tech news
ஸ்போர்ட் வாட்ச் வாங்க போறீங்களா..? உங்களுக்காக அறிமுகமானது ‘Cult sport Ranger XR’ ஸ்மார்ட்வாட்ச்..!
கல்ட்.ஸ்போர்ட் (Cult.sport) என்ற ஸ்போர்ட்ஸ் பிராண்டானது, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களை இலக்காகக் கொண்டு, அதன் புதிய ஸ்மார்ட்வாட்சான, ரேஞ்சர் எக்ஸ்ஆர் -ஐ (Ranger XR) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு உறுதியான, முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
டிஸ்பிளே:
ரேஞ்சர் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 100க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களுடன் கூடிய 1.43 இன்ச் அளவுள்ள அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய டயல் பேட் உள்ளது. இதனால் பயனர்கள் நேரடியாக வாட்சில் இருந்து கால் செய்ய முடியும்.
உடல்நிலை கண்காணிப்பு வசதி:
இதில் மற்ற ஸ்மார்ட்வாட்ச்களில் இருப்பது பல்வேறு உடல்நலத்தைக் கண்காணிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி, ஹார்ட் ரேட் மானிட்டர், SpO2 மானிட்டர், ஸ்லீப் டைமர், ஸ்டெப் கவுண்டர், கலோரி கவுண்டர் மற்றும் ஸ்லீப் கவுண்டர் போன்றவை அடங்கும்.
பேட்டரி & பிற அம்சங்கள்:
இதுதவிர, 70க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோட்களைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் கால்குலேட்டர், பிஎம்ஐ கால்குலேட்டர், அலாரம் கடிகாரம் போன்றவையும் உள்ளது. இதில் இருக்கும் பேட்டரி ஆனது 10 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. குறிப்பாக, வாட்சை ஸ்மார்ட்போனில் இருக்கும் கல்ட் ஸ்போர்ட் வாட்ச் ஆப் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.
விலை:
கல்ட்.ஸ்போர்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது நீலம், கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலையானது இந்தியாவில்ரூ. 2,999 ஆகும். இதனை நிறுவனத்தின் இணையதளம் மற்றும் அமேசானில் வாங்கிக்கொள்ளலாம்.
latest news
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பபட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
இந்த இன்டர்ன்ஷிப்கள் தலைசிறந்த பணியிட அனுபவத்தை வழங்கும் நோக்கில் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் இளைஞர்கள் இந்தத் திட்டத்தை முடித்த பிறகு உடனடி வேலையில் சேர்வவதை எளிமையாக்குகிறது. தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இருந்து பயனடைய அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பங்கேற்க கீழ்வரும் தகுதி இருப்பது அவசியம் ஆகும்..,
- வயது வரம்பு: 21 முதல் 24 வயது வரை
- முழுநேர வேலையில் ஈடுபடக் கூடாது
- அரசு ஊழியர்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த தனிநபர்கள் தகுதியற்றவர்கள்
- ஐஐடிகள், ஐஐஎம்கள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து பட்டதாரிகள் அல்லது CA அல்லது CMA போன்ற தகுதிகள் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIகள்) மற்றும் கௌஷல் கேந்திரா (திறன் மையங்கள்) ஆகியவற்றில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத உதவித்தொகையாக ரூ. 4,500-ஐ அரசிடமிருந்து பெற முடியும். இதோடு நிறுவனங்கள் சார்பில் கூடுதலாக ரூ. 500 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.
மாதாந்திர உதவித்தொகை பெறுவது மட்டுமின்றி, விண்ணப்பதாரர்கள் திடீர் செலவுகளை ஈடுகட்ட ஒரு முறை மட்டும் ரூ. 6,000 நிதி உதவியைப் பெறலாம். பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் பயிற்சியாளர்கள் காப்பீடு செய்யப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்யும். இதோடு, பிரீமியம் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும்.
பதிவு செய்வது எப்படி?
- அக்டோபர் 12 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.pminternship) பதிவு செய்ய வேண்டும்.
- இதைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யும் பணி அக்டோபர் 27 ஆம் தேதி துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் பிறகு நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதிக்குள் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இணைவதற்கான கடிதம் வழங்கப்படும்.
- இந்தத் திட்டத்தில் இணையும் முதற்கட்ட இன்டர்ன்கள் தங்களின் ஓராண்டு கால வேலைவாய்ப்பு பயிற்சியை டிசம்பர் 2 ஆம் தேதி முதல் துவங்குவர்.
latest news
ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக இந்தியர்கள் பாஸ்போர்ட் பெற்று வருகின்றனர். இதற்காக பாஸ்போர்ட் சேவாக்க் இயக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதிலும் உள்ளவர்கள் புதிய பாஸ்போர்ட் பெறவும், ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அது சார்ந்த சேவைகளை பெற பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும், ஆன்லைனிலும் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த நிலையில், பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் தளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், சில நாட்களுக்கு அதற்கான வலைதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி நேற்றிரவு (அக்டோபர் 4) 8 மணி துவங்கி அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவா வலைதள சேவைகள் பயன்பாட்டில் இருக்காது. இந்த தேதிகளில் பயனர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த சேவைகள், நேர்முக தேர்வுக்கு நேரம் பெறுவது போன்ற சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
“பாஸ்போர்ட் சேவா வலைதளம் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி இரவு 8 மணியில் இருந்து அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்காது,” என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வலைதளம் செயல்படாது என்பதால், பொது மக்கள் மட்டுமின்றி பாஸ்போர்ட் சேவா வலைதளத்தை வெளியுறவு விவகாரங்கள் துறை அதிகாரிகள், குடிவரவு பணியக அதிகாரிகள், காவல் துறையை சேர்ந்தவர்கள் என யாரும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
latest news
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
நாடு முழுக்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் அவசியமான ஆவணமாக இருந்து வருகிறது. வாகனம் ஓட்டுபவர்கள் உரிய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். முந்தைய நடைமுறைகளின் படி ஓட்டுநர் உரிமம் பெறுவது, அதனை புதுப்பித்தல், மாற்றங்களை செய்வது என எல்லாவற்றுக்கும் உரிய போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருந்து வந்தது.
தற்போது இது தொடர்பான சேவைகள் ஆன்லைனிலையை கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதி சீராக செயல்பட்டு வருகிறது.
இது சார்ந்த சேவைகளை முறைப்படுத்த மத்திய அரசு சார்பிலும் பிரத்யேக வலைதளம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஓட்டுநர் உரிமத்தில் பயனரின் வீட்டு முகவரியை மாற்றுவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
- முதலில் பரிவாகன் வலைதளம் செல்ல வேண்டும்.
- வலைதளத்தில் ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இனி வீட்டு முகவரியை மாற்ற வேண்டும் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டு, அதனை உறுதிப்படுத்தக் கோரும் ‘Confirm’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இறுதியில் ஆதார் எண் மற்றும் அதற்கான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட வேண்டும்.
latest news
உங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறதா? அப்போ இந்த தகவலை
இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை டிடிஎஸ்-ஆக வருமான வரித்துறையில் செலுத்தும் விதிமுறை அமலில் உள்ளது. இந்தத் தொகையை பணியை வழங்கும் நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இதுப் பற்றிய தகவல்களை நிறுவனங்கள் சார்பில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட ஊழியரின் சம்பளம், அதில் எத்தனை சதவீதம் டிடிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் வருமான சான்றில் இடம்பெற்று இருக்கும். என்னும், நிறுவனங்கள் சார்பில் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகை முறையாக வருமான வரித்துறையில் செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் சமீபத்தில் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், உங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகை வருமான வரித்துறையில் சரியாக செலுத்தப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகிறது. இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஒரு பணியாளராக இருப்பவர்கள் எனில், 26AS-இல் வரி விலக்கை நீங்கள் சரிபார்க்க முடியும். இது மாதாந்திர வரி விலக்கைக் காட்டுகிறது. உங்களது பே ஸ்லிப்-இல் முதலாளி காட்டும் வரியை டெபாசிட் செய்கிறாரா என்பதை நீங்கள் சரிபார்க்க முடியும். வருடத்தில் டிடிஎஸ் கழிக்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்கலாம்.
- ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யும் வலைதளம் செல்ல வேண்டும்
- யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பதிவிட்டு இணையதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும்
- லாக்-இன் செய்ததும், நீங்கள் நீல நிற ரிப்பனுக்குச் சென்று, இ-ஃபைல் ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்கிரால் டவுன் மெனுவை இயக்கலாம்.
- ‘வருமான வரி ரிட்டர்ன்ஸ்’ ஆப்ஷனை க்ளிக் செய்து, ஸ்கிரால் டவுன் மெனுவில், ‘வியூ 26AS’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி தனி இணையப்பக்கம் திறக்கும்.
- அடுத்து, நீங்கள் ‘வரிக் கிரெடிட்டை பார்க்க (படிவம் 26AS/வருடாந்த வரி அறிக்கை)’ என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
latest news
ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதுதவிர, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டும் சிறப்பு திட்டங்கள் மற்றும் திட்டப் பலன்களை பெறவும் ரேஷன் அட்டை மிகவும் அவசியமான ஆவணமாக உள்ளது.
இந்த நிலையில், ரேஷன் அட்டை வைத்திருப்போர் அத்துடன் தங்களது மொபைல் நம்பரை இணைக்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் மூன்றுவகை ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. லைட் கிரீன் ரேஷன் அட்டை வைத்திருப்போர் அரிசி மற்றும் இதர பொருட்களை அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
அநந்யோதயா அன்ன யோஜனா கார்டு மற்றும் காக்கி நிற கார்டு காவல் துறையினருக்காக வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் வெள்ளை கார்டு வைத்திருப்பவர்களுக்கு 3 கிலோ வரை சர்க்கரை கூடுதலாக வழங்கப்படுகிறது.
தற்போது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அத்துடன் தங்களது மொபைல் நம்பரை ஆன்லைன் மூலம் இணைத்துக் கொள்ளும் வழிமுறை நடைமுறையில் உள்ளது. ஆன்லைனில், இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
தமிழக அரசின் tnpds.gov.in என்ற வலைதளம் சென்று மொபைல் நம்பரை ரேஷன் அட்டையுடன் பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர 1967 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு மொபைல் நம்பரை மாற்றுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மற்றும் மொபைல் வழியே மொபைல் நம்பரை இணைக்க முடியாதவர்கள் அருகில் உள்ள தாலுகா அலுவலகம் சென்று ரேஷன் கார்டு உதவி மையங்களில் நேரடியாக மொபைல் நம்பர் இணைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். இதற்கு குடும்ப தலைவரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை உடன் எடுத்து செல்வது அவசியம் ஆகும்.
-
Cricket1 day ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
-
latest news20 hours ago
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…
-
Cricket1 day ago
மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்
-
latest news19 hours ago
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…
-
latest news22 hours ago
வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…
-
Cricket1 day ago
ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ
-
latest news21 hours ago
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…