போட் நிறுவன ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துவோர் இனி, எளிதில் பணம் செலுத்தலாம். நாடு முழுக்க பாயின்ட்-ஆஃப்-சேல் (POS) முனையங்களில் பயனர்கள் போட் வாட்ச் அணிந்திருந்தால், அதை கொண்டே எளிதில் பணம் செலுத்தலாம். இதற்கு அவர்கள் டேப் அன்ட் பே வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பான அறிவிப்பு குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2024 நிகழ்வில் வெளியானது.
அதன்படி போட் நிறுவனம் மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து புதுவித பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்கிறது. கூட்டணியின் படி, ஆதரவு தரும் வங்கிகளின் மாஸ்டர்கார்டு பயன்படுத்துவோர் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை கொண்டு இந்த வசதியில் பயன்பெற முடியும். இதற்கான வசதி போட் அதிகாரப்பூர்வ செயலியின் மூலம் வழங்கப்படுகிறது. இதனை மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் டொகன்முறை மூலம் பாதுகாக்கப்படுகிறது.
