india
வேலை நேரத்தில் கேண்டி கிரஷ்… வீட்டுப்பாடத்தினை வைத்தே ஆசிரியைக்கு வைக்கப்பட்ட செக்!…
அரசு பள்ளிகளில் பெரும்பாலும் அதிகாரிகள் திடீர் ஆய்விற்கு வருவது இல்லை. அவர்கள் வர இருப்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விடுவதால் தவறு செய்யும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் பெரிதாக வெளிவருவதில்லை. ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு பள்ளிக்கு சென்று ஆசிரியை கையும் களவுமாக பிடித்திருக்கிறார் மாவட்ட நீதிபதி.
உத்திர பிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கு மாவட்ட நீதிபதி ராஜேந்திர பன்சியா சென்று இருக்கிறார். இதைத்தொடர்ந்து அப்பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடம் நோட்டை வாங்கி பார்க்கும்போது முதல் பக்கத்திலேயே தவறு இருந்திருக்கிறது. அதை ஆசிரியை கவனிக்காமல் திருத்தி இருக்கிறார்.
இப்படி அவர் சோதனையிட்ட ஆறு மாணவர்கள் நோட்டில் இருந்து மட்டுமே 95க்கும் அதிகமான தவறுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியானவர் உதவி ஆசிரியை பிரியம் கோயலின் மொபைலை வாங்கி சோதனை செய்து இருக்கிறார். இதில் அந்த ஆசிரியை வகுப்பு நேரத்தில் இரண்டு மணி நேரம் கேண்டி க்ரஷ் கேம் விளையாடியது தெரிந்தது.
இதை எடுத்து இப்பிரச்சினையை மாநில கல்வித் துறைக்கு எடுத்துச் சென்ற நீதிபதி தன்னுடைய ஆதாரங்களையும் வழங்கியிருக்கிறார். இதனை அடுத்து ஆசிரியை பிரியம் கோயில் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து பேசிய நீதிபதி, மொபைல் போன்கள் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் பள்ளி நேரத்தில் பொழுதுபோக்காக பயன்படுத்துவது தவறு எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
Finance1 day ago
தரிகிட தோம் போடும் தங்கத்தின் விலை…இப்படி ஆகிப்போச்சே இன்னைக்கு!..
-
Cricket20 hours ago
உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய முடியாது… இந்திய பயிற்சியாளரான பின் ஆட்டத்தை ஆரம்பித்த கம்பீர்…
-
Cricket2 days ago
எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா? அஸ்வினை சீண்டிய இளம் வீரர்
-
latest news2 days ago
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது எப்படி? சர்ச்சையில் சிக்கிய வங்கதேச யூடியூபர்…
-
india2 days ago
அமெரிக்க பாஸ்போர்ட்… இந்திய ஆதார் கார்டு… காட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்…
-
tech news2 days ago
பார்க்கவே சூப்பரா இருக்கே.. சியோமி பாண்டா எடிஷன் போன் அறிமுகம் – விலை எவ்வளவு?
-
Cricket17 hours ago
மன்கட் விவகாரம்.. அஸ்வின் Reply இதுதான்
-
latest news22 hours ago
மேயர் முன்னிலையில் வினோத எதிர்ப்பை தெரிவித்த கவுண்சிலர்கள்…பாரபட்சம் காட்டியதாக புகார்…