india
உங்களுக்கு பானிபூரி பிடிக்குமா..? 5 முதல் 7 வருடம் தொடர்ந்து சாப்பிட்டால் இந்த பாதிப்பு வரும்.. அதிர்ச்சி தகவல்..!
![panipoori - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/panipoori.jpg)
மக்கள் அதிக விரும்பி சாப்பிடும் பானி பூரிக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருள்களில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பானி பூரி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பானிபூரி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடைகளில் சாப்பிடும் இந்த பானிபூரிகள் உடல்நலத்திற்கு நல்லதா? என்று கேட்டால் அது தயாரிக்கும் விதத்தில் தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகா பகுதிகளில் உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பானி பூரி கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பானி பூரி தயாரிப்பதற்கு பயன்படுத்தி வரும் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பானி பூரி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாஸ் மற்றும் மீட்டா பவுடர் போன்றவற்றில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் அதிக அளவில் இருப்பதாகவும், இது மனித உடலின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் எனக் கூறுகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்களுக்கு விரைவில் தடை விதிக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது பானி பூரியில் பயன்படுத்தப்படும் காரம் மற்றும் மீட்டா பொருட்களில் ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக காரம் சாப்பிடுவதாலும், இதுபோல ரசாயன பொருட்களை பயன்படுத்துவதாலும் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றது.
பானி பூரி தொடர்ந்து 5 முதல் 7 வருடங்கள் சாப்பிட்டு வந்தால் அல்சர் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இது தொடர்பாக அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளரிடம் பேசி முடிவெடுக்கப்படும். 4 முதல் 5 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்த பிறகு கூட்டம் நடத்தி பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு இருக்கின்றது என்று அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே கோபி மஞ்சூரியன் மற்றும் கபாபில் புற்றுநோயை உண்டாக்கும் அதிக தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த உணவுகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
india
மளமளவென சரிந்த 6 மாடி கட்டிடம்… பலர் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்…!
![surat - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/surat.jpg)
குஜராத்தில் ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
குஜராத் மாநிலம் சூரத் நகரின் சச்சின் பாலி என்ற கிராமத்தில் 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதிலிருந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. இந்த கட்டிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
மேலும் அந்த கட்டிடத்தில் வசிக்கும் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறும்படி சூரத் நகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை என சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுக்குள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிக்கிய இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.
இடிப்பாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த கட்டிடம் கட்டப்பட்ட ஆறு ஆண்டுகளில் சிதைவடைந்து விட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
india
பக்தர்கள் கவனத்திற்கு.. இந்த 2 நாள் விஐபி தரிசனம் ரத்து.. திருப்பதியில் அலை மோதும் கூட்டம்..!
![thirupathi - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/thirupathi.jpg)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். பல்வேறு நாட்டில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்து செல்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கட்டுக்கடங்காத அளவிற்கு பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
கூட்டமாக இருந்தாலும், வெயில் மழை என எதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த மூன்று நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமான கூட்டத்தை விட அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்திருக்கிறார்கள். அதிலும் இன்று சனிக்கிழமை என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கின்றது.
பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பதியில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கின்றது. ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வருகிற 9-ம் தேதி மற்றும் 16ஆம் தேதி களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகின்றது.
மேலும் ஆனி வாரம் ஆஸ்தானம் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒன்பதாம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் 12 மணிக்கு பிறகு தான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 5 மணி நேரம் இடைவெளியில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
india
பாட்டு பாடவா, பாடிகிட்டே டீயும் போடவா… பாடிக்கொண்டே டீ போட்ட வியாபாரி… வைரலாகும் வீடியோ…!
![sing - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/sing.jpg)
டீ வியாபாரி ஒருவர் தனது கடையில் பாட்டு பாடிக்கொண்டே டீ போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இன்றைய தலைமுறையினர் இடையே சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது எங்க பார்த்தாலும் மக்கள் போனை வைத்துக்கொண்டு வீடியோ ரீல்ஸ் என்று எடுத்து அதனை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். சிறு சிறு வியாபாரிகள் கூட தங்களை பிரபலமாக்கிக் கொள்வதற்காக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நாகூரை சேர்ந்த டீ வியாபாரி ஒருவரின் கடைக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வந்த வீடியோ மிகப்பெரிய வைரலானது. அதைத் தொடர்ந்து மற்றொரு டீ வியாபாரி ரஜினி ஸ்டைலில் கிளாஸை வீசி வீசி பிடித்து டீ போடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சூரத்தை சேர்ந்த ஒரு டிவி வியாபாரியும் புதுவிதமாக ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கின்றார்.
View this post on Instagram
அவர் பாட்டு பாடிய படியே டீ போடும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. மும்பையை சேர்ந்த பயாணி என்கின்ற புகைப்படக் கலைஞர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கின்றார். சூரத்தில் உள்ள ஒரு பகுதியில் டீக்கடை நடத்தி வரும் விஜய் பாய் பட்டேல் என்பவர் இந்தி பாடல் ஒன்றை ஒரு கையில் மைக்கு பிடித்து, பாடியப்படியே மற்றொரு கையில் டீ தயாரிக்கின்றார்.
கடையில் தேநீர் பருகும் வாடிக்கையாளர்கள் அவரின் பாட்டை ரசித்தப்படியே டீ குடிக்கிறார்கள். அவர் பாடிய பாடலும் அவரது குரலும் கேட்பவர்களுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. இந்த வீடியோவை அந்த புகைப்படக் கலைஞர் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.
india
சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்களால் ஜொலித்த… அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் பங்க்ஷன்…!
![ananth - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/ananth.jpg)
அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே அதிக பணக்கார பட்டியல்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அதேபோல் மகள் ஈஷா அம்பானிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவரின் கடைக்குட்டி ஆனந்த் அம்பானிக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.
கிட்டத்தட்ட பல மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், அமீர்கான் என பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகிலேயே பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தியிருந்தார். மேலும் பல நடிகர்கள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை கோலாகலபடுத்தியிருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் ஆலியா பட், தீபிகா படுகோன் ரன்வீர் சிங், அட்லீ பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திசா பதானி, ஜான்விகபூர், மாதிரி தீட்சி, வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்திருந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களான நிஷான் கிஷான், குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.
india
2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!
![nirmala - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/nirmala.jpg)
2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
-
tech news12 hours ago
தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு – விரைவில் சென்னையில்..
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
World News2 days ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
tech news2 days ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
latest news1 day ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
india11 hours ago
திருமணமாகி இரண்டே வருடம்.. கணவன், மாமியார், நாத்தனார் என குடும்பமாக… ஐடி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு..!
-
latest news1 day ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
latest news1 day ago
my v3 ads: நீதிமன்றத்தில் சரணடைந்த சக்தி ஆனந்தன் – என்ன காரணம்?