health tips
தொடர்ந்து 30 நாட்கள் சர்க்கரை சாப்பிடாமல் இருப்பது நமது உடலில் இவ்வளவு விளைவுகளை ஏற்படுத்துமா?
![no sugar - Cinereporters Info no sugar for 30 days](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/no-sugar.jpg)
சர்க்கரை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய பொருட்களில் ஒன்றாகும். இதனை நாம் தொடர்ந்து சாப்பிடுவதனால் நமக்கு பல தீங்கு விளைவிக்ககூடிய நோய்களும் அதனால் நமது உடலுக்கு பெரிய இழப்பும் ஏற்படுகிறது. 70%க்கு மேலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்க்கரை சேர்த்துதான் தயாராகிறது. எனவே இந்த மாதிரியான உணவுகளை நாம் உண்ணும் பொழுது நமக்கு கல்லீரல் சம்பந்தமான நோய்கள், டைப்-2 சர்க்கரை நோய், இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் இன்னும் பல உடல்சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன. இப்படிபட்ட சர்க்கரையை நாம் தொடர்ந்து 30 நாட்கள் புறக்கணிப்பதனால் நமது உடலின் பல நன்மை சார்ந்த விஷயங்கள் ஏற்படுகின்றன.
இரத்த சர்க்கரை:
![regulate blood sugar level - Cinereporters Info regulate blood sugar level](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/regulate-blood-sugar-level.jpg)
regulate blood sugar level
சர்க்கரையை புறக்கணிப்பதனால் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு கட்டுக்குள் இருக்கும். நாம் தொடர்ந்து சர்க்கரை கலந்த உணவுகள் மற்றும் குளிர்பானங்களை அருந்துவதனால் நமது உடலில் டைப்-2 சர்க்கரை நோய் உண்டாகலாம்.
உடல் எடை:
![help to maintain weight of our body - Cinereporters Info help to maintain weight of our body](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/help-to-maintain-weight-of-our-body.jpg)
help to maintain weight of our body
நாம் உடல் எடையை குறைக்க டயட் இருக்கும் பொழுது பொதுவாக அதிக அளவு விட்டமின்கள் மற்றும் நார்சத்துள்ள உணவு பொருட்களை உண்போம். அச்சமயம் நாம் இதுபோன்ற சர்க்கரையை குறைத்து கொள்வது மிகவும் பயனளிக்ககூடியதாக அமையும். இவ்வாறு செய்வதனால் நமது உடல் எடையையும் பேணி பாதுகாக்கலாம்.
பற்களின் நலம்:
![maintain healthy teeth - Cinereporters Info maintain healthy teeth](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/maintain-healthy-teeth.jpg)
maintain healthy teeth
அதிக அளவு சர்க்கரை எடுத்து கொள்வதால் நமது பற்கள் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படுகின்றன. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நமது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையை சிதைவடைய செய்வதனால் நமது வாயில் ஒரு விதமால அமிலம் வெளியிடப்படுகிறது. இது நமது பல்லில் உள்ள எனாமலை பாதிக்கிறது. எனவே சர்க்கரையை புறக்கணிப்பதனால் நமது பற்களை பாதுகாக்கலாம்.
இதய நலன்:
![healthy heart - Cinereporters Info healthy heart](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/healthy-heart.jpg)
healthy heart
சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உண்பதனால் நமது உடலின் அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் இதய வலி போன்ற பல நோய்களும் ஏற்படலாம். சர்க்கரையை சாப்பிடுவதை நிறுத்தினால் நமது உடலின் நல்ல கொழுப்பு என அழைக்கப்படும் HDL Cholestral-ன் அளவை அதிகப்படுத்தலாம்.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
health tips
எப்போதும் ‘உம்’மென்று இருக்கிறீர்களா? இதோ சந்தோஷத்துக்கான வழிகள்..!
![Smile girl - Cinereporters Info Smile girl](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Smile-girl.jpg)
ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. சிரித்த முகம் தான் அழகு.
சிலர் எப்போதும் எதையோ பறி கொடுத்த மாதிரி முகத்தை உம்மென்று வைத்து இருப்பார்கள். முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் ஓட வேண்டுமா?
அதை எப்போதும் சுரக்கச் செய்வது இந்த ஹார்மோன்கள் தான். டோப்மைன், ஆக்சிடோசின், செரோட்டினின், எண்டோர்பின்கள் ஆகிய ஹார்மோன் தான். அதெல்லாம் இருக்கட்டும். இந்த ஹார்மோன்களைச் சுரக்கச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள்.
எல்லாம் நமக்கு எளிதான விஷயம் தான். ஆனால் தினமும் செய்வதில் தான் விஷயம் இருக்கிறது. அது தான் நம் உடலுக்கும், மனதுக்கும் நலம் பயக்கும்.
![Happy smily - Cinereporters Info Happy smily](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/1000.jpg)
Happy smily
தினமும் இது நமக்கான நாள்… இன்றைய பொழுதை இனிதே துவங்க வேண்டும். இந்த நாளில் நம்மை புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும் இறைவனுக்கு நன்றியை செலுத்துங்கள்.
அப்போது உங்கள் உடலில் டோப்மைன் அளவு அதிகரிக்கும். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடலில் எண்டோஃபிலன்களை சுரக்கச் செய்யும்.
தினசரி காலை நேர சூரிய ஒளியில் சிறிது நேரமாவது இருங்க. அது உங்கள் உடலில் செரோட்டினை சுரக்கச் செய்யும். தினமும் 15 நிமிடங்களாவது வெயிலில் நில்லுங்க.
தினசரி ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி அல்லது தியானம் செய்யுங்க. அது உங்கள் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை அதிகமாhக சுரக்கச் செய்யும்.
சத்தமாக மனம் விட்டு சிரிங்க. அது டோப்மைன், எண்டோர்பின்களைச் சுரக்க வைக்கும். உங்கள் குழந்தைகளைக் கொஞ்சுங்க. வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடுங்க. அது உங்கள் உடலில ;ஆக்சிடோசின் என்ற காதல் ஹார்மோனை சுரக்கச் செய்யும்.
இரவுப் பொழுதில் நன்றாக தூங்குங்க. அதாவது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். அது உங்களுக்கு செரட்டோனின், டோப்மைன் ஹார்மோன்களை சுரக்கச் செய்யும். இதனால் மனம் ஆரோக்கியமாகும். இதனால் உடலும் நலமாக இருக்கும்.
health tips
சர்க்கரை நோயால் அவதியா? கவலையை விடுங்க… பக்கவிளைவே இல்லாத மருந்து இதுதாங்க..!
![Sugar patient - Cinereporters Info Sugar patient](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Sugar-patient.jpg)
இன்று எங்கு பார்த்தாலும் சர்க்கரை நோயாளிகளாகத் தான் இருக்கிறார்கள். மருத்துவமனைக்குச் சென்றால் எந்த நோயாக இருந்தாலும் உங்களக்கு பிபி இருக்கா? சுகர் இருக்கா என்று தான் கேட்கிறார்கள்.
அதனால் சர்க்கரை நோய் இருந்தால் அசட்டையாக இருந்து விடாதீர்கள். அதன் ஆரம்பத்தில் இருந்தே மருந்து சாப்பிட்டு வாங்க. அதுவும் நாட்டு மருந்தாக இருந்தால் மிக மிக நல்லது. கொஞ்சம் குணமாக நாளானாலும், பக்கவிளைவு இல்லாம பூரணமா குணமாகிவிடலாம்.
சர்க்கரை நோய்க்கு மருந்தாக உள்ள ஒரு நாட்டு மருந்தின் பெயர் தேன் காய். இது நாட்டு மருந்து கடைகள் மற்றும் ஆன்லைனில் இயற்கை அங்காடிகளில் கிடைக்கும்.
பெயரைக் கேட்டதும் இனிப்பாக இருக்கும் என்றால் அது தான் தவறு. இது பாகற்காயைவிட கடுமையான கசப்பாக இருக்கும். இதை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அதற்கு மேலே ஒரு ஓடு இருக்கும். அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
இந்த தேன்காயை காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். அதை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது அதை நுணுக்கி தண்ணீரில் கலந்தும் பருகலாம். இதை தொடர்ந்து 10 நாட்கள் மட்டும் சாப்பிட்டால் போதும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டாயம் குறையும். இதை சாப்பிட்டாலே போதும். நீங்கள் மற்ற எந்த உணவு கட்டுப்பாடோ எடுக்க தேவையில்லை.தேன் காய் கிடைக்கவில்லை என்றால், தேன் கனி வில்லை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
அது சிறிய உலர் திராட்சைபோல் இருக்கும். அதை காலை வெறும் வயிற்றிலும், இரவு உறங்கச்செல்லும் முன்னும் எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும்.
![Thenkai - Cinereporters Info Thenkai](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Thenkai.jpg)
Thenkais
நீங்கள் சர்க்கரை வழக்கமாக மாத்திரை, மருந்துகள் அல்லது ஊசிகள் எடுத்துக்கொள்பவர்கள் என்றால், தேன் காய்களை சாப்பிட்ட உடனே அவற்றை நிறுத்த வேண்டாம். இதை சாப்பிட்டு பலன் கிடைக்கிறதா என்று பாருங்கள். பின்னர் படிப்படியாக மாத்திரைகள் எடுப்பதை குறைத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் மருத்துவரின் அறிவுரையின்படி மருந்தை நிறுத்துங்கள்.
இது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது என்பதால், பக்கவிளைவுகள் எதுவும் கொடுக்காது. உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கும்.
சர்க்கரை ஆரம்பத்தில் உள்ளவர்கள் மாத்திரை, மருந்துகளின்றி இதை எடுத்துக்கொண்டாலே உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் நோய் முற்றிய நிலையில் இருந்தால் தகுந்த மருத்துவரை நாடுவதே நலம்.
health tips
இதை மட்டும் செஞ்சா போதும். ஒட்டுமொத்த நோய்களும் குணமாகும்..!
![Head Massage - Cinereporters Info Head Massage](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Head-Massage.jpg)
‘எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம்’ என்பார்கள். அப்படித் தான் நம் உடலில் தலை மிகவும் முக்கியமான உறுப்பு. இங்கு ஒரு சின்ன வியாதி வந்தாலும் உடலே சோர்வடைந்து விடும். நம் உடலின் ஐம்புலன்களும் அங்கு தான் உள்ளது.
அந்த வகையில் தலையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் அதனால் தான் இன்றும் கூட காமெடியாக மண்ட பத்திரம்னு சொல்வாங்க. தலையை எப்படி பராமரிக்க வேண்டும் என்று பார்க்கலாமா…
நம் தலையில் 25 வர்மப் புள்ளிகள் இருக்கிறதாம். அது எங்கெங்கே இருக்கு என்று நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டாம். உங்கள் கைவிரல்களால் அவ்வப்போது தலையைச் சுற்றிலும் மசாஜ் செய்து கொண்டு இருந்தால் போதும். அது அந்தந்த புள்ளிகளைப் போய் கண்டிப்பாக டச் பண்ணி விடும். இதை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்யலாம்.
ஒரு எளிமையான பயிற்சி தான். இதனால் உங்களுக்குக் கிடைக்கப் போகும் பலன்களைப் பாருங்க.
தலையில் உள்ள 25 வர்மபுள்ளிகளையும் இயக்குவதால் பின்வரும் பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன.
மூளை சுறுசுறுப்பாகிறது. நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டச் செய்கிறது. தலைவலி, ஒற்றைத்தலைவலி, பின் மண்டை தலைவலி நீங்கும். மன அழுத்தம், தூக்கமின்மை, மூக்கடைப்பு, கண்நோய்கள் குணமாகும்.
![Eyes - Cinereporters Info Eyes](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Eye.jpg)
Eyes
ஆண்மை குறைவு, கருப்பை நோய்கள் நீங்கும். குறட்டை, பீனிசம் போகும். கழுத்து எலும்புகளுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். தலைநடுக்கத்தைப் போக்கி விடும். மனநோய் நீங்கும். பிட்யூட்டரி செயல்பாடு குறைகள் ஆகியவற்றை நீக்கும். தலை சுற்றுதல் நிற்கும்.
கண்பார்வைத் திறன் அதிகரிக்கும். கண் நரம்புகளுக்கு ஆற்றல் கிடைக்கும். கண்பார்வையை ஒழுங்கு செய்யும். கண் அழுத்த நோய் குணமாகும். நாக்குக்கு அதன் சுவையை உணர்த்தும். மூக்குக்கு அதன் மணத்தை உணரச் செய்யும்.
அதே போல வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும். உடல் சோர்வைப் போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தலை சார்ந்த மயக்க உணர்வைப் போக்கும். முகவாதம், பக்கவாதம் நீங்கும். தொடு உணர்வை உண்டாக்கும். மூளையின் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
திக்குவாய் குணமாகும். உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டும். தொண்டைக்கட்டு, இருமல் ஆகியவை குணமாகும்.
health tips
பிராண முத்ராவை செய்தால் இவ்வளவு பலன்களா?
![Prana Muthra - Cinereporters Info Prana Muthra](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Prana-Muthra-1.jpg)
நம் உடலினை உறுதிப்படுத்த நம் முன்னோர்கள் பல எளிய வழிகளை நமக்கு சொல்லித் தந்து சென்றுள்ளார்கள். அவ்வழியில் நடந்தாலே போதும். நோயற்ற வாழ்வை வாழ்ந்து விடலாம். அப்படி அவர்கள் சொன்ன ஒரு வழி தான் யோகாசனம்.
அந்த யோகாவில் பிராண முத்ரா என்று ஒன்று உள்ளது. இது ஒரு அற்புதமான ஆற்றலைத் தரும் முத்திரை. கை விரல்களைப் படத்தில் காட்டியது போல செய்தால் பொதும். நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. வாங்க என்னன்னு பார்ப்போம்.
![Prana Muthra2 - Cinereporters Info Prana Muthra2](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Prana-Muthra2.jpg)
Prana Muthra2
பிராண முத்ராவை சரிவரச் செய்தால் நம் உடலுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. என்னென்ன பலன்கள் உண்டாகின்றன என பார்ப்போமா…
இந்த முத்திரை பயிற்சியானது வாத, பித்த, கபத்தை சமநிலைப்படுத்தும்.
நரம்பியல் கோளாறு, உடல் பருமன், ரத்த அழுத்தம், தைராய்டு ஆகியவற்றை ஒரே சீராகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும்.
இந்த முத்திரை செய்யப்படும் போது நினைவாற்றல் அதிகரிக்கும். சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை கட்டுக்குள் கொண்டு வர இந்த முத்ரா பெரிதும் உதவுகிறது.
உடலுக்கும், மனதுக்கும் ஒப்பற்ற ஆற்றலையும் இது தருகிறது.
health tips
தக்காளி விலை எகிறுது..மெக்டொனால்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..அட அதுக்காக இப்படியா பண்ணுவாங்க..
![mecdonald foods - Cinereporters Info mecdonald foods](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/07/mecdonald-foods.jpg)
இந்த வெயில் காலத்தில் தக்காளி விலை அனைத்து மாநிலங்களிலும் வானளவிற்கு உயர்ந்து வருகிறது. உத்திரகாண்ட் மாநிலத்தில் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.200க்கு விற்கப்படுகிறது. இன்னும் சில மாநிலங்களில் ரூ.250க்கும் கூட விற்பனையாகிறது. தக்காளி மட்டுமல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையுமே அதிகமாகத்தான் செய்கிறது என்றுதான் கூற வேண்டும்.
![tomato price hike - Cinereporters Info tomato price hike](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/07/tomato-price-hike.jpg)
tomato price hike
இதனால் அனைத்து சாம்னிய மக்களும் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாகவே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காய்கறியின் விலை அதிகமாகவே இருக்கும். இதற்கு காரணம் மழைக்காலங்களில் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் அதிக நேரத்திற்கு புத்துணர்ச்சியாக இருக்க முடியாததே காரணமாகும் அல்லது இவைகளை தொலை தூரங்களில் இருந்து கொண்டு வருவதும் காரணமாக அமையலாம்.
இவ்வாறு தக்காளி விலை ஏற்றத்தினால் பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு தங்களின் உணவில் தற்போது தக்காளியை சேர்ப்பதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. தக்காளி விலை சாமானிய மனிதனின் பொருளாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஹோட்டல்கள் மற்றும் பெரிய ரெஸ்டாரண்ட்களையும் பாதிக்கிறது என்றுதான் கூறவேண்டும். இதன் காரணமாகவே மெக்டொனால்ட் நிறுவனம் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது. இதனை பற்றி அந்நிறுவனம் அளித்த தகவலின்படி தரமான தக்காளி கிடைக்காமல் போவதாலும் அது வாடிக்கையாளர்களின் உணவு தரத்தினை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதற்காவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
![tomato reaches sky price - Cinereporters Info tomato reaches sky price](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/07/tomato-reaches-sky-price.jpg)
tomato reaches sky price
தக்காளியை எவ்வாறு நீண்ட நாட்களுக்கு வைத்து கொள்வது?:
நாம் தக்காளியை தேர்வி செய்து வாங்கும் பொழுது நல்ல பழுத்த பழங்களாய் வாங்காமல் காய் தக்காளியை வாங்குவதனால் அது நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைக்க முடியும். மேலும் தக்காளியின் மேல் உள்ள காம்பினை நீக்காமல் வைத்திருந்தாலும் நாம் இவைகளை அழுக விடாமல் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.
-
Cricket2 days ago
கோப்பையோடு விடைபெற்ற விராட் கோலி – ரோஹித் ஷர்மா!
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி.. பி.சி.சி.ஐ. அதிரடி
-
Cricket15 hours ago
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக்… வெளியான ஆச்சரிய அறிவிப்பு..
-
tech news1 day ago
இனி பேட்டரி மாற்ற சிரமம் வேண்டாம்.. ஐபோனில் அறிமுகமாகும் புது வசதி
-
tech news1 day ago
போக்கோ போனுக்கு ரூ. 5,000 விலை குறைப்பு – அமேசான் அறிவிப்பு
-
latest news12 hours ago
முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டது மாநில கல்வி கொள்கை… இதற்கெல்லாம் இனி தடா தான்!…
-
Cricket1 day ago
கோலி, ரோகித் வரிசையில் ஜடேஜா.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி – ஓ.டி.டி. வியூஸ் இத்தனை கோடிகளா?