும்.
கூடுதல் அம்சங்கள்
![Apple-accessibility-features-2 - Cinereporters Info Apple-accessibility-features](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/Apple-accessibility-features-2-1024x614.jpg)
Apple-accessibility-features
– காது கேட்கும் குறைபாடு உள்ள மேக் பயனர்கள் மேட் ஃபார் ஐபோன் ஹியரிங் சாதனங்களை தங்களது சவுகரியத்திற்கு ஏற்ப அட்ஜ்ஸட் செய்து கொள்ளலாம்.
– குரல் மூலம் டெக்ஸ்ட் எடிட் செய்வோர் சரியான வார்த்தையை பொனெடிக் பரிந்துரைகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். ஐபோன், ஐபேட் அல்லது மேக் சாதனங்களில் வாய்ஸ் கண்ட்ரோல் கைடு மூலம் டச் மற்றும் டைப்பிங்கிற்கு மாற்றாக எவ்வாறு வாய்ஸ் கமாண்ட்களை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
– ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள ஸ்விட்ச் கண்ட்ரோல் வசதியை கொண்டு எந்த ஸ்விட்சையும் விர்ச்சுவல் கேம் கண்ட்ரோலராக பயன்படுத்தி கேம்களை விளையாட முடியும்.
– பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஃபைண்டர், மெசேஜஸ், மெயில், காலெண்டர் மற்றும் நோட்ஸ் போன்ற மேக் (Mac) ஆப்களில் எழுத்துக்களின் அளவை தங்களது வசதிக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
– மெசேஜஸ் மற்றும் சஃபாரியில் குயிக் அனிமேஷன்களை விரும்பாதவர்கள் மோஷன், ஜிஃப் உள்ளிட்டவைகளை படமாக வைத்துக்கொள்ள முடியும்.
– வாய்ஸ்ஓவர் பயனர்கள் சிரி குரல்களை மிகவும் இயற்கையாக ஒலிக்க செய்யலாம். இத்துடன் சிரி எப்படி பேச வேண்டும் என்பதை சிரியின் பேச்சு வேகத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்கள் இந்த ஆண்டு இறுதியில் அனைவரின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
india
ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?!. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி!..
![yogi - Cinereporters Info yogi](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/yogi.jpg)
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள்.
அதில் பலரும் பாபாவின் காலடி மண்ணை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதில் சிக்கிய பலரும் மூச்சி முட்டி இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிதய்நாத் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘சொற்பொழிவு முடிந்ததும் போலே பாபாவை நோக்கி மக்கள் முண்டியடித்து சென்றதால் விபத்து ஏற்பட்டது. அவரை நோக்கி மக்கள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்’ என அவர் கூறினார்.
india
ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா!. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்..
![hemanth - Cinereporters Info hemanth](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/hemanth.jpg)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர் சம்பாய் சோரன். இவர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் ஹேமந்த் சோரன்.
சட்ட விரோத பணிவர்த்தனை வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராக மாறவிருக்கிறார். தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் அமர வைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சம்பயி சோரன் ‘ கடந்த சில நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததால் மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பி வந்திருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்’ என கூறினார்.
india
மேற்கூறையில் இருந்து பிச்சுகிட்டு கொட்டும் தண்ணீர்… ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிகள் அவதி… வைரல் வீடியோ…!
![train 2 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/train-2.jpg)
வந்தே பாரத் ரயிலின் மேற்கூறையிலிருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அவுதி அடைந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டெல்லியில் இருந்து வாரணாசி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. ட்ரெயினில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ ஒன்றை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் பகிர்ந்த பயணி இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக வடக்கு ரயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இருந்து இந்த நீர்க்கரசிவு ஏற்பட்டு இருக்கலாம். பயணிகள் சிரமப்பட்டதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இதனை சரி செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று பதிவிட்டு இருந்தது.
भारत की टॉप मोस्ट पैसेंजर ट्रेनों में एक वंदेभारत देखिए. छत से पानी टपक रहा है. दिल्ली-वाराणसी ट्रैक है और ट्रेन नंबर है 22416. pic.twitter.com/OoPiKbkQOr
— Sachin Gupta (@SachinGuptaUP) July 2, 2024
இருப்பினும் ரயிலில் இருந்து நீர் ஒழுகும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் ரயில்வே துறையின் அலட்சியத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
latest news
அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!
![Chance of rain in 12 districts - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/Chance-of-rain-in-12-districts.jpg)
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெரம்பலூர், கடலூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், மதுரை, விழுப்புரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேற்கு திசை காட்டின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் ஏழாம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசம்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.
latest news
ஒரே நேரத்தில் அடுத்தடுத்து… கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா… என்னதான் நடக்குது..
![meyar - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/meyar.jpg)
கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்திருக்கின்றார்.
தமிழகத்தில் சென்னை மாநகராட்சியை தொடர்ந்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில் 97 பேர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். மூன்று பேர் மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர்.
இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகின்றார். மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. அது மட்டும் இல்லாமல் கல்பனாவின் அதிகாரத்தில் அவரின் கணவர் ஆனந்தகுமார் தலையிட்டு வருகின்றார். இதன் காரணமாக திமுக கவுன்சிலர் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிய அளவுக்கு நம்பிக்கை பெறாததால் திமுக கவுன்சிலர்களே தங்களது எதிர்ப்பை காட்டி வந்தார்கள்.
இதனால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறியிருந்தார் கல்பனா. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியிருக்கின்றார். இந்த கடிதத்தை ஆணையரும் ஏற்றுக்கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.
இப்படி இருக்க அடுத்த சிறிது நேரத்தில் நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். நெல்லை மாநகராட்சியில் திமுக மேயராக இருந்து வருபவர் பி எம் சரவணன். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் பல பிரச்சினைகள் நிலவிய வந்துள்ளது. சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் கலந்து கொள்ள திமுக கவுன்சிலர்களே வராத காரணத்தினால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த சூழலில் சென்னை பெயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இன்று கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி இருக்கின்றார் சரவணன். முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில் தான் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!
-
india2 days ago
தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள்….? சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!
-
latest news2 days ago
மாணவர்களின் கவனத்திற்கு…! நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
-
tech news2 days ago
ஓவராகும் ஓடிடி மோகம்… சப்ஸ்கிரிப்ஷனில் பெத்த தொகையை சேமிக்க சூப்பர் டிப்ஸ்…
-
Cricket13 hours ago
என்னையவா கலாய்ச்சீங்க… டி20ல் முதல் இந்திய வீரராக ஹர்திக் பாண்டியா செய்த சாதனை…
-
Cricket2 days ago
உலகிலேயே அதிகம் பகிரப்பட்ட இன்ஸ்டா போஸ்ட்… இது கோலி கில்லா!..
-
tech news1 day ago
ரூ. 1000 கோடி பட்ஜெட்.. சென்னையில் கேப்ஜெமினியின் புது ஆஃபீஸ்
-
latest news20 hours ago
வார இறுதி நாட்கள்… தமிழக முழுவதும் 5-ம் தேதி முதல் சிறப்பு பேருந்து… வெளியான அறிவிப்பு…!