Connect with us

Finance

உஷார் மக்களே!..போலி செயலியின் மூலம் 8 லட்சத்தை இழந்த மனிதர்..தகவல்கள் உள்ளே..

Published

on

hijackers

இண்டெர்நெட் என்பது மனிதனின் அன்றாட வாழ்வில் மிக இன்றியமையாததாக அமைந்துள்ளது. என்னதான் இண்டெர்நெட்டின் வளர்ச்சி மிக அதிக அளவில் இருந்தாலும் அதற்கு ஏற்றாற்போல் சில தேவையில்லாத விஷயங்களும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது. சமீப ஆண்டுகளாய் இண்டெர்நெட் மூலமாக மனிதர்களை ஏமாற்றும் கும்பல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் முக்கியமாக நமது வங்கி கணக்கின் மூலம் பலர் ஏமாறுகிறார்கள். இவர்களுக்காகவே ரிசர்வ் வங்கியானது அவ்வப்போது நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல செய்திகளை அறிவித்து கொண்டுதான் உள்ளது.

sbi yono app

sbi yono app

இந்த நிலையில் தற்போது பிரபல வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் YONO என்ற செயலியை போன்று போலியான செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.8 லட்சத்தை சில கும்பல் ஏமாற்றியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகங்காநகர் என்ற ஊரை சேர்ந்தவர் பவன் குமார் சோனி. 55 வயதான இவரின் மகன் டெல்லியில் உள்ள துவராக என்ற ஊரில் வசித்து வருகிறார். தனது தந்தை வங்கி கணக்கிற்கு தனது மகனின் மொபைல் எண்ணையே பதிவு செய்துள்ளார். ஏனென்றால் தனக்கு வரும் தகவல்கள் அனைத்தையும் தனது மகனே கையாள வேண்டும் எனும் எண்ணத்தில் அவ்வாறு செய்துள்ளார். ஒரு நாள் KYC-ஐ அப்டேட் செய்யுமாறு ஒரு தகவலும் அதில் ஒரு லிங்கும் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்யும் பொழுது அது எஸ்.பி.ஐ வங்கியின் YONO செயலியை பதிவிறக்கம் செய்துள்ளது.

sbi

sbi

உபயோகிப்பாளர் ஏற்கனவே அந்த செயலியை அவரது மொபைலில் வைத்துள்ளார். பின் இந்த போலியான செயலியிலும் தனது வங்கி பற்றிய தகவல்களை கொடுத்துள்ளார். சில நிமிடங்களுக்குள் அவரது கணக்கில் இருந்து பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் இவர் கணக்கில் இருந்து  8 லட்சம் ரூபாய் பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. பின் இதனை பற்றி மாவட்ட சைபர் செல்லில் புகார் அளித்து பின் அவர்களின் உதவியோடு ரூ.6.24 லட்சம் பணம் திரும்ப பெறப்பட்டது. ஆனால் மீதமுள்ள இரண்டு லட்சம் ரூபாயை திரும்ப பெற முடியவில்லை.

cyber cell

cyber cell

எனவே இவ்வாறான பொய்யான தகவல்கள் மூலம் நாம் நமது பணத்தினை இழக்காமல் இருக்க ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். மேலும் நமது OTP எண்ணை எந்த காரணம் கொண்டும் யாருக்கும் தெரியப்படுத்த கூடாது

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Finance

குறைந்தது விலை!…தாக்கம் கொடுத்த தங்கம்…இந்த நிலை நீடிக்குமா?…நகைப்பிரியர்கள் ஏக்கம்…

Published

on

Gold

சர்வதேச பொருளாதார நிலை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பினைக் கொண்டே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான் தங்கத்தின் விற்பனை விலையில் நாள் தோறும் மாற்றங்கள் காணப்படும் நிலை இருந்து வருகிறது. தங்கம் என்பது இந்தியா போன்ற நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகறது. சடங்குகளில் வழங்கப்படும் முக்கியத்துவத்தின் காரணத்தால் இதற்கான மவுசு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்து தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. கிராம் ஒன்று ஏழாயிரம் ரூபாய்க்கு (ரூ.7,000/-) விற்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டது விலை. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலேயே காணப்பட்ட தங்கம் திங்கட்கிழமையான இன்று இறங்கு முகத்தை சந்தித்துள்ளது.

கிராம் ஒன்றுக்கு பதினைந்து ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம் இன்று.

Silver and Gold

Silver and Gold

ஒரு கிராம் ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ.7.095/-) விற்கப்பட்டு வந்த நிலையில் பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து இன்று ஏழாயிரத்து என்பது ரூபாய்க்கு (ரூ.7,080/-)விற்பனையாகிறது. சவரன் ஒன்றின் விலை நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-)குறைந்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ. 56,640/-) விற்பனையாகி வருகிறது.

வெள்ளி கிராம் ஒன்றிற்க்கு பத்து காசுகள் குறைந்து நூறு ரூபாய் தொன்னூறு காசுகளுக்கு (ரூ0.90/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து தொல்லாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,00,900/-) விற்கப்படுகிறது இன்று.

கடந்த சில நாட்களாகவே விலை உயர்வை சந்தித்து அதிர்ச்சியளித்து வந்த தங்கத்தின் விலை இன்று இறங்கமுகத்திற்கு வந்து ஆறுதல் அடையச் செய்துள்ளது. இந்த விலை குறைவு தொடருமா? என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஆபரணப்பிரியர்கள் மத்தியில்.

 

 

 

google news
Continue Reading

Finance

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

Published

on

Gold

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்திற்கு என தனி மவுசு இருந்தே வருகிறது. நாளுக்கு நாள் அதன் மீதான மோகமும், அதன் தேவையும் அதிகரித்தே வரும் நிலையே இருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அடுத்தடுத்து உயர்வை சந்தித்து வருவது நகை பிரியர்களுக்கு தலைவலி தரக்கூடிய விஷயமகவே மாறி வருகிறது.

நேற்று மாற்றம் ஏதும் தென்படாமல் இருந்த தங்கத்தின் விற்பனை விலை இன்று ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஏழாயிரத்து அறுபது ரூபாய்க்கு (ரூ.7,060/-) விற்பனையாகி வந்த நிலையில் இன்று நாற்பது ரூபாய் (ரூ.40/-) உயர்ந்து ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-)விற்பனை செய்யப்படுகிறது.

Silver

Silver

ஒரு சவரனின் விலை நேற்று ஐம்பத்தி ஆராயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஆராயிரத்து என்னூறு ரூபாயாக (ரூ.56,800/-)உள்ளது. சவரன் ஒன்றுக்கு இன்று முன்னூற்றி இருபது ரூபாய் (320/-)உயர்ந்துள்ளது.

வெள்ளியின் விலையும் இன்று தங்கத்தைப் போலவே ஏறுமுகத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் உயர்ந்து (ரூ.1/-) நூற்றி இரண்டு ரூபாய்க்கு (ரூ.102/-) விற்கப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளி நேற்று ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருந்து வந்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) உயர்ந்து ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,02,000/-) விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஏறுமுகத்திலேயே இருந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிகமான கவலைக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

 

google news
Continue Reading

Finance

எகிறி அடிக்கும் கோல்ட் ரேட்…ஆசையெல்லாம் ஆகிவிடுமா க்ளீன் போல்டு?…

Published

on

Gold

செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் அடிக்கடி மாற்றங்கள் காணப்பட்டே வருகிறது. நாளுக்கு நாள் விற்பனை விலையில் ஏற்ற, இறக்கங்களோடு இருந்து வருகிறது. அதிலும் தமிழ் மாதமான புரட்டாசி துவங்கியதிலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலை ஏறு முகத்திலேயே இருந்து வருகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவையே தங்கத்தின் விலையை தீர்மானித்து வருகிறது. இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது, வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்பட்டது நகை பிரியர்களை அதிர வைத்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏழாயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது ஆபரணப்பிரியர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னையில் இன்று விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்த்தின் ஒரு கிராம் விலை ஏழாயிரத்து அறுபது ரூபாயாக (ரூ.7,060/-)உள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ஐம்பத்தி ஆறாயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்படுகிறது.

Ornament

Ornament

கடந்த சில நாட்களாகவே எகிறியடித்து வரும் தங்கத்தின் விலை இன்று  ஒரு கிராம் ஏழாயிரம் ரூபாயையும் (ரூ.7,000/-) கடந்து சென்றுள்ளது தங்கம் வாங்க நினைப்பவர்களின் கவலையை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி கிராம் ஒன்றின் விலை இன்று நூற்றி ஓரு ரூபாயாக இருக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-)உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது நகை பிரியர்களுக்கு பேரிடியாக உணரப்படுகிறது.

google news
Continue Reading

Finance

தடுமாறும் தங்கம் விலை…புரட்டிப் போடும் புரட்டாசி?…

Published

on

சர்வதேச பொருளாதார சூழலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கத்தின் விற்பனை விலையை தீர்மானித்து வருகிறது. சடங்கு சம்பர்தாயங்கள் அதிகமாக கடைபிடிக்கப்படும் நாடுகளில் இந்தியா முக்கியத்துவம் பெற்று விளங்குவதால்,  தங்கத்திற்கான தேவையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் வருகிறது.

செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே ஏற்ற, இறங்களை அதிலும் குறிப்பாக விலை உயர்வை பல முறை
சந்தித்து வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் சென்னை விலையின் நிலைமை தமிழ் மாதமான புரட்டாசி பிறந்ததிலிருந்து தலை கீழாக மாறியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சிப் பாதையிலேயே காணப்படுகிறது புரட்டாசி மாதம் துவங்கியதிலிருந்து. நேற்று ஐம்பத்தின் நாலாயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.54,800/-) விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்றும் தடாலடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Jewel

Jewel

நேற்றை விட இன்று சவரனுக்கு இருனூறு ரூபாய் (ரூ.200/-) வீழ்ச்சியை சந்தித்து ஐம்பத்தி இரண்டாயிரத்து அறனூறு ரூபாய்க்கு (ரூ.52,600/-) விற்கப்படுகிறது.

கிராம் ஒன்றின் விலை இன்று ஆராயிரத்து என்னூற்றி இருபத்தி ஐந்து ரூபாயாக (ரூ.6,825/-)உள்ளது. தங்கத்தின் விலை இன்று இறங்கு முகத்தில் இருந்தாலும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை.  நேற்று கிராம் ஒன்றுக்கு தொன்னூற்றி ஆறு (ரூ.96/-) ரூபாய்க்கு விற்கப்பட்ட அதே விலையில் இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை தொன்னூற்றி ஆறாயம் ரூபாய்க்கும் (ரூ.96,000/-) விற்பனையாகிறது. தொடர்ச்சியாக இறங்கு முகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலையால் நகை பிரியர்கள் மகிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

google news
Continue Reading

Finance

தொடரும் விலை குறைவு…ஆபரணப் பிரியர்கள் திடீர் உற்சாகம்!.

Published

on

Gold silver

சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் இந்த மாதத் துவக்கத்திலிருதே ஏற்ற, இறக்கங்கள் இருந்தே காணப்படுகிறது. உயர்வை நோக்கி செல்லும் இவைகளின் விலை திடீரென வீழத்துவங்கும். இப்படி நிலை இல்லாதத் தன்மையோடு தான் இந்த மாதம் நகர்ந்து வருகிறது.

நேற்றைப் போலவே இன்றும் சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ஆறாயிரத்து என்னூற்றி அறுபத்தி ஐந்து ரூபாய்க்கு (ரூ.6865/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிராமிற்கு நேற்றைப் போலவே இன்றும் பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து.

நேற்று முன் தினத்தை விட சவரனுக்கு நூற்றி இருபது ரூபாய் குறைந்து விற்பனையானதைப் போலவே இன்றும் சவரன் ஒன்றிற்கு நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-) குறைந்துள்ளது.

Jewel

Jewel

ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாய்க்கு (ரூ. 54,920/-) நேற்று விற்பனையாகி வந்த தங்கம் இன்று ஐம்பத்தி நான் காயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.54,800/-) விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை குறைவைப் போலவே தான் வெள்ளியின் விற்பனை விலையிலும் மாற்றம் காணப்படுகிறது.

நேற்று தொன்னூற்றி ஏழு (ரூ.97/-) ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிராம் வெள்ளி இன்று ஒரு ரூபாய் குறைந்து தொன்னூற்றி ஆறு ரூபாய்க்கு (ரூ.96/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று தொன்னூற்றி ஆறாயிரம் ரூபாயாக (ரூ.96,000/-) உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையால் ஆபரணப் பிரியர்களுக்கு திடீர் உற்சாகம் பிறந்துள்ளது.

google news
Continue Reading

Trending