Connect with us

Finance

கடந்த பத்து நாட்களில் மட்டும் அதிக முறை டாப்-கியர் போட்ட தங்கம்…தொடர் கதையாகி வரும் விலை உயர்வு?…

Published

on

Gold

சர்வதேச பொருளாதார நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தான் தங்கத்தின் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கிறது. சடங்கு, சம்பர்தாயங்களை அதிகமாக கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்துக்கென தனி மவுசு இருந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை அன்றாடம் ஆபரணப் பிரியர்களால் உற்ற நோக்கப்பட்டு வரப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு கிராமின் விலை ஏழாயிரம் (ரூ.7,000/-) என்ற புதிய உச்சத்தை தொட்டது தங்கம். அதன் பின்னர் ஒரு சில நாட்கள் வீழ்ச்சியை சந்தித்தாலும், ஏழாயிரம் ரூபாய்க்கு (ரூ.7,000/-) கீழ் வந்த பாடில்லை இன்று வரை.

அக்டோபர் மாதமான இம்மாதத்திலும் நிலையில்லாத்தன்மை தான் இருந்து வருகிறது சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விற்பனை விலையில்.

jewel

jewel

அதிலும் குறிப்பாக கடந்த பத்து நாட்களில் மட்டும் ஐந்து முறை விலை ஏற்றத்தை கண்டுள்ளது இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம்.

அக்டோபர் பத்தாம் தேதி துவங்கி பத்தொன்பதாம் தேதி வரையில் ஆறு முறை விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. இந்த பத்து நாட்களை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தால் இருனூற்றி நாற்பது ரூபாய் உயர்ந்துள்ளது விலை.

நேற்று சனிக்கிழமையன்று மட்டும் கிராமிற்கு என்பது ரூபாயும்(ரூ.80/-), இதற்கு முன்னர் எழுபது ரூபாயும் (ரூ.70/-) உயர்ந்திருந்ததே இந்த பத்து நாட்களில் காணப்பட்ட அதிக பட்ச உயர்வாக இருந்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் விற்பனை விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

நாளை உயர்வினினை எதிர்கொண்டு அதிர்ச்சியை அதிகரிக்கப்போகிறதா? அல்லது இறங்கு முகத்திற்கு வந்து ஆறுதல் தரப்போகிறதா என்பதனை பார்க்க ஆர்வத்தோடு காத்து நிற்கின்றனர் ஆபரணப் பிரியர்கள்.

 

google news