Connect with us

tech news

ஐபோன்களுக்கு விலை குறைப்பு- வெளியான சூப்பர் அறிவிப்பு

Published

on

ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஐபோன் 15, ஐபோன் 14 மற்றும் சில ஐபோன் மாடல்கள் விலையை குறைத்துள்ளது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய பட்ஜெட் 2024 அறிவிப்பில் ஸ்மார்ட்போன்களுக்கான சுங்க வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் படி ஐபோன்கள் விலை ரூ. 300 துவங்கி அதிகபட்சம் ரூ. 6000 வரை குறைந்துள்ளது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 300 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் பேஸ் வேரியண்ட் விலை தற்போது ரூ. 79,600 மற்றும் ரூ. 89,600 என மாறி உள்ளன.

இதேபோன்று ஐபோன் 14 மாடல்களுக்கும் ரூ. 300 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை தற்போது ரூ. 69,000 என துவங்குகிறது. ஐபோன் SE சீரிஸ் தவிர, அந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடல் ஐபோன் 13 விலை தற்போது ரூ. 59,600 என மாறி இருக்கிறது.

ஐபோன் SE (2022) விலை ரூ. 2,300 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 47,600 என துவங்குகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை ரூ. 1,34,900 இல் இருந்து ரூ. 1,29,800 என மாறி இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ. 1,59,900 இல் இருந்து ரூ. 1,54,000 என மாறி இருக்கிறது.

முன்னதாக சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை வினியோகம் 6.5 சதவீதம் வரை அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்ட தகவல்களில் 2024 ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சாம்சங் நிறுவனம் 18.9 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

google news

latest news

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

Published

on

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில் அனைத்துவித அரசு சார்ந்த சேவைகளை பெறுவது, சிம் கார்டு பெறுவது, கியாஸ் இணைப்பு, வங்கி கணக்கு என எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயம் என்ற நிலை உள்ளது. ஒருவரின் தனிப்பட்ட அடையாள சான்றாகவும் ஆதார் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இதே போன்று பான் கார்டும் மக்களுக்கு மிக முக்கிய அரசு ஆவணமாக இருந்து வருகிறது. எனினும், இவற்றை எல்லா சமயங்களில் கையில் கொண்டு செல்ல முடியாது. சில வகை அவசிய தேவைகளின் போது, ஆதார் அல்லது பான் கார்டு கையில் இல்லையா? கவலையே வேண்டாம் கையில் மொபைல் இருந்தால் எந்த அரசு ஆவணங்களையும் வாட்ஸ்அப் மூலம் எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பு: அரசு ஆவணங்களை இருந்த இடத்தில் வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கு மத்திய அரசின் டிஜிலாக்கரில் ஏற்கனவே பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும்.

மொபைலில் டிஜிலாக்கர் சேவையை செயல்படுத்த பயனர்கள் அவரவர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனிற்கு ஏற்ற பிளே ஸ்டோரில் இருந்து டிஜிலாக்கர் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பதிவிட்டு, செயலியை பயன்படுத்த விரும்பும் மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு ‘Get Started’ ஆப்ஷனில் ‘Create Account’-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.

இதன்பிறகு திரையில் தோன்று பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் உங்களது தனிப்பட்ட விவரங்களான பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் உள்ளிட்டவைகளை பதிவு செய்து ஆறு இலக்க பாதுகாப்பு குறியீட்டு எண்ணை வழங்க வேண்டும். இவற்றை பதிவிட்ட பிறகு, ‘Submit’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் வரும். இதனை வெற்றிகரமாக பதிவு செய்ததும், உங்களுக்கான டிஜிலாக்கர் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு விடும். இதன் பிறகு டிஜிலாக்கர் சேவைகளை வாட்ஸ்அப் செயலியிலும் பயன்படுத்த முடியும்.

இதற்கு மொபைலில் +91-9013151515 என்ற எண்ணை சேமித்துக் கொள்ள வேண்டும். இனி இந்த எண்ணிற்கு ‘hi’ என குறுந்தகவல் அனுப்பினால், டிஜிலாக்கர் சாட்பாட் பதில் அளிக்கும். இப்போது உங்களின் 12 இலக்க ஆதார் எண் பதிவிட வேண்டும். இதனை சரியாக பதிவிட்டதும், ஓடிபி பதிவிட வேண்டும். இதன் பிறகு டிஜிலாக்கரில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய சேவைகளை அதற்கான ஆப்ஷன்களை க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதில் டிஜிலாக்கரில் உள்ள ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

google news
Continue Reading

latest news

ரியல் லைஃப்ல இத இனி செய்ய மாட்டேன்…மாணவருக்கு ரிஸ்க் கொடுத்த ரீல்ஸ்…

Published

on

Bike

 

ஆன்ட்ராயிட் மொபைல்களின் ஆதீக்கம் உலகம் முழுவதும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. யாராவது ஒருவர் தனது மொபைலை கையில் வைத்து கொண்டு செல்பி எடுப்பது,வீடியோ ஷீட் செய்வது என ஒரு நாளில் ஒரு முறையாவது இந்த காட்சிகளை சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ பார்க்காமல் இருக்க முடியாது.

தங்களது போட்டோ, வீடியோக்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்து, அதை லைக் செய்ய எத்தனை இருக்கிறார்கள் என்பதை ஆராயவே ஒரு கூட்டம் இது போன்ற வீடியோக்கள் மீது அதிக கவனம் செலுத்தியும் வருகிறது.

அதிலும் பலர் இப்போது சோஷியல் மீடியா ரீல்சுக்காக செய்யும் சில காரியங்கள் விபரீத மான முடிவுகளை சந்திக்க வைத்து வருகிறது.

Reels

file picture

ஆனாலும் லைக்குகளுக்காகவும், ஷேர்களுக்காகவும் தங்களது பாதுகாப்பை பற்றி மட்டுமல்லாது பிறரின் நலன்களை பாதிக்கும், அச்சுறுத்தல் தரும் செயல்களைச் செய்து வருவது தொடர்பான செய்திகள் வந்தடைவதும் வழக்கமாகி வருகிறதிருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ரீல்சுக்காக போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்த இடத்தில் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக பல்ஸர் பைக்கை ஓட்டிச் சென்று, அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து ரீல்சுக்காக வலைதளங்களில் அப்லோடு செய்திருக்கிறார்.

பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் ஓட்டிய அம்மாணவரை கைது செய்த திருச்சி காவல் துறையினர் அவர்களது பாணியில் அறிவுரை வழங்கியுள்ளார்கள். காவல் துறையினரின் அறிவுரை மாணவரின் மனதில் நன்கு பதிந்ததையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரியும், ரீல்ஸ் லைக், ஷேர்களுக்காக யாரும் இது போல நடந்து கொள்ள வேண்டாம் எனவும் கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

latest news

யுபிஐ பேமெண்ட் உச்சவரம்பு அதிகரிப்பு.. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

Published

on

இந்தியாவில் வரி செலுத்துவோர் யூனிஃபைடு பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தால் பயனடைவர். தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) வரி செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனை உச்ச வரம்பை உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 24, 2024 தேதியிட்ட தேசிய பேமென்ட் கார்ப்பரேஷனின் சுற்றறிக்கையின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றறிக்கையில், கட்டணம் செலுத்தும் முறையாக யுபிஐ பயன்பாடு அதிகரித்து வருவதால், குறிப்பிட்ட வகை கட்டண முறைகளில் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு இடமளிக்க வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சுற்றறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்:

பரிவர்த்தனை வரம்பு அதிகரிப்பு: யுபிஐ பேமெண்ட்களில் பரிவர்த்தனைக்கு ரூ. 5 லட்சம் வரை வரி செலுத்த முடியும்.

தகுதியான பிற பரிவர்த்தனைகள்: மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐபிஓ-க்கள் மற்றும் ஆர்பிஐ சில்லறை நேரடித் திட்டங்களுக்கான கட்டணங்களுக்கும் இந்த உயர் வரம்பு பொருந்தும்.

நடைமுறைப்படுத்தல்: புதிய வரம்பு செப்டம்பர் 16, 2024 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இருப்பினும், தனிப்பட்ட வங்கிகளுக்கு குறிப்பிட்ட பரிவர்த்தனை வரம்புகள் இருப்பதால், இந்த அதிகரிக்கப்பட்ட வரம்பை ஆதரிக்கிறதா என்பதை பயனர்கள் தங்கள் வங்கிகள் மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கையானது வரி செலுத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதையும், பெரிய பரிவர்த்தனைகளுக்கும் யுபிஐ முறை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.

புதிய வரம்பை பயன்படுத்த விரும்புவோர், அவரவர் பயன்படுத்தும் வங்கிகள் மற்றும் யுபிஐ செயலிகள் புதிய வரம்பை அனுமதிக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் வசதி மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனின் முயற்சியின் ஒரு பகுதியாகவே தற்போது பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

google news
Continue Reading

latest news

ஓய்வூதியம் வாங்குறீங்களா? இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க!

Published

on

ஓய்வூதியம் பெறுபவர்கள் தொடர்ந்து அதனை வாங்க அரசிடம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழந்தவர்கள் பெயரில் பயன் பெறுவது மற்றும் இதர முறைகேடுகளை தடுக்க முடியும். இதன் பொருட்டு ஓய்வூதியம் பெறுவோர், ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.

வயதில் மூத்தவர்கள் ஆயுள் சான்றிதழ் பெறுவதற்கு சிரமம் கொள்ளக்கூடாது, அவர்களுக்கு எளிதில் ஆயுள் சான்று கிடைப்பதை வழிவகை செய்யும் நோக்கில், மத்திய ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஆகியவை அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்பட உள்ளன. இது தொடர்பான அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது.

முன்னதாக 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர்கள் நலச் சங்கங்கள், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஜீவன் பிரமான் ஆகியவற்றுடன் இணைந்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் முகாம்களை ஓய்வூதியர் நலத்துறை வெற்றிகரமாக நடத்தியது. இவற்ரின் மூலம் 1.45 கோடி ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.

இதே வரிசையில், இந்த ஆண்டும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு இதற்கான சிறப்பு முகாம் நவம்பர் 1 ஆம் தேதி துவங்கி நவம்பர் 30 வரை நடைபெறுகிறது. இதனை ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இந்த முகாம்கள் நாடு முழுக்க முக்கிய நகரங்கள், மாவட்ட தலைமையகங்களில் நடைபெற இருக்கிறது. இதோடு ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர் நல சங்கங்கள், தனித்துவ அடையாள அட்டை ஆணையம், ஜீவன் பிரமான் ஆகியவை 157 நகரங்களில் இந்த முகாமை நடத்த உள்ளன.

google news
Continue Reading

latest news

அவசர மருத்துவ செலவு, அரசு வழங்கும் ரூ. 5 லட்சம் – ஈசியா விண்ணப்பிக்க சூப்பர் டிப்ஸ்?

Published

on

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தை விரிவுபடுத்தி, 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அவர்களது வருமானத்தை பொருட்படுத்தாமல் மருத்துவ காப்பீடு வசதியை வழங்க மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

மருத்துவப் பராமரிப்பு, மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு அதிக செலவாவதை கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்கள் தங்களின் நோய்ச் சுமையை நிர்வகிப்பது கடினமாக இருக்கும் என்பதால் இந்தியாவில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

​​இந்தத் திட்டம் வருமானம் அடிப்படையிலும் தகுதியான குடும்பங்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ரூ. 5 லட்சம் வரையிலான வருடாந்திர காப்பீட்டை வழங்குகிறது. பொருளாதார ரீதியாக மக்கள் தொகையில் கீழ்மட்டத்தில் உள்ள 40 சதவீதத்தினர், அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் இந்த திட்டத்தில் ஏற்கனவே பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் நீட்டிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான வருடாந்திர காப்பீடு வழங்கப்படும். இந்த வயதிற்குட்பட்ட சுமார் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலாக 6 கோடி பேர் இதன் மூலம் பயனடைவர்.

சேவை விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு PM-JAY இன் கீழ் புதிய அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி இருப்பதை அறிந்து கொள்வது, திட்டத்திற்கான அடையாள அட்டையை பெறுவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனடைய நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்களா என்பதை சரிபார்க்க வேண்டும். இதற்கு அரசின் “https://abdm.gov.in” என்ற வலைதளம் செல்ல வேண்டும்.

ஆதார் அல்லது ரேஷன் அட்டையை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் சரிபார்க்க முடியும்.

காப்பீடு பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளீர்களா என்பதை ரேஷன் அட்டை போன்ற ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டதும் உங்களுக்கான AB-PMJAY அடையாள எண் உருவாக்கப்படும். இந்த அடையாள எண் கொண்டு டிஜிட்டல் கார்ட்-ஐ ப்ரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

google news
Continue Reading

Trending