வெளியே வரவில்லை என்றால் பனையூரில் படுத்து தூங்குகிறார் என்று விமர்சனம்.. வெளியே வந்தால் அவரால் பொதுமக்களுக்கு ஆபத்து, அனுமதி தரக்கூடாது என்று ஒரு விமர்சனம்.. என்ன தான் செய்வார் விஜய்? எல்லோரும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதால் தான் அவர் பெரிய ஆளாகிவிட்டார்.. அவரை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் இன்னொரு கமல் அல்லது சீமான் ஆகியிருப்பார்…!
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் ஒவ்வொரு அசைவும் இன்று ஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும் நுணுக்கமாக கவனிக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. அவர் கட்சி பணிகளுக்காக தனது பனையூர் இல்லத்தில்