Connect with us

Cricket

முடிந்தவரை விளையாடுவேன்.. குட் நியூஸ் கொடுத்த கேன் வில்லியம்சன்

Published

on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிசயிக்க வைக்கும் வகையில் உலகின் முன்னணி அணிகள் லீக் சுற்று போட்டிகளோடு தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. இதில் நியூசிலாந்து அணியும் ஒன்று. உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காததை அடுத்து, அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும், 2024-2025 ஆண்டுக்கான நியூசிலாந்து அணி வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அறிவித்தார். இவரது அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேன் வில்லியம்சன் முடிவு குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரி ஸ்காட் வீனின்க் கூறும் போது, 2028 வரையிலேனும் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வேண்டும். 2028 டி20 உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இணைந்து நடத்துகின்றன. கேன் வில்லியம்சன் விரும்பினால், அவர் 12 மாதங்களுக்கும் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று தெரிவித்தார்.


இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய கேன் வில்லியம்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நியூசிலாந்துக்காக விளையாடுவதே எனக்கு இப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. என்னால் முடிந்த வரை நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றே விரும்புகிறேன்.”

“நியூசிலாந்துக்காக விளையாடுவதை நான் விரும்புகிறேன். கேப்டனாக எனது பதவிக்காலத்தில் நான் மகிழ்ச்சியான நேரங்களை கடந்துவந்துள்ளேன். இதையே இன்னும் சில ஆண்டுகளுக்கு செய்வது எனக்கு பெருமையான விஷயம். அணியில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகும். இந்த குழுவுடன் இருப்பது அணிக்கு சாதகமாக இருக்கும்வரை, என்னால் முடிந்தவரை நீண்டகாலத்திற்கு இருக்கவே விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

இதே தொடரில் இருந்து நியூசிலாந்து மற்றொரு வீரரான டிரெண்ட் பௌல்ட் இதுவே தனது கடைசி உலகக் கோப்பை தொடர் என்று அறிவித்தார். இவர்களின் வரிசையில் மற்றொரு நியூசிலாந்து வீரர் லாக்கி ஃபெர்குசனும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

google news

Cricket

293 டெஸ்ட் போட்டிகளில் 24 முறை தான்.. புது வரலாறு படைத்த இந்தியா-வங்கதேசம்

Published

on

கான்பூரில் நடைபெற்ற இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி உள்நாட்டில் நடைபெற்ற 18 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடைசியாக எம்.எஸ். டோனி தலைமையிலான இந்திய அணி 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றது. அதன்பிறகு இந்திய அணி விளையாடிய டெஸ்ட் தொடர்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் டாஸ் வென்ற அணி அனைத்து போட்டிகளிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது இதுவே முதல் முறை ஆகும். இந்தியாவில் விளையாடப்பட்ட 293 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 24 போட்டிகளில் தான் ஒரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த 1933 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்தியா வங்கதேசம் தொடரின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் உள்ளது. அதாவது இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அணிகள் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்த சம்பவங்கள் எதுவும் இந்த மைதானங்களில் நடைபெறவில்லை. முன்னதாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் (6), மும்பை வான்கடே மைதானம் (5) மற்றும் மொகாலியில் உள்ள பிசிஏ மைதானம் (5) மைதனங்களில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளன.

சமீபத்திய டெஸ்ட் போட்டிகள் எதுவும் இந்த மூன்று மைதானங்களில் நடைபெறவில்லை. மேலும், இந்தத் தொடர் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் மற்றும் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானங்களில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்து, போட்டியிலும் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும்.

google news
Continue Reading

Cricket

92 ஆண்டுகளில் முதல் இந்திய வீரர்.. ஜெய்ஸ்வாலின் சூப்பர் சாதனை..!

Published

on

வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய வீரர்களில் ஒருவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இளம் இந்திய வீரரான ஜெய்ஸ்வால் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸில் மூன்று அரைசதங்களை விளாசியுள்ளார்.

அதுவும், மழை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி பாதிக்கும் சூழல் உருவான நேரத்தில், இந்திய அணிக்கு தேவையான ரன்களை அதிரடியாக அடித்து அசத்தினார். மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெற்றி இலக்கை துரத்தும் வேளையில், அற்புதமாக அரைசதம் கடந்து வெற்றியை உறுதிப்படுத்தினார். போட்டியில் தனது அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கச் செய்யும் வகையில் ஆடியதோடு, குறிப்பிடத்தக்க சாதனைகளை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

  • இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசிய முதல் இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
  • உள்நாட்டு போட்டிகளில் இந்திய வீரர் ஒரே ஆண்டில் அதிகபட்ச அரைசதங்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் ஜெய்ஸ்வால் எட்டு அரைசதங்களை விளாசியுள்ளார். முன்னதாக குண்டப்பா விஸ்வநாத் (1979), விரேந்திர சேவாக் (2010), சத்தேஷ்வர் புஜாரா (2016), கே.எல். ராகுல் (2017) ஆகியோர் ஒரே ஆண்டில் அதிகபட்சம் ஏழு அரைசதங்களை விளாசியுள்ளனர்.
  • இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், ஜெய்ஸ்வால் பென் ஸ்டோக்ஸ் சாதனையை முறியடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரே எடிஷனில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடம் பிடித்துள்ளார். நடப்பு 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜெய்ஸ்வால் இதுவரை 32 சிக்சர்களை விளாசியுள்ளார்.
  • முன்னதாக 2019-21 தொடரில் பென் ஸ்டோக்ஸ் 31 சிக்சர்களை அடித்தது, சாதனையாக இருந்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் ஒரு சீசனில் 30-க்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்த இரண்டு வீரர்கள் பட்டியலில் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெய்ஸ்வால் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
google news
Continue Reading

Cricket

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

Published

on

Ind vs Ban

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

Test Series

Test Series

டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.

போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.

ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.

நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.

 

google news
Continue Reading

Cricket

கான்பூர் சம்பவம்.. பின்னணியில் கம்பீர்-ரோகித் பிளான்.. டிரெசிங் ரூம் சீக்ரெட் சொன்ன பந்துவீச்சு பயிற்சியாளர்

Published

on

மழை காரணமாக இரண்டு நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி நான்காம் நாள் ஆட்டத்தை எப்படி கொண்டு செல்வது என நிச்சயம் திட்டம் தீட்டியிருக்கும். எனினும், அவை அனைத்தையும் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு இந்திய அணி தனது செயல்பாடுகளில் தீவிரம் காட்டியது. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது, வங்கதேசம் அணியின் விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்தியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்கோர் போர்டை எகிற செய்த சம்பவம் பலருக்கும் நீண்டகாலம் நினைவில் நிற்கும். இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் துவங்கும் முன் இந்திய டிரெசிங் ரூமில் என்ன நடந்தது, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கும் முன் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்ற கேள்விகளுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதில் அளித்துள்ளார்.

“கவுதம் கம்பீரின் மனநிலை கூட, போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, முடிந்த வரை முன்னணியில் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனை சாத்தியப்படுத்த ஒரு தலைவர் முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில், ரோகித் சர்மா இதனை பலமுறை செய்து காட்டிய நிலையில், மீண்டும் அதை நிரூபித்துள்ளார். பந்து பவுன்ஸ் ஆகலாம், மெல்ல கீழேயும் வரலாம் என்ற பிட்ச்-இல் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே சிக்ஸ் அடித்தது.”

“பந்துவீச்சில் சற்று பின்னடைவு ஏற்படலாம். ஆனால், கேப்டன் முன்னணியில் இருந்து செயல்படுவது, அணியை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதை பார்க்க சிறப்பாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இது மிகவும் அருமையாகவும், ரசிக்கும் படியாகவும் இருந்தது. ஒவ்வொருத்தரும் தங்களது பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர், அதனை களத்திலும் பிரதிபலிக்க செய்கின்றனர். மீண்டுவருவதை பார்க்கும் போது அவர்கள் அங்கு சரியாகவே உள்ளனர்,” என்று மோர்னே மோர்கல் தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

கோலி-அஷ்வின் டாக்டிக்ஸ்.. உடனே விழுந்த விக்கெட்

Published

on

இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இரண்டு நாள் ஆட்டத்தில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி காட்டிய வேகம் பல சாதனைகளை படைத்ததோடு, வங்கதேசம் வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நான்காவது நாளில் வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்ய வைத்த ரோகித் சர்மா, நேற்றைய ஆட்டம் முடிவதற்குள் சில விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தீயாக செயல்பட்டார். இதற்கு ஏற்றார் போல் பந்துவீச்சாளர்களை களமிறக்கியதோடு, நினைத்தப்படி இந்திய அணி முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்தினார். நேற்றைய ஆட்டத்தின் நிறைவில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க பல தந்திரங்களை தொடர்ச்சியாக கையாண்டனர்.

அந்த வகையில், ரவிச்சந்திரன் அஷ்வின் சுழலில் சிக்கி வங்கதேசம் அணி இரண்டு விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஒவ்வொரு வீரருக்கும் எப்படி பந்துவீச வேண்டும் என்ற திட்டமிடல் அணியினருடன் எப்போதும் இருக்கும். நேற்றைய ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய குறிப்பிட்ட ஓவரை வங்கதேசம் அணியின் துவக்க வீரரான ஜாகிர் ஹாசன் எதிர்கொண்டார். அப்போது குறுக்கிட்ட இந்திய வீரர் விராட் கோலி, அஷ்வினிடம் ஏதோ கருத்து தெரிவித்தார்.

இதன்பிறகு, அஷ்வின் வீசிய பந்தில் ஜாகிர் ஹாசன் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இடதுகை ஆட்டக்காரரான ஹாசன் பத்து ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸில் 26 ரன்கள் பின்னணயில் உள்ளது.

முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

google news
Continue Reading

Trending