Connect with us

tech news

தமிழ் உள்பட 9 மொழிகளில் பயன்படுத்தலாம்.. இந்தியாவில் கூகுள் AI ஆப் ஜெமினி வெளியீடு

Published

on

கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது ஜெமினி ஆப்-ஐ வெளியிட்டது. இதன் மூலம் அந்நிறுவனம் இந்தியாவில் தனது ஏ.ஐ. சேவைகளை விரிவுப்படுத்தியது. இந்தியாவில் ஜெமினி மற்றும் ஜெமினி அட்வான்ஸ்டு ஆப் ஒன்பது இந்திய மொழிகளில் கிடைக்கிறது.

அதன்படி ஜெமினி ஆப் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, உருது, இந்தி, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பயன்படுத்தலாம். பயனர்கள் இந்த செயலியில் டைப் செய்தோ, பேசியோ அல்லது புகைப்படங்களை அப்லோட் செய்தோ தங்களின் சந்தேகங்களை கேட்க முடியும். இந்த செயலி பயனர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்.

ஜெமினி ஆப் மட்டுமின்றி கூகுள் நிறுவனம் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த புதிய வசதிகளை கொண்ட ஜெமினி அட்வான்ஸ்டு (Gemini Advanced) செயலியை இந்திய மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது. ஜெமினி 1.5 ப்ரோ கொண்ட இந்த செயலியில் நுகர்வோர் சாட்பாட்களில் மிகப்பெரியது ஆகும்.

இதை கொண்டு நீண்ட கட்டுரைகள், மின்னஞ்சல்கள், வீடியோக்கள் மற்றும் கோடிங் உள்ளிட்டவைகளை ஆழ்ந்து புரிந்து கொண்டு அவற்றில் இருந்து குறிப்பு எடுத்தல், கருத்துக்களை வழங்குதல் மற்றும் தகவல்களை ஆய்வு செய்ய முடியும். பயனர்கள் ஜெமினி செயலியை டவுன்லோட் செய்யலாம். இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட் மூலமாகவும் ஜெமினியை இயக்கலாம்.

கூகுள் மெசேஜஸ்-இல் ஜெமினி தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் குறுந்தகவல் சார்ந்த சேவைகளை பெறலாம். இவற்றை பயனர்கள் நேரடியாக செயலியில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலி தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

முதற்கட்டமாக ஜெமினி ஆப் ஆண்ட்ராய்டில் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது. வரும் வாரங்களில் இந்த செயலி ஐ.ஒ.எஸ். தளத்திலும் வெளியாகும். இதோடு, செயலியின் வசதிகள் தற்போது இருப்பதை விட எதிர்காலத்தில் அதிகப்படுத்தப்படும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

tech news

ஏராளமான ஃபீச்சர்ஸ்.. வெளியீட்டுக்கு தயாராகும் கேலக்ஸி ரிங்

Published

on

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ரிங் சாதனம் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய கேலக்ஸி ரிங் தோற்றம் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. எனினும், இதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், கேலக்ஸி ரிங் மாடலில் வழங்கப்பட இருக்கும் உடல்நலம் சார்ந்த அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டுள்ள கேலக்ஸி ரிங் APK டியர்டவுனில் இதுபற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

பயனர்கள் கேலக்ஸி ரிங் பயன்படுத்தி அடிப்படை உடல் ஆரோக்கிய அம்சங்களை டிராக் செய்து கொள்ள முடியும். அதன்படி பயனர்கள் தங்களது ஹார்ட் ரேட் மற்றும் ஸ்டிரெஸ் அளவுகளை அறிந்து கொள்ள முடியும். இத்துடன் சருமத்தில் இருந்தே உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் வசதி கேலக்ஸி ரிங் மாடலில் வழங்கப்படுகிறது.

இத்துடன் பெண்களின் உடல்நிலையை டிராக் செய்யும் வசதிகளும் வழங்கப்படுகிறது. கேலக்ஸி ரிங் பயனர்களின் குரட்டையை கூட டிராக் செய்யும் என்று கூறப்படுகிறது. எனினும், கேலக்ஸி வாட்ச்-இல் உள்ளதை போன்றே இந்த அம்சம் இயங்குவதற்கு போன் அருகாமையில் இருப்பது அவசியம் ஆகும். கேலக்ஸி வாட்ச் பயனரின் குரட்டை ஒலியை பதிவு செய்ய போனின் மைக்ரோபோனை பயன்படுத்தும்.

அந்த வகையில் கேலக்ஸி ரிங் சாதனமும் இதேபோன்ற வழிமுறையை கொண்டு இயங்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி ரிங் சாதனம் ஒன்பது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றில் 5 முதல் 13 வரை அளவுக்கு ஏற்ற பேட்டரி வழங்கப்படும் என்று தெரிகிறது.

google news
Continue Reading

tech news

AI அம்சங்கள், 45W சார்ஜிங்.. ரூ. 8999-க்கு அறிமுகமான புது ஸ்மார்ட்போன்

Published

on

ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய C63 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் புதிய ரியல்மி C63 மாடலில் வீகன் லெதர் டிசைன் மற்றும் AI அம்சங்கள் உள்ளன.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி C63 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் 90Hz HD+ ஸ்கிரீன், ஆக்டா கோர் யுனிசாக் T612 பிராசஸர், மாலி G57 GPU, 4GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5 ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் IP54 தர சான்று பெற்ற டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP டூயல் பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் AI சார்ந்து இயங்கும் ஏர் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மினி கேப்ஸ்யூல், 5000mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி C63 ஸ்மார்ட்போன் 4GB ரேம், 128GB மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 3 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. இதே போன்று தேர்வு செய்யப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய ரியல்மி C63 ஸ்மார்ட்போன் ஜேட் கிரீன் மற்றும் லெதர் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதில் லெதர் புளூ நிற வேரியண்டில் வீகன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

google news
Continue Reading

tech news

சிம் கார்ட் PORT செய்வோருக்கு செக் வைத்த டிராய்

Published

on

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்-இன் புதிய விதிமுறைகள் இன்று முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளன. புது விதிமுறைகள் பயனர்கள் சிம் கார்டு மாற்றுவது, ஸ்வாப் செய்யும் போது ஏற்படும் மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவும்.

சிம் ஸ்வாப் மற்றும் எம்.என்.பி.

பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சிம் கார்ட்-க்கு மாற்றாக புதிய சிம் கார்ட் வாங்குவது சிம் ஸ்வாப் என்று டிராய் கூறுகிறது. எம்.என்.எப். என்கிற மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலம் பயனர்கள் தங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாற வழிவகை செய்கிறது.

2009 ஆம் ஆண்டு மொபைல் நம்பர் போர்டபிலிட்டி விதிமுறைகள் இதுவரை 9 முறை மாற்றப்பட்டு இருக்கின்றன. புதிய விதிமுறைகளின் கீழ் சிம் ஸ்வாப் அல்லது சிம் மாற்றியமைத்த ஏழு நாட்களுக்குள் யுனிக் போர்ட்டிங் கோட் (UPC) வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு விடும்.

இவ்வாறு செய்யும் போது அங்கீகரிக்கப்படாத நபர்கள் புதிய சிம் கார்டை மோசடி வழிகளில் பெறுவது மற்றும் அவ்வாறு பெற்றவுடன் போர்ட்டிங் செய்வதையும் தடுக்க முயற்சிக்கும். புதிய விதிமுறைகள் சிம் கார்ட் ஸ்வாப் அல்லது சிம் மாற்றும் மோசடிகளில் இருந்து பயனர்களை பாதுகாக்கும்.

புதிய விதிகளின் கீழ் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள், பயனர் சிம் ஸ்வாப் அல்லது சிம் மாற்றியமைத்த ஏழு நாட்களுக்குள் யு.பி.சி. கோட் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவற்றை நிராகரிக்க வேண்டும். இதற்காக யு.பி.சி.-யை நிராகரிக்க புதிய அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி யு.பி.சி. வழங்குவதற்கு முன் டெலிகாம் நிறுவனங்கள் பின்வரும் நிலைகளை சரிபார்ப்பது அவசியம் ஆகும்.

1 – பயனர் கடைசியாக போர்ட் செய்த தேதியை பார்க்க வேண்டும். ஒருவேளை எம்.என்.பி. செய்து 90 நாட்கள் முடியவில்லை எனில், அதற்கான கோரிக்கையை நிராகரிக்கலாம்.

2 – ஏற்கனவே அதே நம்பரில் இருந்து போர்ட்டிங் செய்வதற்கான கோரிக்கை நிலுவையில் இருந்தால், புதிய எம்.என்.பி. கோரிக்கையை நிராகரிக்கலாம்.

3 – ஏற்கனவே யு.பி.சி. வழங்கப்பட்டு அதற்கான வேலிடிட்டி இன்னும் நிறைவடையவில்லை எனில், அதற்கான கோரிக்கையை நிராகரிக்க முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள நிலைகள் அனைத்தும் சரியாக இருக்கு் பட்சத்தில், டெலிகாம் நிறுவனங்கள் யு.பி.சி. வழங்க முடியாது. மேலும், பயனர்கள் யு.பி.சி. கோரி விடுத்த கோரிக்கைக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகுந்த விளக்கத்துடன் பதில் அளிக்க வேண்டும்.

google news
Continue Reading

tech news

கூகுள் சர்ச்-இல் ஸ்னேக் கேம் விளையாடலாம் – எப்படி தெரியுமா?

Published

on

செல்போன்கள் பரவலான காலக்கட்டம், 90-ஸ் கிட்ஸ் மனங்களில் இன்றும் அலாதியான உணர்வை ஏற்படுத்தும் கேம்களில் ஒன்று ஸ்னேக் கேம் (Snake Game). நோக்கியா செல்போன்களில் இந்த ஸ்னேக் கேம் மிகவும் பிரபலமாக இருந்தது. அனைவராலும் எளிதில் விளையாடக்கூடிய கேம் இது.

இதுமட்டுமின்றி ஸ்னேக் கேம் விளையாடுவோருக்கு அதிக சுவாரஸ்யத்தை வழங்கும். அதிநவீன கிராஃபிக்ஸ், கண்கவர் நிறங்கள் என எதுவும் இல்லாமலேயே ஸ்னேக் கேம் அனைவரின் மனங்களை வென்றுள்ளது. இன்றும் இந்த கேமை விளையாடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்கின்றனர்.

இத்தகைய பிரபலமான ஸ்னேக் கேமினை கூகுள் சர்ச்-லேயே விளையாட முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த கேம் விளையாட அதனை டவுன்லோட் செய்யவோ, இதற்கென தனி பிளேயர் அல்லது ஃபைல்களை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

அந்த வகையில், ஸ்னேக் கேமை கூகுள் சர்ச் பாரில் இருந்த படி எப்படி விளையாடலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

  • இதற்கு உங்களது பிரவுசரில், கூகுள் சர்ச்-ஐ முதலில் திறக்க வேண்டும்.
  • சர்ச் பாரில் ஸ்னேக் (Snake) என்று பதிவிட்டு எண்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • இனி சர்ச் ரிசல்ட்களின் மேல்புறத்திலேயே ஸ்னேக் கேம் விளையாடும் வகையில் பட்டியலிடப்பட்டு இருக்கும்.
  • அதில் உள்ள பிளே (Play) ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.
  • இனி கீபோர்டில் உள்ள ஏரோ பட்டன்களை (Arrow Keys) க்ளிக் செய்து ஸ்னேக் கேம் விளையாட துவங்கலாம்.
google news
Continue Reading

tech news

போக்கோ போனுக்கு ரூ. 5,000 விலை குறைப்பு – அமேசான் அறிவிப்பு

Published

on

போக்கோ இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் போக்கோ X6 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிக ரெசல்யுஷன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் ரூ. 24,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ X6 5ஜி ஸ்மார்ட்போனிற்கு தற்போது அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு அமேசான் இந்தியா தளத்தில் மட்டும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி போக்கோ X6 5ஜி 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 24,999-இல் இருந்து ரூ. 21,999 என குறைந்துள்ளது.

அமேசான் தளத்தில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி ICICI அல்லது HDFC வங்கி கார்டு பயன்படுத்தும் பயனர்களுக்கு ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் போக்கோ X6 5ஜி விலை ரூ. 20,999 என மாறிவிடும்.

இதேபோன்ற விலை குறைப்பு 8GB ரேம், 256GB மெமரி மற்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல்களுக்கும் அறவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இவற்றின் விலை முறையே ரூ. 21,999 மற்றும் ரூ. 23,999-இல் இருந்து ரூ. 17,999 மற்றும் ரூ.18,999 என மாறி விடும்.

அம்சங்களை பொருத்தவரை போக்கோ X6 5ஜி மாடலில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யுஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ் அப்கிரேடுகளும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக போக்கோ அறிவித்து இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஓ.எஸ். கொண்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஹைப்பர் ஓ.எஸ். வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், LPDDR4x ரேம், UFS 2.2 ரக ஸ்டோரேஜ், 5100mAh பேட்டரி, 67W சார்ஜிங் வசதி உள்ளது.

google news
Continue Reading

Trending