Connect with us

Cricket

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

Published

on

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. அதில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்து சொதப்பியது. இரண்டாவது இன்னிங்ஸில் சர்பரஸ் கான் 150 ரன்களையும், ரிஷப் பந்த் 99 ரன்களையும் எடுத்து அணியின் கோரை உயர்த்தினார்கள்.

இருப்பினும் 16 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. இதனால் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மேலும் முதல் இன்னிங்சில் விளையாடிய போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த சமயத்தில் ரிஷப் பந்த்-க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதாவது ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை பேட்டர் தவிர விட்ட நிலையில் அதை ரிஷப் பந்த் பிடிக்க முயற்சித்தார். அப்போது பந்து வலது கால் முட்டியில் பட்டது. இதனால் ரிஷப் பந்த் வலியில் துடித்துப் போனார்.

பின்னர் அவருக்கு சரியாக நடக்க முடியவில்லை. ஒற்றை காலை மட்டும் ஊண்டி பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு துரூவ் ஜோரல்தான் கீப்பிங்-கில் செயல்பட்டார். முதல் டெஸ்ட் முடிந்த பிறகு ரிஷப் பந்த் காயம் குறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ ரிஷப் பந்த் நன்றாகத் தான் இருக்கின்றார். கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று தெரிவித்திருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க ரிஷப் பந்தின் காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சேர்க்கக் கூடாது என்று கேப்டன் ரோகித் சர்மாவும், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் பிசிசிஐயிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ரிஷப் பந்த் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் சில நேரம் அமைதியாக இருப்பதே நல்லது. சிலரை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று பதிவிட்டிருக்கின்றார். ஒரு வேலை இவர் ரோகித் சர்மாவை தான் அப்படி தெரிவித்திருக்கிறாரா? ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் டெல்லி கேப்பிட்டல் அணி கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பந்த்தை வெளியேற்ற முடிவு செய்திருப்பதால் இப்படி ஒரு பதிவை வெளியிட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

இது குறித்து ரிஷப் பந்த் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவரிடம் கமெண்ட் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது இந்தியா நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 28ஆம் தேதி புனேவில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *