100 போலி டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள்… வெளியில் துரத்தப்பட்ட பரபரப்பு சம்பவம்…!

0
119

100க்கும் மேற்பட்ட பயணிகள் போலீஸ் டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியில் அனுப்பி இருக்கிறார்கள்.

மதுரையிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட பயணிகள் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்திருக்கிறார்கள். பாதுகாப்பு சோதனை அனைத்தும் முடிந்து விமான நிலையத்திற்கு செல்லும் போது அவர்களின் டிக்கெட்களை சோதனை செய்த அதிகாரிகள் அப்படி எந்த புக்கிங்கும் நடைபெறவில்லை.

இந்த டிக்கெட்டுகள் போலியானது என்று தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் போலி விமான டிக்கெட் உடன் விமான நிலையத்திற்கு வந்த 100 பயணிகளையும் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பயணிகள்தங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்த ஏஜெண்டை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.

அப்போது நான் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை, எனக்கு தெரிந்த நபரிடம் சொல்லி முன்பதிவு செய்தேன். இது குறித்து உடனடியாக அவரிடம் விசாரித்து வேறு டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று தெரிவித்திருக்கின்றார். இதையடுத்து பயணிகள் அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு வெளியில் காத்திருந்தார்கள். 100க்கும் மேற்பட்ட பயணிகள் போலி டிக்கெட்களுடன் விமான நிலையத்திற்கு வந்தது, மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here