Connect with us

india

வாலிபரின் வயிற்றுக்குள் உயிருடன் நடந்து சென்ற கரப்பான் பூச்சி… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா..?

Published

on

வாலிபரின் வயிற்றுக்குள் கரப்பான் பூச்சி உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

டெல்லியை சேர்ந்த வாலிபரின் வயிற்றிலிருந்து உயிருடன் இருந்த கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் அகற்றி இருக்கிறார்கள். டெல்லியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிய நேரத்திலேயே அவருக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது.

இதையடுத்து மூன்று நாட்கள் வலியால் அவதிப்பட்டவர் கடைசியாக மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார். அங்கு அவருக்கு எண்டோஸ்கோப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது வயிற்றில் கரப்பான் பூச்சி ஒன்று உயிருடன் நடந்து சென்றது தெரியவந்தது. உடனே எண்டோஸ்கோப்பி முறையில் 10 நிமிடத்தில் அவரது வயிற்றில் இருந்த கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர்.

இந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது. இளைஞர் சாப்பிடும் போது கரப்பான் பூச்சியை தவறுதலாக விழுங்கி இருக்கலாம் எனவும், தக்க சமயத்தில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அந்த இளைஞரை காப்பாற்ற முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

google news