Connect with us

latest news

ஒழுங்கற்ற மாதவிடாயால் கஷ்டபடுறீங்களா?..அப்போ இத ஃபாலோ பண்ணுங்க..

Published

on

irregular menstrual cycle

ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது தற்போது பல பெண்களின் பிரச்சினையாக உள்ளது. இந்த காலத்து உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் போன்றவைகளாலும் பெரும்பாலான பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை சந்திக்கின்றனர். மாதவிடாயானது வரவேண்டிய தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கும் மேல் தள்ளி போவதை நாம் ஒழுங்கற்ற மாதவிடாய் என கூறுகின்றோம். இந்த காலகட்டத்தில் நமது உணவில் ஏற்படும் ஊட்டசத்து குறைபாடினால் கூட நமக்கு ஒழுங்கற்ற மாதவிடாயை சந்திக்கலாம்.

மேலும் பெண்கள் பொதுவாக உடல் எடை அதிகரிப்பதாலும், உடல் எடையை குறைப்பதாலும், PCOD, PCOS  போன்ற காரணங்களாலும் இப்பிரச்சினையை சந்திக்கின்றனர். சில உணவு பழக்க வழக்கங்கள் நமக்கு இப்பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கலாம்.

மஞ்சள்:

மஞ்சள் நமது இந்திய உணவில் பரவலாக சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் ஒன்றாகும். இதில் இயற்கையாகவே ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் இருப்பதால் இது மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் மஞ்சள் நமது கருப்பை பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகபடுத்துகிறது.

turmaric with milk

turmaric with milk

பட்டை:

சமையலில் வாசனை பொருளாக பயன்படுத்தப்படும் பட்டை ஒரு சிறந்த ஆண்டிஆகிஸிடண்டாக செயல்படுகிறது. மேலும் இது நமது இடுப்பு பகுதிகளில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் நமது மாதவிடாய் சமயத்தில் வரும் வயிற்று வலி போன்றவைகளுக்கு தீர்வாக அமைகிறது. பாலுடன் இதனை கலந்து குடிப்பதனால் மாதவிடாயை சீராக்கலாம்.

milk with cardamom

milk with cardamom

பப்பாளி பழம்:

பப்பாளியில் மிக அதிக அளவு கரோட்டீன் இருப்பதால் இது மாதவிடாய் சுழற்சியை சரிசெய்கிறது. மேலும் பப்பாளி நமது உடலில் உள்ள ஈஸ்டிரோஜனை சமநிலையில் வைக்க உதவுகிறது.

papaya

papaya

பச்சை காய்கறிகள்:

மாதவிடாய் காலத்திலோ அல்லது பிள்ளை பேறு காலத்திலோ பெண்கள் மிக அதிக அளவில் இரத்த இழப்பை சந்திக்க நேரிடலாம். இவ்வாறு உடலில் இரும்புசத்து குறைவதால் நமது உடலில் இரத்த செல்கள் உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல இயலாமல் போய்விடுகிறது. நாம் நமது அன்றாட உணவில் கீரை, பச்சை காய்கறிகளை சேர்ப்பதின் மூலம் நமது உடலில் இரத்ததின் அளவை சமநிலையில் வைக்கலாம்.

spinach

spinach

எனவே கடைகளில் பொறித்த உணவுகள், துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து இயற்கையான உணவுகளை சாப்பிடுவதின் மூலம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கலாம்.மேலும் அதிகாலையில் நடப்பது, தொடர்ச்சியான உடற்பயிற்சி போன்றவைகளாலும் நாம் நமது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சரிசெய்யலாம்.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

Published

on

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதுதவிர, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டும் சிறப்பு திட்டங்கள் மற்றும் திட்டப் பலன்களை பெறவும் ரேஷன் அட்டை மிகவும் அவசியமான ஆவணமாக உள்ளது.

இந்த நிலையில், ரேஷன் அட்டை வைத்திருப்போர் அத்துடன் தங்களது மொபைல் நம்பரை இணைக்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் மூன்றுவகை ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. லைட் கிரீன் ரேஷன் அட்டை வைத்திருப்போர் அரிசி மற்றும் இதர பொருட்களை அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

அநந்யோதயா அன்ன யோஜனா கார்டு மற்றும் காக்கி நிற கார்டு காவல் துறையினருக்காக வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் வெள்ளை கார்டு வைத்திருப்பவர்களுக்கு 3 கிலோ வரை சர்க்கரை கூடுதலாக வழங்கப்படுகிறது.

தற்போது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அத்துடன் தங்களது மொபைல் நம்பரை ஆன்லைன் மூலம் இணைத்துக் கொள்ளும் வழிமுறை நடைமுறையில் உள்ளது. ஆன்லைனில், இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

தமிழக அரசின் tnpds.gov.in என்ற வலைதளம் சென்று மொபைல் நம்பரை ரேஷன் அட்டையுடன் பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர 1967 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு மொபைல் நம்பரை மாற்றுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மற்றும் மொபைல் வழியே மொபைல் நம்பரை இணைக்க முடியாதவர்கள் அருகில் உள்ள தாலுகா அலுவலகம் சென்று ரேஷன் கார்டு உதவி மையங்களில் நேரடியாக மொபைல் நம்பர் இணைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். இதற்கு குடும்ப தலைவரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை உடன் எடுத்து செல்வது அவசியம் ஆகும்.

google news
Continue Reading

latest news

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

Published

on

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்துள்ளது. வட-கிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த திடீர் மழை தமிழக மக்களை ஆனந்தப்படுத்தியிருந்தது.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு  ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை புதிதாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லியிருக்கிறது ஆராய்ச்சி மையம்.

Rain

Rain

வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.

மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் அது குறைந்த காற்றழுத்தமாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால்  ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். 6-ந் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு தென்-மேற்கு பருவமழையின் பொழிவு அதிகமாக இருந்த நிலையில், வட-கிழக்கு பருவ மழையை அதிகமாக எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர் விவசாயிகள்.

 

google news
Continue Reading

latest news

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

Published

on

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப். தொகையை முன்கூட்டியே தனிப்பட்ட காரணங்களுக்காக எடுப்பவர்கள் இனி ரூ. 1 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அறிவித்து இருக்கிறது.

முன்னதாக ஊழியர்கள் தங்களது EPFO கணக்கில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக எடுத்துக் கொள்ளும் தொகை ரூ. 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தத் தொகை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இதுகுறித்து பேசும் போது, “EPFO பங்களிப்பாளராக இருப்பவர்கள், தங்களது குடும்பத்தில் ஏற்படும் அவசரநிலையை கருத்தில் கொண்டு முன்பை விட அதிக தொகையை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக ஒருமுறை எடுத்துக் கொள்ளும் பி.எஃப். தொகைக்கான வரம்பு உயர்த்தப்பட்டு இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

ஊழியர்கள் பி.எஃப். திட்டத்தில் பங்களிப்பாளராக இருக்கும் போது, ஒருமுறை பி.எஃப். திரும்பப் பெறப்படும். எனினும், சில வருங்கால வைப்பு நிதி திரும்பப் பெறுவதற்கான விதிகளில், தனிநபர் தனிப்பட்ட அவசர தேவைகளுக்கு பணத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கின்றன.

மேலும், புதிய பணியில் இணைந்த முதல் ஆறு மாதங்களுக்குள் பி.எஃப். பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ஏற்ப அரசு சட்டத்தை எளிமையாக்கியுள்ளது என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இது குறித்தும் பேசிய அவர், “முன்பு, நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, பி.எஃப். பங்களிப்பாளர்கள் வேலையில் இணைந்த முதல் ஆறு மாதங்களில் கூட பி.எஃப். பணத்தை திரும்பப் பெற முடியும். அது அவர்களின் பணம்,” என்று கூறினார்.

google news
Continue Reading

Cricket

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

Published

on

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட் வாடிக்கையாக மாற்றி வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் போட்டியில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை கடந்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விராட் கோலி கடந்துவிட்ட நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த மைல்கல் மூலம் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் வரிசையில் விராட் கோலி 1000 பவுண்டரிகளை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இதுதவிர தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இந்த சாதனை படைத்த மற்ற வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் டெஸ்ட் போட்டியை பொருத்தவரை, அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர் விராட் கோலி, வங்கதேசம் அணியின் ஷகிப் அல் ஹாசனுக்கு தனது பேட்-ஐ பரிசாக வழங்கினார்.

google news
Continue Reading

latest news

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

Published

on

kulasekarapattinam

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து நவராத்திரி விரத்தை கடைபிடிப்பவர்களும் இருந்து வருகிறார்கள். தமிழகத்தில் தசரா பண்டிகை துவங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டிணம் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது நவராத்திரி விழா. குலசேகரப்படடிணம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் தசரா பண்டிகை கொண்டாட்டங்களும், நவராத்திரி விரதமும் உலகப் பிரசித்தி பெற்றது.

kulasekarapattinam function

kulasekarapattinam function

இந்த நாட்களில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு  விரதமிருந்தும், வேடங்கள் அணிந்தும்  வந்து முத்தாரம்மனை வழிபட்டுச் செல்வார்கள்.

மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இக்கோவின் தசரா கொண்டாட்டங்கள் அதிகமாக உற்று நோக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு அம்மனுக்குகாப்பு கட்டப்பட்டது. இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோயிலுக்கே வந்தடைந்தது.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்று அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டிணத்தில் குவிந்திருந்தனர். கொடி ஏற்றம் நடத்தப்பட்ட பிறகு பக்தர்களுக்கு காப்பு கட்டி விடப்பட்டது.

இன்று இரவு துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி வலம் வரும் வைபவம் நடை பெற உள்ளது. குலசேகரப்பட்டிண தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது.

10-ம் நாள் திருவிழாவின் போது இரவு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன், லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அன்றைய தினம் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

 

 

google news
Continue Reading

Trending